உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஊழலை மறைக்கவே மொழி பிரச்னை: அமித்ஷா

ஊழலை மறைக்கவே மொழி பிரச்னை: அமித்ஷா

புதுடில்லி: '' ஊழலை மறைக்கவே மொழி பிரச்னையை எழுப்புகின்றனர்,'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய - மாநில அரசுகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. ஹிந்தி திணிக்கப்படுவதாக தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் கூற, பா.ஜ., மறுத்து வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=j0uaoe4v&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் ராஜ்யசபாவில் அமித் ஷா பேசியதாவது: மொழியின் பெயரால் அரசியல் செய்பவர்களின் திட்டம் ஒருபோதும் நிறைவேறாது. அலுவலக மொழிகள் துறையின் கீழ், இந்திய மொழிகள் பிரிவை மோடி அரசு அமைத்து உள்ளது. இந்த துறையானது தமிழ், தெலுங்கு, மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, அசாமி உள்ளிட்ட அனைத்து மொழிகளையும் மேம்படுத்துவதற்காக செயல்படும்.டிசம்பர் மாதத்திற்கு பிறகு முதல்வர்கள், அமைச்சர்கள் மற்றும் எம்.பி.,க்களுக்கு அவர்களின் மொழிகளில் கடிதம் எழுதுகிறேன். தங்களின் ஊழலை மறைப்பதற்காக மொழியின் பெயரால் அரசியல் செய்பவர்களுக்கு இதுவே எனது பதில். அவர்கள் என்ன சொல்கிறார்கள்? தென் மாநில மொழிகளை நாங்கள் எதிர்ப்பதாக சொல்கிறார்கள்? இது எப்படி சாத்தியமாகும்? நான் குஜராத்தில் இருந்து வந்துள்ளேன். நிர்மலா சீதாராமன் தமிழகத்தில் இருந்து வந்துள்ளார். எப்படி நாங்கள் அதனை எதிர்ப்போம்? நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? நாங்கள் மொழிகளுக்காக பணியாற்றி உள்ளோம். தமிழக அரசுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது என்னவென்றால், மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான பாடங்களை தமிழி்ல் மொழி பெயர்க்க உங்களுக்கு தைரியம் இல்லை. இதனை இரண்டு ஆண்டுகளாக நான் சொல்லி வருகிறேன். அதை உங்களால் செய்ய முடியாது. தமிழகத்தில் தே.ஜ., கூட்டணி ஆட்சிக்கு வரும்போது, மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை தமிழில் வழங்குவோம். மொழியின் பெயரால் விஷத்தை பரப்புபவர்களுக்கு, இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான கி.மீ., தொலைவில் உள்ள மொழியை பிடிக்கிறது. ஆனால், இந்திய மொழியை பிடிக்கவில்லை. எந்த இந்திய மொழிக்கும் ஹிந்தி போட்டி கிடையாது என்பதை நான் மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறேன். மொழியின் பெயரால் நாட்டில் ஏற்பட்டு உள்ள பிளவு போதும். இனிமேலும் அப்படி நடக்கக்கூடாது.அனைத்து இந்திய மொழிகளுக்கும் ஹிந்தி நண்பனாக உள்ளது. அனைத்து இந்திய மொழிகளும் ஹிந்தியில் இருந்து பலம் பெறுகிறது. அதேபோல், அனைத்து இந்திய மொழிகளில் இருந்தும் ஹிந்தி பலம் பெறுகிறது. இவ்வாறு அமித்ஷா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 48 )

Venkatesh
மார் 22, 2025 10:46

சார் நீங்க கண்ணாடியை பார்த்து பேசிக்கிட்டு இருக்கீங்க


கொங்கு தமிழன் பிரசாந்த்
மார் 22, 2025 04:57

பெரிய சாணக்கியன் சொன்னாங்க. கடைசில நீயும் சாதாரண சங்கி தான் போலியே!


ஜெய்ஹிந்த்புரம்
மார் 22, 2025 00:36

இந்தியை திணிக்கவே போலி ரெயிடு..


