உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கோர்ட் நடவடிக்கைகள் மொபைல்போனில் பதிவு; விதி மீறியவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

கோர்ட் நடவடிக்கைகள் மொபைல்போனில் பதிவு; விதி மீறியவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை; மும்பையில் ஐகோர்ட் நடவடிக்கைகளை தமது மொபைல்போனில் பதிவு செய்த நபருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.மும்பை ஐகோர்ட்டில் சொத்து தகராறு தொடர்பான வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. ஏ.எஸ். கட்கரி, கமல்கட்டா தலைமையிலான நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணை நடைபெற்றது.அப்போது, நவி மும்பையைச் சேர்ந்த சஜத் அப்துல் ஜப்பார் படேல் என்பவர், கோர்ட் நடவடிக்கைகளை உள்ளேயே இருந்து கொண்டு தமது மொபைல்போனில் படம் பிடித்துள்ளார். இதை கோர்ட் ஊழியர் ஒருவர் பார்த்துவிட யார் என்று விசாரித்துள்ளார். மனுதாரரின் உறவினர் என்று அவர் பதிலளித்துள்ளார்.தொடர்ந்து படம்பிடித்த நபர் பற்றி மனுதாரர் வக்கீலிடம் நீதிபதிகள் விசாரித்தனர். அதன்பின்னர், கோர்ட் நடவடிக்கைகளை மொபைல்போனில் ஒலிப்பதிவு செய்ய அவருக்கு அனுமதி தரப்படவில்லை என்பது தெரிய வந்தது.இதையடுத்து, நடத்தை விதிகளை மீறியதாக சம்பந்தப்பட்ட நபருக்கு ரூ.1 லட்சம் அபராதத்தை நீதிபதிகள் விதித்தனர். இந்த தொகையை கோர்ட் ஊழியர்கள் மருத்துவ நிதிக்காக அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
மார் 01, 2025 13:34

நீதியரசர்கள் எதோ வானத்திலிருந்து குதித்ததை போலவும் கடவுள்கள் போலவும் இருக்கிறது இன்றைய அவர்களது நடவடிக்கைகள். நீதிமன்றம் மக்களுக்கானதுதானே. அங்கு ஏதேனும் சட்டவிரோத காரியங்களோ குத்தாட்டமோவா நடக்கிறது அதை படம் எடுக்கக்கூடாது என்று கூற. இல்லையேல் நீதிபதிகள் ஏதேனும் தப்பு செய்கிறார்களா? புரியவில்லை


சிந்தனை
மார் 01, 2025 10:14

கோர்ட் அதன் மொழிபெயர்ப்பு நீதி மன்றம் இல்லை! அதன் மொழிபெயர்ப்பு சட்டமன்றம் அல்லது சட்டசபை அல்லது சட்டவளாகம். அதேபோல நீதிபதி என்பதும் தவறான மொழிபெயர்ப்பு தான். சட்டபதி அல்லது தீர்ப்பாளர் என்பதே. சரி ஏனெனில் அங்கே நீதியின்படி தீர்ப்பு சொல்ல முடியாது. சட்டத்தின்படிதான் சொல்ல முடியும். முன்பு நடந்த தவறான மொழிபெயர்ப்பை இனியேனும் கைவிடுவோம்!


சிந்தனை
மார் 01, 2025 10:07

சட்டவளாக நடவடிக்கைகள் 100% வெளிப்படையாக இருப்பதுதானே மக்களாட்சியாக இருக்க முடியும்...


raja
மார் 01, 2025 09:40

நீதிமன்றம் என்ன ரகசிய மன்றமா. நீதிமன்ற விவாதங்களை நேரடி ஒளிபரப்பு செய்கிறார்களே. ரகசிய வழக்குகள் என்று ஏதாவது உள்ளதா.


Kanns
மார் 01, 2025 09:21

All Court Administration incl Staff-Infras etc Must be Handed to Supreme People esp Scwuittrd Citizrns. All Judge Activitirs Must be Under Cameras. . Judges Not Willing be Sacked& Punished for Disregarding People-Nation


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை