உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முறைகேடு குற்ற சதியில் முக்கிய பங்கு வகிக்கும் கெஜ்ரிவால்: அமலாக்கத்துறை வாதம்

முறைகேடு குற்ற சதியில் முக்கிய பங்கு வகிக்கும் கெஜ்ரிவால்: அமலாக்கத்துறை வாதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மதுபான கொள்கை முறைகேடு குற்ற சதியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முக்கிய பங்கு வகிப்பதாக டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வாதிட்டது.மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் நேற்று (மார்ச் 21) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது கெஜ்ரிவாலை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை கோரியது. இது தொடர்பாக விசாரணையில் அமலாக்கத்துறை சார்பில் வாதிட்டதாவது: மதுபான கொள்கை முறைகேட்டில் ரூ.100 கோடி ஈட்டப்பட்டதுடன், லஞ்சம் அளித்தவர்களிடம் இருந்து லாபத்தையும் கேட்டு பெற்றுள்ளனர். கோவா தேர்தலுக்கு ஹவாலா வழியாக நான்கு வழிகளில் பணம் சென்றுள்ளது. முறைகேடாக ஈட்டிய பணம் சென்னையில் இருந்து டில்லிக்கு வந்துள்ளது; பின்னர் கோவாவுக்கு சென்றுள்ளது. மதுபான கொள்கை முறைகேடு குற்ற சதியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முக்கிய பங்கு வகிக்கிறார். எல்லா நேரங்களிலும் அப்போதைய துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உடன் கெஜ்ரிவால் தொடர்பில் இருந்துள்ளார். தொலைபேசி உரையாடல்களின் ஆதாரங்கள் சிக்கி உள்ளன. இவ்வாறு அமலாக்கத்துறை வாதிட்டது.

நாட்டிற்காக...

நீதிமன்றத்திற்கு அமலாக்கத்துறையினர் அழைத்து வந்த போது நிருபர்களிடம் கெஜ்ரிவால் பேசுகையில், எனது வாழ்க்கையை நாட்டிற்காக அர்ப்பணித்து உள்ளேன். சிறையில் இருந்தாலும் நாட்டிற்காக பணியாற்றுவேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Jai
மார் 22, 2024 22:12

தமிழ்நாட்டில் மது அலைகளை நடத்தும் ஜெகத்ரட்சகன், டி ஆர் பாலு எந்த விதத்திலும் டாஸ்மார்க் சப்ளை செய்வதில் ஊழல் செய்யவில்லையா? மிடாஸ்ஸையும் சேர்த்துதான்


Jay
மார் 22, 2024 17:51

தைரியமாக வழக்கை எதிர்கொள்ளுங்கள் கேஜ்ரிவால் குற்றம் நிரூபிக்கப்பட்டால் எப்படியும் ஜெயிலுக்கெல்லாம் போகப் போவதில்லை தமிழ்நாட்டு உயர் கல்வித் துறை அமைச்சரின் தீர்ப்பை காண்பித்து மீண்டும் முதல்வர் ஆக முடியும், பிறுகு என்ன கவலை?


DVRR
மார் 22, 2024 16:09

அப்போ திருட்டு திராவிடத்திற்கும் தொடர்பு???அப்படித்தானே


S S
மார் 22, 2024 15:50

அமலாக்கத்துறை இதே வேகத்தினை தேர்தல் பத்திர விவகாரத்தில் காண்பிக்குமா?


ஆரூர் ரங்
மார் 22, 2024 19:03

காங்கிரசின் அதிக பட்ச கொடையாளர் ஸ்டெர்லைட்? வேதாந்தா வை விசாரிக்கலாம்.


Ayen
மார் 22, 2024 19:19

தனி நபர் செய்யும் ஊழளை அமலுக்கு துரை விசாரனைக்கு எடுத்து கிட்ட தட்ட ஒரு வருட காலம் ஆகி ஏழ முறை சம்மனை நிராகரித்த கேஜ்ரிவாலின் வழக்கை ஏப்பம் துரிதமாக விசாரிக்கிறது என்று குற முடியும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். பாண்டு விவகாரம் ஒரு வாரமாக தான் பேசப்படுகிறது அமலாக்கத்துறை அதை பற்றி தீர விசாரித்து விசாரனைக்கு எடுக்க சில மாதங்கள் ஆகும்.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை