உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திருப்பதி லட்டு தயாரிக்க கலப்பட நெய் தந்தவர் கைது! டில்லியில் இருந்து ரசாயனம் சப்ளை செய்தது அம்பலம்

திருப்பதி லட்டு தயாரிக்க கலப்பட நெய் தந்தவர் கைது! டில்லியில் இருந்து ரசாயனம் சப்ளை செய்தது அம்பலம்

நெல்லுார்: திருமலை திருப்பதி கோவிலில் லட்டு தயாரிக்க, தேவஸ்தானத்துக்கு கலப்பட நெய் வினியோகம் செய்த விவகாரத்தில், ரசாயனங்கள் சப்ளை செய்த டில்லியைச் சேர்ந்த வர்த்தகர் அஜய் குமார் சுகந்தா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். வரும் 21ம் தேதி வரை, அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆந்திராவில் உள்ள திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதம் மிகவும் பிரசித்தம். லட்டு தயாரிப்புக்கான நெய் கொள்முதலுக்காக, திருமலை திருப்பதி தேவஸ்தானம் அவ்வப்போது டெண்டர் விடுவது வழக்கம். அப்படி, கடந்த ஆண்டு மே மாதம் டெண்டர் விடப்பட்டதில், தமிழகத்தின் திண்டுக்கல்லில் இயங்கும் ஏ.ஆர்.பால் பண்ணை நிறுவனம், 10 லட்சம் கிலோ நெய் வினியோகத்துக்கு டெண்டர் எடுத்தது. அதிகாரிகள் சந்தேகம் அந்த நிறுவனத்தின் பெயரில் அனுப்பப்பட்ட நெய்யில் கலப்படம் செய்யப்பட்டிருப்பதாக தேவஸ்தான அதிகாரிகள் சந்தேகம் எழுப்பினர். இதையடுத்து, புனிதமான லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலந்த நெய்யை வினியோகிக்க, ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான முந்தைய அரசு அனுமதி அளித்ததாக முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டினார். இதனால், இந்த விவகாரம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நெய்யில் கலப்படம் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை உறுதிசெய்ய, குஜராத்தில் உள்ள தேசிய பால்வள மேம்பாட்டு ஆணைய ஆய்வகத்துக்கு மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டன. அதில் கலப்படம் இருப்பது உறுதியானதால், தேவஸ்தான அதிகாரிகள் திருப்பதி கிழக்கு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. நீதிமன்ற காவல் இக்குழு நடத்திய விசாரணையில், கொழுப்பை அதிகரிக்கும் வகையில், 'மோனோகிளைசிரைட்ஸ், அசிட்டிக் அமிலம்' போன்ற ரசாயனங்களை பாமாயில் எண்ணெயில் கலந்து, அதை நெய் போன்று மணம் வீச செய்து, திரிதிரியாக உருவாக்கியது தெரியவந்தது. இந்த ரசாயனங்களை, உத்தரகண்டில் இயங்கி வரும், 'போலேபாபா' பால் பண்ணைக்கு, டில்லியை சேர்ந்த வர்த்தகர் அஜய் குமார் சுகந்தா கடந்த ஏழு ஆண்டுகளாக வினியோகித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கலப்பட நெய் தான், வைஷ்ணவி மற்றும் ஏ.ஆர்.பால் பண்ணை போன்ற பிராண்டு பெயர்களில் திருப்பதி லட்டு பிரசாத தயாரிப்புக்கு வழங்கப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, வர்த்தகர் அஜய்குமார் சுகந்தாவை டில்லியில் கைது செய்து திருப்பதிக்கு அழைத்து வந்த அதிகாரிகள், நெல்லுார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை, வரும் 21ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். கைதான அஜய் குமாரிடம் இருந்து ரசாயன வினியோகம், நிதி பரிவர்த்தனை போன்ற தகவல்களையும் விசாரணை அதிகாரிகள் சேகரித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

ஜெய்ஹிந்த்புரம்
டிச 08, 2025 06:34

நமக்கு சுத்தமான நெய்யில் செய்த லட்டு முக்கியம். ஆனால் ஒன்றிய அரசு போன வாரம் கொண்டு வந்த புது சட்டம், “பல துறைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தரக் கட்டுப்பாடு உத்தரவுகளை, அண்மையில் மத்திய அரசு விலக்கிக் கொண்டது.” என்ற சட்டம். அதை பற்றி யோசிங்க. புது சட்டத்தின் ஓட்டையில் போலி லட்டு என்ன, போலி போர்விமானம் கூட வெளியே வந்துரும். சம்பந்தப்பட்ட கிரிமினல் கம்பெனி சில பல நூறு கோடிகளை பாஜகவுக்கு தேர்தல்நதியாக லஞ்சமாக கொடுத்து அடுத்த மோசடி செய்ய கிளம்பி விடுவார்கள். நமக்கு லட்டு கிடைக்கும்.


மணிமுருகன்
நவ 11, 2025 23:31

பாரதத்தில் நெய்யில் மட்டும் அல்ல மிளகாய் பொடி தொடங்கி அனைத்து உணவு பொருட்களிலும் ராசாயணம் கலக்கப் படுகிறது இதை வெளிப்படையாகவே பலர் கூறியுள்ளனர் ஆனால் இன்று வரை மாறவில்லை நன்றாக சுத்தமாக ்ருந்த மசாலா பொடிகள் கூட மாறொயுள்ளது என்பதே உண்மை ்இப்படி சம்பாதித்து என்ன பலனடைவார்கள் செத்தால் கூடப் போகுமா பணம


சுந்தரம் விஸ்வநாதன்
நவ 11, 2025 11:58

ஏனுங்க அந்த திருப்பதி 44 லட்சம் செய்தியை யாரோ கொள்ளையடிச்சுட்டு போயிட்டாங்க.


கூத்தாடி வாக்கியம்
நவ 11, 2025 10:30

கலப்படம் பண்ணவன் தமிழ் நாட்டுக்கு கேவலம்


baala
நவ 11, 2025 10:11

தமிழகத்தை பழி சுமத்தியா, சொன்ன ஈனர்கள் எங்கே?


SUBBU,MADURAI
நவ 11, 2025 11:59

அனைவரும் கூட்டுக் களவானிகள் என்பது மர மண்டைகளுக்கு தெரியாது.


raju
நவ 11, 2025 09:57

கடைகளில் விற்கப்படும் நெய் எந்த அளவில் சுத்தமாக இருக்கிறது. அரசு சோதனை செய்யுமா ?


Venugopal S
நவ 11, 2025 09:15

இந்த விஷயத்தில் தமிழக அரசையும், தமிழக நிறுவனங்களையும், தமிழக மக்களையும் குற்றம் சாட்டி குறை சொன்ன சங்கிகள் இப்போது அதற்காக மன்னிப்பு கேட்பார்களா?


duruvasar
நவ 11, 2025 09:51

யோக்கியனுக்கு திருட்டு பயலுக்கூட எதுக்கு கூட்டு. . திருட்டு கும்பல்.


Keshavan.J
நவ 11, 2025 10:02

நீ என்ன பண்ண போற. ஓரமாய் ஒக்காந்து அழு .


Ramesh Sargam
நவ 11, 2025 09:08

சாமிக்கே கலப்பட நெய் என்றால், நம்மை போன்ற சாதாரண ஆசாமிகளுக்கு விற்கப்படும் நெய் எவ்வளவு கலப்படம் இருக்கும், யோசியுங்கள். நெய் சாப்பிடுவதையே நிறுத்தவேண்டும் போல தோன்றுகிறது.


Senthoora
நவ 11, 2025 09:02

சிலநாடுகளில் போதை கடத்துபவர்கள் பிடிக்கப்பட்டால், ஒரு திறந்த வெளி சிறையில் அடைத்து அதை அவர்களே தின்னக்கொடுத்து, உயிர் தப்பினால் கவுன்சிலிங் வழங்கி வீட்டுக்கு அனுப்புவர்கள். அதை இவர்களுக்கு செய்யணும்.


Raghavan
நவ 11, 2025 08:34

இந்த வழக்கு இன்னும் ஒரு 15 அல்லது 20 வருடங்கள் ஆகும் தீர்ப்பு வருவதற்கு. இருக்கவே இருக்கிறார்கள் மெத்த படித்த கபில் சிபல் போன்றவர்கள் அவர்களுக்கு கொடுக்கவேண்டியதை கொடுத்தால் வழக்கே ஒன்றும் இல்லமால் செய்துவிடுவார்கள். இன்னும் ஒரு வாரத்தில் அவன் ஜாமீன் வாங்கிவிடுவான். பிறகு போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாட்டுக்கு சென்றுவிடுவான். ரெட் கார்னர் நோட்டீஸ் போன்றவைகள் கொடுத்து இவனை இங்கே கொண்டுவந்து தனியான முற்றும் வசதியான சிறையில் வைத்து அடைகாப்பார்கள்.


baala
நவ 11, 2025 10:12

இதெல்லாம் யார் செய்கிறார்கள்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை