உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மதுரை மாநகராட்சி ஊழல் வழக்கு; தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்

மதுரை மாநகராட்சி ஊழல் வழக்கு; தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்

-டில்லி சிறப்பு நிருபர்-மதுரை மாநகராட்சி சொத்து வரி ஊழல் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவில், 'மதுரை மாநகராட்சியின் சொத்து வரியில்,3,000 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்துள்ளது. ஆனால் வெறும் 200 கோடி ரூபாய் மட்டுமே ஊழல் நடந்திருப்பதாக கூறி அதை மட்டும் விசாரிக்க சிறப்பு விசாரணை குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இதில் வரிவான விசாரணை தேவை. எனவே வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும்' என, கோரிக்கை வைத்திருந்தார். மனுவை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், 'சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே இது தொடர்பான வழக்கை விசாரித்து வருவதால் நாங்கள் தலையிட விரும்பவில்லை' என, நீதிபதிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

உண்மை கசக்கும்
செப் 09, 2025 14:01

சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே இது தொடர்பான வழக்கை விசாரித்து வரும் போது, உச்ச நீதிமன்றம் ஏன் இந்த வழக்கை முதலில் எடுத்தது? வழக்கு பதிவு செய்ய எவ்வளவு பணம் கட்டினார்கள்.


VENKATASUBRAMANIAN
செப் 09, 2025 08:22

தள்ளுபடி செயவதிற்கு பதிலாக இதையும் உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பி இருக்கலாம். உண்மை தெரிந்து விடும்.


முக்கிய வீடியோ