உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லட்டு விவகாரம்: திண்டுக்கல் நிறுவனம் மீது போலீசில் புகார்

லட்டு விவகாரம்: திண்டுக்கல் நிறுவனம் மீது போலீசில் புகார்

அமரவாதி: திருப்பதி லட்டு பிரசாத்திற்கு நெய் விநியோகம் செய்த திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி நிறுவனம் மீது திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் போலீசில் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பிரசித்தி பெற்ற திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலந்துள்ளதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறிய குற்றச்சாட்டு நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் திருப்பதி லட்டு பிரசாதத்துக்கு திண்டுக்கல் ஏ.ஆர்., டெய்ரி நிறுவனம் விநியோகம் செய்த நெய்யில் விலங்குகள் கொழுப்பு இருந்ததாக ஏற்கனவே திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக திருப்பதி தேவஸ்தான நிர்வாகி ஜெ. சியமளா ராவ் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், லட்டு பிரசாதம் தயாரிக்க திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்திடமிருந்து கடந்த ஜூன் -ஜூலை மாத இடையில் கொள்முதல் செய்யப்பட்ட நெய் மாதிரி ஆய்வுக்குப் உட்படுத்தப்பட்டதில் விலங்கு கொழுப்பு கலந்துள்ளது உறுதியாகியுள்ளதால், அந்நிறுவனம் மீது திருப்பதி டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

D.Ambujavalli
செப் 26, 2024 18:33

'எங்கும் சுற்றி ரங்கன் பக்கம் ' என்பதுபோல் மெல்ல மெல்ல நம்ம மாநிலம் இந்த பெருமையை அடைந்திருக்கிறது அடுத்து owner பெயர் வரும்போது வெட்ட வெளிச்சம் ஆகிவிடும்


kpn
செப் 26, 2024 15:09

இந்த திருப்பதிக்கு லட்டுல நெய் சேக்குற விஷயத்துல மக்கள் நல்ல முறையில் சிந்திங்க திண்டுக்கல்ல இருந்து போற நெய் வந்து இரண்டு அல்லது மூன்று அதிகபட்சம் 4% நெய்தான் இங்க இருந்து ஏற்றுமதி செய்றாங்க மத்த நெய் பூரா வேற ஸ்டேட்ல இருந்து ஏற்றுமதி ஆகுது வேற இடத்துல இருந்து வாங்குறாங்க அதான் யோசிங்க


Rasheel
செப் 26, 2024 12:09

நிறுவனம் மர்ம நபருக்கு சொந்தமானது அக்மார்க் நல்ல எண்ணெய் ரூபாய் 300 மேல் விற்கும் நிலையில், நெய் ரூபாய் 300க்கு எப்படி கிடைக்கும். ராமானுஜர், ஆதி சங்கரர் ஆகியோர் கட்டமைத்த வட வேங்கடம், இன்று அப்ரஹாமிய மற்றும் கடவுள் நம்பிக்கை இல்லாத கூட்டங்களின் கையில் இருப்பது மிக கேவலமானது.


RAMAKRISHNAN NATESAN
செப் 26, 2024 11:21

நிறுவனம் யாருக்குச் சொந்தமானது ???? சனாதனத்தை வேரறுக்க கனவு காணும் திமுகவின் புள்ளியா ???? மதம் மாற்றும் கும்பலா ???? ஹலால் / ஹராம் பேசும் கும்பலா ????


Suppan
செப் 26, 2024 10:42

"Reverse Auction" என்ற முறையில் வாங்கப்பட்டது. இதில் எவ்வளவு கோடி கைமாறியதோ ?


Sudha
செப் 26, 2024 09:54

What about other companies who have supplied 99.99% . Can TTD name all the companies or it is trying to protect some?


VENKATASUBRAMANIAN
செப் 26, 2024 07:50

ஏன் நந்தினி ஆவின் போன்ற அரசு நிறுவனங்களில் கொடுக்க வில்லை. எதன் அடிப்படையில் இந்த நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதன் உரிமையாளர் யார். இதன் முழு விவரம் பொது வெளியில் தெரிவிக்கவேண்டும்.


sridhar
செப் 26, 2024 08:41

L1 என்ற டெண்டர் முறை தான் காரணம் , அதாவது யார் மிக குறைந்த விலைக்கு சப்ளை செய்ய ஒப்புக்கொள்கிறார்களோ அவர்களுக்கு கான்ட்ராக்ட் . இது அரசாங்கத்துக்கு ஓகே . ஆனால் உலகிலேயே பணக்கார கோவில் எதற்கு தரத்திற்கு முக்கியத்துவம் தராமல் L1 முறையில் காசு கம்மி என்று தரமற்ற நெய் வாங்க வேண்டும். சிந்தனை அற்ற செயல்.


Kasimani Baskaran
செப் 26, 2024 05:20

நிறுவனம் யாருக்கு சொந்தமானது என்று பிரசுரிக்கலாமே. சந்தை விலையை விட மூன்றில் ஒரு பிங்கிலிருந்து நான்கில் ஒரு பங்கு விலைக்கு நெய் குத்தகை எடுத்து விநியோகித்து இருக்கிறார்கள். திருமலை கோவில் நிர்வாகமும் கவலைப்படாமல் வாங்கியிருக்கிறது. அதெப்படி ஒரு நிறுவனம் நட்டத்தில் வியாபாரம் செய்யும்? இல்லை 250 கோடி பெருமாளின் பக்தர்களுக்கு லட்டாக கொடுத்தே ஆகவேண்டும் என்ற வேண்டுதலா?ஆக கோவிலுக்குள் கொள்ளையர்கள் கூட்டம் அட்டகாசம் செய்து மாட்டிக்கொண்டார்கள்.


Duruvesan
செப் 26, 2024 04:38

ஏழுமலையானே, பெருமாளே, இதுல விடியல் இல்லை, ஹிந்துக்கள் என்றால் திராவிட மாடலுக்கு புடிக்காது, சனதான ஒழிப்பு என்பது தலீவர் வருங்கால முதல்வர் கூறியது இதை தானோ?


முக்கிய வீடியோ