உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இது எல்லாம் 20 வருடம் தாமதம்; இடதுசாரி கட்சியை விமர்சித்த காங்., எம்.பி., சசி தரூர்!

இது எல்லாம் 20 வருடம் தாமதம்; இடதுசாரி கட்சியை விமர்சித்த காங்., எம்.பி., சசி தரூர்!

திருவனந்தபுரம்: தனியார் பல்கலைக்கழகங்கள் திறக்க சட்டசபையில் மசோதா நிறை வேற்றியதை காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் வரவேற்றுள்ளார். இந்த முடிவு எடுக்க 15 முதல் 20 ஆண்டுகள் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று சசி தரூர் கூறியுள்ளார்.கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாய முன்னணி ஆட்சி செய்கிறது. நாட்டின் பிற மாநிலங்களை போல், இங்கும் தனியார் பல்கலைக்கழகங்கள் திறக்க வகை செய்யும் அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக அனுமதி வழங்கும் வகையில் தனியார் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. பொதுவாக அனைத்து துறைகளிலும் தனியார் மயமாக்கலை கடுமையாக எதிர்க்கும் கம்யூனிஸ்ட் ஆட்சியில், தனியார் பல்கலைக்கழகங்கள் திறக்க அனுமதி தரும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது பேசு பொருள் ஆனது. பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்ட பின், குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேறியது.இது குறித்து, காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் கூறியதாவது: கேரளத்தின் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசாங்கம் இறுதியாக சரியானதைச் செய்துள்ளது. இந்த முடிவு எடுக்க 15 முதல் 20 ஆண்டுகள் தாமதமாக ஆகி உள்ளது. இது பொதுவாக 19ம் நூற்றாண்டின் சித்தாந்தத்தில் நங்கூரமிட்டவர்களுக்கு பொருந்தும். கணினிகள் முதன் முதலில் இந்தியாவிற்கு வந்தபோது, ​​கம்யூனிஸ்ட் கட்சியினர் பொதுத்துறை அலுவலகங்களுக்குள் நுழைந்து அவற்றை அடித்து நொறுக்கினர் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். இந்தியாவில் மொபைல் போன்கள் அறிமுகப்படுத்தப்படுவதை எதிர்த்த ஒரே கட்சிகளும் கம்யூனிஸ்ட் கட்சிகள்தான். அவர்கள் ஒரு நாள் இறுதியாக 21ம் நூற்றாண்டில் நுழைவார்கள் என்று நான் நம்புகிறேன். ஆனால் அது 22ம் நூற்றாண்டில் கூட நடக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

A1Suresh
மார் 26, 2025 14:54

மோடிஜி ஆட்சிக்கு வந்தால் நாடு 20 ஆண்டுகள் பின்தங்கிவிடும் என்று 2016 ஆம் ஆண்டு ஸ்டாலின் பேசினார். இப்பொழுது உண்மை வெளிவந்து விட்டது. மேலும் பாரத நாடு உலகில் 3 ஆவது பெரிய பொருளாதார வல்லரசாகும் என பல வெளிநாட்டு வங்கி நிறுவனங்கள் தொடர்ந்து கூறிவருகின்றன. இன்னும் 6 ஆண்டுகள் சுடாலின் ஆட்சி செய்தால் தமிழகமும் 20 ஆண்டுகள் பின்தங்கலாம் என்பதே உண்மை


அசோகன்
மார் 26, 2025 13:00

கொஞ்சநாளாவே கூவுதே... பிஜேபி யில் சேர்க்கக்கூடாது


KRISHNAN R
மார் 26, 2025 11:26

... பிற கட்சிகள் போன்றே இந்த சித்தாந்திகள்..அனைத்திலும்.... "ஊறிய வர்கள்"...


M Ramachandran
மார் 26, 2025 11:21

ஆஹா அங்கேயும் திராவிட மாடல். கைய்யரிப்பு தீர நல்ல வழி.


sankar
மார் 26, 2025 11:14

ஆதார் உபயோகத்தை எதிர்த்த அறிவாளிகள்


ஆரூர் ரங்
மார் 26, 2025 11:10

உங்க காங்கிரசும் ரஷ்யா சீனாவைக் காப்பியடித்து உருப்படாத சோசலிசம் பேசி 1991 வரை நாட்டை ஏழ்மையில் ஆழ்த்தியது. மொபட், சைக்கிள், கடிகாரம் கூட அரசே உற்பத்தி செய்து ஏழைகளின் வரிப்பணத்தை வீணடித்தது. தனியாருக்கு மட்டும் ஆயிரம் கட்டுப்பாடுகள் விதித்தது. பின்னர் கடன்கொடுத்த உலக வங்கியே தனது ஆளான மன்மோகன் அவர்களை பிரதமராக்கி தனியார்மயத்தை புகுத்தி நேரு பிராண்ட் சோசியலிசத்தை குப்பைக்குள் போட்டது மறக்குமா?


Srinivasan Krishnamoorthy
மார் 26, 2025 13:06

Narasimha Rao was PM when India liberated from Government controls. Manmohan singh was FM. We need give credit to Narasimha Rao for all the liberalized india got in terms of development and growth stability.


Oru Indiyan
மார் 26, 2025 11:02

சரி. வங்கிகள் கணினிமயமாவதை நாடு முழுவதும் எதிர்த்த ஒரே காமெடி கட்சி இந்த கட்சிகள் தான்.


Suppan
மார் 26, 2025 14:38

அய்யா அப்பொழுது நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு சில நாட்களுக்கே போதுமானதாக இருந்தது. வறட்டு சோஷலிசம் கவைக்கு ஆகாது. தாராள மயக் கொள்கையை அமல்படுத்தினால் தான் நாடு முழுகுவதிலிருந்து தப்பிக்கும் என்ற நிலை. வேறு வழி இன்றி மன்மோகன் சிங்கின் ஆதரவுடன் நரசிம்மராவ் துணிச்சலாக முடிவெடுத்தார். சோனியா இதை எதிர்பார்க்கவில்லை. இருவருக்கும் பிணக்கு ஏற்பட்டது. நரசிம்மராவ் பொம்மையாக இருக்க சம்மதிக்கவில்லை.


Raj
மார் 26, 2025 10:48

சபாஷ் சூப்பர்


अप्पावी
மார் 26, 2025 10:46

அறிவைத் தொட்டகையால் கம்யூனிஸ்ட்களை தொட முடியாது. செல்போன் வந்த போது எதிர்த்தவர்கள் இன்னைக்கு செல்போனும் கையுமா அலைவார்கள். தாங்களும் உருப்பட நாட்டார்கள். அடுத் தவனுக்கும் முட்டுக்கட்டை போடுவார்கள்


SANKAR
மார் 26, 2025 10:45

left govt not that bad.private buses more than govt buses even in major towns for decades.


சமீபத்திய செய்தி