உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வேலைக்கு நிலம் லஞ்ச வழக்கு : தேஜஸ்வியிடம் 8 மணி நேரம் கிடுக்கிப்பிடி

வேலைக்கு நிலம் லஞ்ச வழக்கு : தேஜஸ்வியிடம் 8 மணி நேரம் கிடுக்கிப்பிடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா : ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாகக் கூறி, குறைந்த விலைக்கு நிலத்தை லஞ்சமாக பெற்ற வழக்கில், பீஹார் முன்னாள் துணை முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி யாதவிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், 2004- 2009 வரையிலான கால கட்டத்தில், மத்தியில், காங்., தலைமையிலான ஐ.மு., கூட்டணி அரசில், ரயில்வே அமைச்சராக இருந்தார். அப்போது ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி, அதற்கு பிரதிபலனாக குறைந்த விலைக்கு நிலத்தை லஞ்சமாக பெற்றதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் நடந்த சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக, லாலு பிரசாத் யாதவ், அவரது மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் மீது, அமலாக்கத் துறை தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேற்று முன்தினம், பாட்னாவில் உள்ளஅமலாக்கத் துறை அலுவலகத்தில், லாலு பிரசாத் யாதவ் ஆஜரானார். அவரிடம், ஒன்பது மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்காக பாட்னாவில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில், முன்னாள் துணை முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி யாதவ் ஆஜரானார். அவரிடம் கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்டு, அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, வருமான வரித்துறை, சி.பி.ஐ., - அமலாக்கத் துறை போன்ற மத்திய விசாரணை அமைப்புகளை, மத்திய பா.ஜ., அரசு தவறாக பயன்படுத்தி வருவதாக, ராஷ்ட்ரீய ஜனதா தளம் குற்றம் சாட்டி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

sivakumar Thappali Krishnamoorthy
ஜன 31, 2024 10:19

காசுக்கு ஏற்ற படிப்பு ...காசுக்கு ஏற்ற நீதி....


Palanisamy Sekar
ஜன 31, 2024 02:04

இதெல்லாம் இந்த நாட்டின் சாபக்கேடுபோல..இந்த மோடி எதிர்ப்பாளர்கள் எல்லோருமே ஊரான் சொத்தை வளைத்துப்போடுவதிலேயே கவனம் செலுத்துகின்றார்கள்.ஆட்சியை பெறுவதே அதற்குத்தான் என்று தமிழகத்தில் மட்டும்தான் இப்படி என்றிருந்தால் எதிர்க்கட்சிகள் ஆளுகின்ற மாநிலமெல்லாம் நாறுகின்றதே. பதினைந்து ஆண்டுகள் வரை காத்திருந்து இப்போதுதான் கிடுக்குபிடி கேள்வி கேட்கின்றார்கள். விளங்கும் நாடு. பாவம் மோடிஜி கடுமையாக உழைக்கின்றார்..ஊழல் இல்லாத ஆட்சியை கொடுத்த ஒரே பிரதமர் மோடிஜி மட்டும்தான்..இந்திய சரித்திரத்தில் அப்படிப்பட்ட மோடிக்கு மக்களின் மகத்தான ஆதரவில் மக்களின் மனநிலை மாறிக்கொண்டே வருகின்றது.இனி எதிர்க்கட்சிகள் தூக்கி எறியப்படும்..


தாமரை மலர்கிறது
ஜன 31, 2024 01:35

அப்பாவை போல் புள்ள ஜெயிலுக்குள் போகபோவுது.


Ramesh Sargam
ஜன 30, 2024 23:54

வெறும் கிடிக்கிப்பிடிதான். தண்டனை எல்லாம் கிடையாது. நம் நாட்டு சட்டத்தில் ஒரு சாதாரண pickpocket போன்ற குற்றவாளிக்குத்தான் உடனே தண்டனை கிடைக்கும். பெரிய அளவில் ஊரை கொள்ளையடிப்பவர்கள், குற்றம் செய்பவர்களுக்கு வெறும் கிடிக்கிப்பிடிதான். வெட்கம். வேதனை. ஆகையால்தான் நாட்டில் pickpocket போன்ற குற்றங்கள் குறைந்து, பெரிய அளவு குற்றங்கள் அதிகரித்துள்ளன. சட்டங்கள் மாறவேண்டும். நீதித்துறை, நீதி, சட்டம் எல்லோருக்கும் ஒன்று என்று செயல் ஆற்றவேண்டும்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை