உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஓட்டு இயந்திரம் வேண்டாம்; சீட்டுதான் வேணும் என்கிறார் கார்கே!

ஓட்டு இயந்திரம் வேண்டாம்; சீட்டுதான் வேணும் என்கிறார் கார்கே!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மின்னணு ஓட்டு இயந்திரங்களுக்கு (இ.வி.எம்) பதிலாக மீண்டும் ஓட்டுச்சீட்டு முறைக்கு திரும்ப வேண்டும் என காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.டில்லியில் இன்று அரசியல் அமைப்பு தின நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் கார்கே மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சியில் கார்கே பேசியதாவது:நான் இ.வி.எம்., குறித்து பல்வேறு பொதுநிகழ்ச்சிகளில் பலமுறை கூறியுள்ளேன். சமீபத்தில் அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க், மின்னணு ஓட்டு இயந்திரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார். அதில் மேற்கு நாடுகள், அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் கூட இ.வி.எம்., பயன்படுத்தவில்லை என்றார்.பா.ஜ., மக்களை பிளவுபடுத்தும் கொள்கைகளை சொல்லி வருகிறது. ஆனால் நாட்டிற்கு உண்மையிலேயே ஒருங்கிணைப்புதான் தேவை. ராகுல், ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை பாதுகாக்க ஒற்றுமை பயணம் மேற்கொண்டார். அதில் நாட்டில் உள்ள அனைத்து சமூக மக்களும் அவருடன் இணைந்தனர். அரசியல் அமைப்பு எளிதாக உருவாக்கப்பட்டது அல்ல. காங்கிரஸ் கட்சி அதற்கு கடுமையாக பணியாற்றி உள்ளது. அரசியல் அமைப்பில் அம்பேத்கருக்கு மிக முக்கிய பங்கு உண்டு.பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு, மைனாரிட்டி அரசு. பிரதமர் ஒரு காலில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உதவியுடனும், மற்றொரு காலில் பீஹாரின் நிதிஷ்குமார் உதவியுடனும் பயன்படுத்தி நடக்கிறார்.இவ்வாறு கார்கே பேசினார்.மின்னணு ஓட்டு இயந்திரத்துக்கு பதில், ஓட்டுச்சீட்டு முறை கொண்டு வர வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை, இன்று காலை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 45 )

பேசும் தமிழன்
நவ 27, 2024 18:50

இண்டி கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்ற இடங்களில் எல்லாம் EVM செயல்பாடு சரி....ஆளுங்கட்சி ஆட்கள் வெற்றி பெற்ற இடங்களில் எல்லாம் EVM செயல்பாடு சரியில்லை ....இப்படிக்கு கார்கே மற்றும் பப்பு


kulandai kannan
நவ 27, 2024 14:05

நீ வான்னா வருவதற்கும், வேண்டாம் என்றால் போவதற்கும் EVM என்ன .... ...??


பேசும் தமிழன்
நவ 27, 2024 08:06

எலன் மஸ்க் நேற்று தான் சொன்னார்.... இந்துயாவில் 80 கோடி வாக்குகளை ஒரே நாளில் எண்ணி முடித்து விட்டார்கள். ஆனால் அமெரிக்காவில் ஒரு மாகாணத்தின் 1.50 கோடி வாக்குகளை இன்னும் எண்ணி கொண்டு இருக்கிறார்கள் என்று... தோல்விக்கு காரணம் தேட கூடாது.... உங்கள் கட்சி மக்கள் நம்பிக்கையை இழந்து ரொம்ப நாட்கள் ஆகி விட்டது.....எப்போது பார்த்தாலும் தேச விரோத கும்பலுக்கு ஆதரவான பேச்சு.... பிறகு எப்படி மக்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை வரும் ???


பேசும் தமிழன்
நவ 27, 2024 07:59

இந்திய மக்கள் கான் கிராஸ் கட்சியை சேர்ந்த உங்களை விரட்டி அடிக்க தான் போகிறார்கள்.. அதை எப்படி அடித்தால் என்ன? தீவிரவாதிகளுக்கு ஆதரவான நிலைப்பாடு மூலம் நாட்டு மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டீர்கள்.. இனிமேல் உங்களுக்கு இந்தியாவில் வாய்பில்லை.. வேண்டுமானால் உங்கள் அபிமான பாகிஸ்தான் மற்றும் இத்தாலி நாடுகளில் முயற்சி செய்து பார்க்கலாம்.. அங்கே உங்களுக்கு ஆதரவளிக்கும் ஆட்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.


Rajasekar Jayaraman
நவ 27, 2024 07:14

உன்னோட கட்சி தேர்தலுக்கு எதையாவது வைத்துகொள்.


vadivelu
நவ 27, 2024 07:03

சீட்டில் அழியும் மையை உபயோகித்து கோல்மால் செய்த கட்சி என்ற பெயர் பெற்றதால்தான் மெஷின் வந்தது.


நிக்கோல்தாம்சன்
நவ 27, 2024 05:06

பெண்ணின துரோகி


RAJ
நவ 27, 2024 01:03

எலன் மஸ்க் ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் சொன்னார்.... இன்னுமா நீங்க திருந்தல ... கரடி காறி துப்பினாலும் திருந்தமாட்டீங்க போல இருக்கே..


nb
நவ 27, 2024 00:28

அப்ப 99 சீட்டும் EVM மெஷின் கோளாரால ஜெயித்ததா


jgn
நவ 26, 2024 23:41

உங்களுக்குத் தெரியுமா? ? இந்தியாவில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஈ.வி.எம் தேர்தல் செயல்முறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளன, இது மிகவும் திறமையாகவும் வெளிப்படையாகவும் உள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 100% முட்டாள்தனமானவை என்று கருதப்படுவதற்கான சில காரணங்கள் இங்கே: 1. வலுவான பாதுகாப்பு அம்சங்கள்: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேதமடையாத சீல்கள் மற்றும் பாதுகாப்பான மென்பொருள் உட்பட பல அடுக்கு பாதுகாப்புடன் பொருத்தப்பட்டுள்ளன, வாக்குகள் துல்லியமாக பதிவு செய்யப்படுவதை உறுதி செய்கின்றன. 2. வெளிப்படைத்தன்மை: வாக்களிக்கும் செயல்முறை வெளிப்படையானது, வாக்காளர் சரிபார்க்கப்பட்ட காகித தணிக்கை தடங்கள் வி.வி.பி.ஏ.டி விருப்பத்துடன் வாக்காளர்கள் தங்கள் விருப்பத்தை சரிபார்க்க அனுமதிக்கிறது. 3. செயல்திறன்: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குகளை எண்ணுவதற்கு எடுக்கும் நேரத்தை கணிசமாகக் குறைக்கின்றன, இது விரைவாக தேர்தல் முடிவுகளுக்கு வழிவகுக்கிறது. 4. மனித பிழை குறைக்கப்பட்டது: கையால் எண்ணப்படுவதைக் குறைப்பதன் மூலம், பாரம்பரிய வாக்கு எண்ணிக்கையின் போது ஏற்படக்கூடிய பிழைகளை அகற்ற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உதவுகின்றன. 5. வழக்கமான சோதனை மற்றும் புதுப்பிப்புகள்: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன மற்றும் எந்தவொரு சாத்தியமான பாதிப்புகளையும் நிவர்த்தி செய்ய தொடர்ந்து புதுப்பிக்கப்படுகின்றன. நமது ஜனநாயக செயல்முறைகளில் தொழில்நுட்பத்தை நாம் தொடர்ந்து தழுவும்போது, நமது தேர்தல் நேர்மையை நிலைநிறுத்த வடிவமைக்கப்பட்ட அமைப்புகள் மீது நம்பிக்கை வைப்போம் ?️?


முக்கிய வீடியோ