உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வக்பு சட்ட திருத்தத்தை எம்.பி.,க்கள் ஆதரிக்கணும்: பிஷப் கூட்டமைப்பு வேண்டுகோள்

வக்பு சட்ட திருத்தத்தை எம்.பி.,க்கள் ஆதரிக்கணும்: பிஷப் கூட்டமைப்பு வேண்டுகோள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு அனைத்து கட்சிகள் மற்றும் எம்.பி.,க்கள் ஆதரவு தர வேண்டும் என்று இந்திய கத்தோலிக்க பிஷப் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. வக்பு நிர்வாகத்தில் சீர்திருத்தம் செய்யும் நோக்கத்துடன் மத்திய அரசு வக்பு திருத்த சட்டம் கொண்டு வந்துள்ளது. இதற்கு தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.இந்நிலையில், டில்லியில் உள்ள கத்தோலிக்க பிஷப் கவுன்சிலானது மத்திய அரசின் வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து உள்ளது. அரசியல் கட்சிகள், அனைத்து எம்.பி.க்கள் சட்ட திருத்தத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து கத்தோலிக்க பிஷப் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளதாவது; அரசியலமைப்பு சட்டத்தின்படி வக்பு வாரிய சட்டத் திருத்தத்தில் சீரற்ற சில அம்சங்கள் இருக்கிறது என்பது யதார்த்தம். கேரளாவில் முனம்பாம் என்ற பகுதியில் உள்ள 600 குடும்பத்தினரின் மூதாதையர்களின் சொத்துகளை வக்புக்கு சொந்தமான நிலம் என்று கேரள வக்பு வாரியம் எடுத்துக் கொண்டது.கடந்த 3 ஆண்டுகளாக இந்த விவகாரமானது சிக்கலான சட்ட பிரச்னையாக உருவெடுத்துள்ளது. வக்பு சட்டத்திருத்தமே இந்த பிரச்னைக்கு தீர்வைத் தரும். எனவே இந்த திருத்தத்திற்கு மக்கள் பிரதிநிதிகள் ஆதரவு தர வேண்டும். பார்லி.யில் இந்த சட்டத்திருத்தம் கொண்டு வரும் போது அனைத்து அரசியல் கட்சிகளும், அவர்களின் பிரதிநிதிகளும் ஆதரவை அளிக்க வேண்டும். முனம்பாம் பகுதி மக்களின் நிலங்கள் அவர்களுக்கே திருப்பி அளிக்கப்பட வேண்டும். இந்திய அரசியலமைப்பின் கொள்கைகளுக்கு முரணான எந்தவொரு சட்டங்களும் திருத்தப்பட வேண்டும். ஆனால், அதே நேரத்தில் அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்டு உள்ள சிறுபான்மையின மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வக்பு சட்டத்திருத்தத்துக்கு, அஜ்மீர் தர்காவின் தலைவர் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

vijai hindu
ஏப் 01, 2025 12:57

விடியல் ஆட்சி காலத்தில் அழிவு


Oviya vijay
ஏப் 01, 2025 08:11

ஜஸ்ட் கோ வாலா புறம், cit காலனி , வாலையம், sithranhan சாலை இது எல்லாமே வக்குபு வாரியம்துக்கு சொந்தம் அப்டின்னு ஒரு தீர்மானத்தை போட்டால் விடியல் ஆதரவு தருமா?


Kasimani Baskaran
ஏப் 01, 2025 04:05

நல்லது. ஆனால் விடியலார் அதை செய்ய மாட்டார்.


Kumar Kumzi
ஏப் 01, 2025 00:29

வந்தேறி மூர்க்கன் வரும் போது சொத்து கொண்டு வந்தானா ஹாஹாஹா இந்தியா இந்தியர்களின் சொத்து வந்தேறிகளுக்கல்ல


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
மார் 31, 2025 21:51

விடியல் சார் வாழ்க


lana
மார் 31, 2025 21:33

என்னடா இது விடியல் க்கு வந்த சோதனை. ஒரு பிச்சை போட்ட குரூப் ஆதரவு. இன்னொரு பிச்சை போட்ட குரூப் எதிர்ப்பு. யார் அதிகம் பிச்சை போடுகிறார்கள் ஓ அவர்கள் பக்கம் ஆதரவு. இல்ல எனில் ஒரு நாடகம் போட்டு இரு குரூப் ஐ ஏமாற்ற வேண்டியது தான்


RAJ
மார் 31, 2025 21:28

எங்க நாட்ல யாருக்குடா சொத்து....


Appa V
மார் 31, 2025 21:28

அதிக நில உரிமையாளர்கள் வரிசையில் முதலில் ராணுவம் ரெண்டாவது ரெயில்வே நிர்வாகம் மூன்றாவது வக்ப் போர்டு ...


Rajan A
மார் 31, 2025 22:14

முதல் இரண்டும் மக்களுக்கு பயனுள்ளது. மூன்றாவது மக்களை சுரண்டுவது


GMM
மார் 31, 2025 21:27

இந்திய அரசியல் சாசன கொள்கைக்கு எதிரானது தான் சிறுபான்மை அந்தஸ்து. சீனா கம்யூனிஸ்ட் கொள்கையில் பிடிவாதமாக இருக்க காரணம் மேற்கத்திய நாடுகள் ஆதிக்கத்திற்கு ஜனநாயக போர்வையில் உதவும் மத சார்பின்மை. மனித உரிமை. நாடு பிரிவினைக்கு முன் வகுத்த வக்பு சட்டம் செல்லுமா. பிஷப் கூட்டமைப்பு கோரிக்கை கிருத்துவ நில அபகரிப்பை தெரிய படுத்துகிறது.? ஆங்கிலேய இஸ்லாமியர் ஆட்சியில் இந்துக்கள் மீண்டும் கட்டணம் செலுத்தி, நிலம் கிரயம் செய்ய வேண்டும். வரி செலுத்த வேண்டும். உடல் வருத்தி உழைத்து தான் வாழ வேண்டும். மற்றும் பல சிறப்பு கொடுமைகள். மத்திய அரசு எந்த திருத்தமும் செய்ய வேண்டாம். முதலில் தேர்தலை சீர் செய்ய வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை