உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எதிர்ப்புக்கு பணிந்தது மஹா., அரசு: மும்மொழி கொள்கை தீர்மானம் ரத்து

எதிர்ப்புக்கு பணிந்தது மஹா., அரசு: மும்மொழி கொள்கை தீர்மானம் ரத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மும்மொழிக் கொள்கைக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அதற்கான தீர்மானத்தை ரத்து செய்த மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், இந்த பிரச்னை குறித்து விவாதிக்க குழு ஒன்றை அமைத்துள்ளார்.மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.இங்கு, மராத்தி மற்றும் ஆங்கிலவழிக் கல்வி பள்ளிகளில், 1 முதல் 5ம் வகுப்பு வரை ஹிந்தி பொதுவான மூன்றாவது மொழியாக இருக்கும் என்றும், மூன்றாவதாக வேறு ஒரு மொழியை கற்க விரும்பினால், அதற்கு 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒப்புதல் தர வேண்டும் என்றும், திருத்தப்பட்ட அரசாணையை மாநில அரசு சமீபத்தில் வெளியிட்டது.

எதிர்க்கட்சிகள் கண்டனம்

'இது, ஹிந்தியை மறைமுகமாக திணிக்கும் முயற்சி' என, காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.ஹிந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் 5ம் தேதி, கிர்காம் சவுபாட்டியில் இருந்து தெற்கு மும்பையில் உள்ள ஆசாத் மைதானம் வரை மாபெரும் பேரணிக்கு அங்குள்ள நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே அழைப்பு விடுத்தார். 19 ஆண்டுகளாக பிரிந்திருந்த, உத்தவ் பால் தாக்கரே சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும், அவர் அழைப்பை ஏற்று இந்த போராட்டத்தில் பங்கேற்க ஒப்புக் கொண்டார்.பிற அரசியல் கட்சியினருக்கும் போராட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மராத்தி மொழி தொடர்பான பிரச்னையில் அரசுக்கு பரிந்துரைகளை வழங்கும் மொழி ஆலோசனைக் குழுவும், துவக்கப்பள்ளிகளில் ஹிந்தி உட்பட எந்த மூன்றாம் மொழியையும் மாணவர்களுக்கு கற்பிக்கக்கூடாது என்ற தீர்மானத்தை சமீபத்தில் நிறைவேற்றியது.புனேவில் நடந்த கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்து மொழி ஆலோசனைக் குழு தலைவர் லட்சுமிகாந்த் தேஷ்முக் கூறுகையில், 'கடந்த 1999ல் மராத்தி வழிப் பள்ளிகளில் துவக்க வகுப்புகளுக்கு, ஆங்கிலம் கட்டாய பாடமாக அறிமுகப்படுத்தப்பட்டது. ஏழு ஆண்டுகளுக்கு பின், ஆங்கிலவழிப் பள்ளிகளில் மராத்தி கட்டாயமாக்கப்பட்டது. இதன் விளைவாக, குழந்தைகளால் எந்த மொழியையும் சரியாக கற்றுக்கொள்ள முடியவில்லை.

குழு அமைக்க முடிவு

இப்போது, ஹிந்தி அல்லது வேறு எந்த மூன்றாம் மொழியையும், ஆரம்பத்தில் சேர்ப்பதன் வாயிலாக, குழந்தைகளில் மொழியியல் திறன்கள் மேலும் பலவீனமடையும். ஒரு ஆலோசனைக் குழுவாக, துவக்கப்பள்ளிகளில் மூன்றாம் மொழியை அறிமுகப்படுத்துவதை மாநில அரசு தவிர்க்க வேண்டும்' என, தெரிவித்தார். இந்த சூழலில், அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் எதிர்ப்பை தொடர்ந்து, மும்மொழி கொள்கை தீர்மானம் ரத்து செய்யப்படுவதாக மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக மாநில அமைச்சரவை கூடி நேற்று ஆலோசனை செய்தது. கூட்டத்துக்கு பின் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் கூறியதாவது:மொழிகள் எந்தத் வகுப்புகளிலிருந்து செயல்படுத்தப்பட வேண்டும், எவ்வாறு செயல்படுத்தப்பட வேண்டும், மாணவர்களுக்கு என்ன தேர்வுகள் வழங்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்க டாக்டர் நரேந்திர ஜாதவ் தலைமையில் ஒரு குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்தக் குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில், மும்மொழிக் கொள்கையை செயல்படுத்துவது குறித்து மாநில அரசு இறுதி முடிவை எடுக்கும். அதுவரை, ஏப்ரல் 16 மற்றும் ஜூன் 17 ஆகிய தேதிகளில் வெளியிடப்பட்ட இரண்டு அரசுத் தீர்மானங்களும் ரத்து செய்யப்படுகின்றன.இவ்வாறு அவர் கூறினார். மும்மொழிக் கொள்கை தீர்மானத்தை மாநில அரசு ரத்து செய்ததை அடுத்து, வரும் 5ம் தேதி நடத்தப்படவிருந்த மாபெரும் போராட்டம் ரத்து செய்யப்படுவதாக உத்தவ் பால்தாக்கரே சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

ராஜா
ஜூன் 30, 2025 19:54

நல்ல வேளை தமிழகம் நல்ல பெயர் வாங்கி விட்டது. இந்த மொழி திணிப்பு இந்தியா முழுவதும் செல்லாது என்று பிசேபி உணர்ந்து கொண்டு இருக்கிறது.இனி மேல் அடக்கி வாசிக்கலாம்.


venugopal s
ஜூன் 30, 2025 19:36

ஒன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தைக்கு மூன்று மொழி படிக்க வேண்டும் என்று சொல்ல அதிபுத்திசாலி சங்கிகளால் தான் முடியும்!


தஞ்சை மன்னர்
ஜூன் 30, 2025 11:35

அப்புறம் என்னப்பா தி மு க சொன்னாதான் தப்பு


ஆரூர் ரங்
ஜூன் 30, 2025 11:15

முதல் 15 வயதுக்குள் ஒரு மனிதன் 13 மொழிகளைக் கூட கற்கும் திறன் இருக்கும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். அதற்குள் அதிகபட்ச மொழிகளைக் கற்பது சிறப்பான மனவளர்ச்சிக்கு உதவும். மொழி வெறுப்பு அரசியல் ஆபத்தானதாகும்.


J.Isaac
ஜூன் 30, 2025 12:49

கிராமங்களில் சராசரி மற்றும் குறைந்த அறிவு உள்ள முதல் வகுப்பு மாணவர்கள் கல்வி கற்பதை விட்டுவிட நல்ல வாய்ப்பு. சனாதன தர்மம்


J.Isaac
ஜூன் 30, 2025 20:35

ஆரூர்,, கஸ்தூரிரங்கன், வேம்பு , தைரோகேர் வேலுமணி, தங்கர், மோடிஜி, அமித்ஷா போன்று அறிவு திறமை உள்ளவர்கள் ,13 அல்ல 26 மொழிகள் கூட 15 வயதுக்குள் கற்று கொள்ளலாம்


ஆரூர் ரங்
ஜூன் 30, 2025 11:08

உத்தவு தாக்கரே அரசுதான் அங்கு ஹிந்தி மூன்றாவது கட்டாய மொழி திட்டத்தை கொண்டு வந்தது. இப்போ அதனை அவரே எதிர்ப்பது மீத்தேன், நீட், ஜல்லிக்கட்டு புகழ் ஸ்டாலின் ஸ்டைல்.


Iyer
ஜூன் 30, 2025 10:21

 எதனால் ஹிந்தியை எதிர்க்கிறோம் என்று இதுவரை யாரும் LOGICAL காரணம் கொடுத்தது இல்லை.  ஹிந்தி மற்ற எல்லா பாரத மொழிகளுடன் ௪௦ - ௮௦ % பொதுவான வார்த்தைகள் கொண்ட மொழி  நமது சகோதரி மொழியான ஹிந்தியை வெறுத்து - வேறுநாட்டு மொழி ஆங்கில மோகம் எதற்கு?  மொழிப்பிரச்னையை அரசியலாக்கக்கூடாது.  உத்தவ் தாக்கரே ம் - ராஜ் தாக்கரே ம் இன்று அரசியல் காரணங்களுக்காக ஹிநிதியை எதிர்ப்பதுபோல் SHOW செயகிறார்கள்


மூர்க்கன்
ஜூலை 01, 2025 15:15

பெரியார் சொன்னார் ??? ரொம்பல்லாம் யோசிக்க வேண்டாம் நீ ஆதரிச்சா ?? கண்டிப்பா நாங்க அதை எதிர்க்கணும் அவளவுதான். நீ ஆதரிச்சா கண்டிப்பா அது எங்களுக்கு எங்கள் சந்ததிகளுக்கு எதிராகத்தான் இருக்கும்.


சிந்தனை
ஜூன் 30, 2025 09:40

சீனா ஆங்கிலம் இல்லாமல் வளர்ந்துள்ளது! ஆங்கிலம் உலக மொழி என்பது சதிப் பொய்! நம் தந்தையைக் கொன்று, தாயைக் கற்பழிக்க வந்த ஆங்கில மொழியை, கருவருக்க விரும்புபவனே தரமான மகன் ! படிக்க விரும்புபவன் தரம்கெட்ட மகன்!!


மூர்க்கன்
ஜூலை 01, 2025 15:15

தீய சிந்தனை


சிகண்டி ரங் aka ஆரியா ப்பசங்க
ஜூன் 30, 2025 08:58

ராஜ் மற்றும் உத்தவ் தாக்ரே சேர்ந்துவிடுவார்களோ என்று அல்லு விட்டிடிச்சி தொபுக்கடீர்னு விழுந்தேவிட்டது கட்சி .... மும்மொழி கொள்கைக்கு விழுந்த மரண அடி இது


sankaranarayanan
ஜூன் 30, 2025 08:22

மும்மொழிக் கொள்கை தீர்மானத்தை மாநில அரசு ரத்து திராவிட மாடல் அரசு நன்றாகவே வேலை செய்கிறது அண்டை மாநிலங்களிலும் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்க இப்போதிருந்தே ஆரம்பம் ஆகிவிட்டது நாடு நரகமாகினால் இவர்களெக்கென்ன வீரமணிக்கு கொண்டாட்டம்தான்


Iyer
ஜூன் 30, 2025 08:22

* ஹிந்தி - நமது மற்ற பாரதமொழிகளின் சகோதரி. * ஹிந்தி - இந்தியாவில் அதிக மக்களால் பேசப்படும் மொழி * ஹிந்தி பாரதநாட்டின் எல்லா ராஜ்யங்களையும் இணைக்கும் LINK LANGUAGE இணைப்பு மொழி * ஒரு தமிழர் அஸ்ஸாமுக்கோ, பஞ்சாபுக்கோ சுற்றுலா சென்றால் எந்த மொழியில் அங்கு உரையாடுவார்? நாட்டில் உள்ள எல்லா மக்களும் ஹிந்தி கற்பது அவசியம்


J.Isaac
ஜூன் 30, 2025 10:27

வட இந்தியர்கள் தென் இந்தியா வந்தால் தென் இந்திய மொழிகளை பேச வேண்டுமே


J.Isaac
ஜூன் 30, 2025 10:31

வழக்கத்தில் இல்லாத சமஸ்கிருதத்திற்கு ஏன் அரசு அதிக பணம் செலவழிக்கிறது? புழப்பு நடத்த தென்இந்தியா வருகிறவர்கள் முதலில் தென்இந்திய மொழிகளை கற்க வேண்டாமா?


ஆரூர் ரங்
ஜூன் 30, 2025 11:11

இப்போது உள்ள 18 சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் ஒன்றைத் தவிர மற்றவை காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சியில் உருவாக்கப்பட்டவை. தமிழுக்கு இருப்பது ஒரே பல்கலைக்கழகம்தான். அந்த விகிதாசாரபடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது சரிதானே?


சமீபத்திய செய்தி