Azar Mufeen
மார் 21, 2025 22:49

சாம்பியன் டிராபில நடந்த சூதாட்டத்தை மறைக்க தானே ரெண்டு கட்சியும் மாறி மாறி நடிச்சுகிட்டுருக்கீங்க களவாணி கட்சிகள்


Minimole P C
மார் 22, 2025 08:36

Pakistan elemination from CT made some antiindians to loose mental balance.


Rajendra kumar
மார் 21, 2025 22:44

தமிழ் மாநில மக்களை முட்டாள்களாகவே வைத்து ஆட்சி செய்ய நினைக்கும் திராவிஷ திருடர் முன்னேற்றக் கழகத்தை ஒழித்துக் கட்ட வேண்டும். நம் பரந்த பாரத தேசத்தை சுற்றி வர அல்லது பக்கத்து மாநிலத்திற்கு சென்று வர அல்லது வேறு மாநிலத்தவர் இங்கு வரும் போது வழிகாட்ட மொழி அறிவு மிக அவசியம்.


venugopal s
மார் 21, 2025 22:39

வேலையில்லா திண்டாட்டம் விலைவாசி உயர்வு போன்ற பிரச்சினைகளை மறைக்க பாஜக மதப்பிரச்சினை செய்வது போலவா?


shyamnats
மார் 22, 2025 08:35

தமிழகத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாமலா வேணுகோபால் திராவிட விடியல் கட்சிக்கு முட்டு கொடுக்கிறார் ? தமிழகத்தில் ஏதோ தேனும் பாலும் ஓடி அமைதி பூங்காவாக இருப்பது போல. பெண்களுக்கு எதிராக குற்றங்களை , தினசரி அப்டேட் போட கூடிய நிலைமையில் இருப்பது கூட தெரியாமல்லா ?


Perumal Pillai
மார் 21, 2025 22:33

356 துரு பிடித்து கொண்டு இருக்கிறது .


Iyer
மார் 21, 2025 22:12

கெஜ்ரிவாலை மதுவழக்கில் உள்ளே தள்ளியது போல் தமிழ்நாட்டிலும் ஸ்டாலின் உட்பட 4-5 மந்திரிகளை உள்ளே தள்ளுங்கள். மொழி போராட்டம், தொகுதி போராட்டம் எல்லாம் தானாகவே நின்று போகும்.


மதிவதனன்
மார் 21, 2025 21:59

ஒருவேளை CAG சொன்ன 7650000000 கோடியை சொல்லுகிறாரா , இல்லை 20000 கோடி கமிஷன் அடிச்ச PM CARE பற்றி சொல்லுகிறாரா இல்ல ரபில் பற்றி சொல்லுகின்றாரா


Sivak
மார் 21, 2025 22:40

மதிவதனன் புது கொத்தடிமையா இல்ல ஆறிப்போன கஞ்சி புது பாத்திரத்துலயா?


MARUTHU PANDIAR
மார் 21, 2025 21:44

ஆளுங்கட்சி தொடர்புடைய ஆலைகளிலிருந்து டாஸ்மாக்குக்கு மொத்தம் தினமும் 2500 கோடி மது விற்பனையாம் .அப்படியென்றால் மாதம் 75,000 கோடி, ஆண்டுக்கு 9 லட்சம் கோடி . இந்த ஆ லைகள் ஆளும் கட்சிக்கு தெரியாமல் தான் செயல் படுகின்றனவா என்று கேட்கிறார்கள். மது உற்பத்தி செய்து சப்ளை செய்து கொண்டே போதையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்றும் பேசுகிறார்கள் . 9 லட்சம் கோடி ரூபாய் மதுவை விற்பதால் அரசின் ஆண்டு வருமானம் வெறும் 30,000 கோடி தானாம். மீதமெல்லாம்? தலை சுற்றுகிறது. இந்தக் கணக்கு உண்மையாகவே அப்படித்தானா ? இளம் விதவைகள் அதிகரிப்பதை பற்றி ஆளும் தரப்புக்கு கவலை இல்லையா என்று கேட்கிறார்கள் .