மேலும் செய்திகள்
விண்டோஸ் மென்பொருள் கோளாறால் நாடு முழுவதும் விமான சேவைகள் முடக்கம்
2 hour(s) ago | 1
நாட்டின் சுயாட்சியை அடகு வைக்க முடியாது; காங்., எம்பி சசி தரூர்
4 hour(s) ago | 5
ராய்ப்பூர் : தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் கோஹ்லி, ருதுராஜ் ஆகியோர் அதிரடியாக விளையாடி சதமடிக்க இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 358 ரன் குவித்துள்ளது.இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தென் ஆப்ரிக்க அணி விளையாடி வருகிறது. ராஞ்சியில் நடந்த முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது கிரிக்கெட் போட்டி சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இன்று நடக்கிறது.இன்றைய போட்டியில் தென் ஆப்ரிக்க அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தது. இதன்மூலம் தொடர்ச்சியாக 20 போட்டிகளில் இந்திய அணி டாஸ் தோற்றுள்ளது. இந்திய அணியை பொறுத்தவரையில் எந்த மாற்றமும் செய்யவில்லை. ஆனால், தென் ஆப்ரிக்காகு கேப்டன் பவுமா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். அதேபோல, கேஷவ் மஹாராஜ் மற்றும் லுங்கி இங்டியும் ஆடும் லெவனில் இடம்பிடித்துள்ளனர்.முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி துவக்க வீரர்களாக வந்த ஜெயிஸ்வால்(22), ரோகித் சர்மா(14) நிலைக்கவில்லை. இதன் பிறகு ஜோடி சேர்ந்த கோஹ்லி, ருதுராஜ் கெயிக்வாட் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இந்தப் போட்டியிலும் சதம் அடித்த கோஹ்லி 102 ரன்னில் நிகிடி பந்தில் ஆட்டமிழந்தார். சிறிது நேரத்தில் ருதுராஜ் கெயிக்வாட் 105 ரன்களுக்கு அவுட்டானார். வாஷிங்டன் சுந்தர் 1 ரன்னுக்கு பெவிலியன் திரும்பினார். கேப்டன் கேஎல் ராகுலும் அதிரடி காட்டி அரைசதம் அடித்தார். இதனால், இந்திய அணியின் ரன் வேகம் குறையவில்லை. இறுதியில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 358 ரன் எடுத்தது. இதன் மூலம் தென் ஆப்ரிக்கா அணிக்கு 359 ரன் என்ற கடின இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2 hour(s) ago | 1
4 hour(s) ago | 5