உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேரளாவில் கொட்டும் கனமழை: 7 மாவட்ட பள்ளிகள், கல்லூரிகள் நாளை விடுமுறை

கேரளாவில் கொட்டும் கனமழை: 7 மாவட்ட பள்ளிகள், கல்லூரிகள் நாளை விடுமுறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்;கேரளாவில் கனமழை அறிவிப்பை அடுத்து, நாளை (மே 26) 7 மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.கேரளாவில் ஜூன் 1ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கிவிடும். ஆனால் இம்முறை 16 ஆண்டுகள் கழித்து, முன் கூட்டியே நேற்று பருவமழை தொடங்கி இருக்கிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6rt4bm5z&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=016 ஆண்டுகளுக்கு பின்னர் ஒரு வாரம் முன்னதாகவே பருவமழை ஆரம்பித்து இருக்க, கேரளாவில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது.தொடர் மழை எதிரொலியாக பல்வேறு மாவட்டங்களுக்கு முன் எச்சரிக்கையாக பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன. இந் நிலையில், அதி கனமழை எதிர்பார்க்கப்படுவதால் கேரளாவில் 7 மாவட்டங்களில் உள்ள கல்வி நிலையங்களுக்கு நாளை (மே 26) விடுமுறை விடப்பட்டு உள்ளது.அதற்கான அறிவிப்பை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் வெளியிட்டு உள்ளனர். நாளை கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ள மாவட்டங்களின் விவரம் வருமாறு;காசர்கோடுகண்ணூர் வயநாடு கோழிக்கோடு திருச்சூர் எர்ணாகுளம் இடுக்கி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை