உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜார்க்கண்டில் என்கவுன்டர்: ரூ.1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் உட்பட 3 பேர் சுட்டுக்கொலை

ஜார்க்கண்டில் என்கவுன்டர்: ரூ.1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் உட்பட 3 பேர் சுட்டுக்கொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராஞ்சி: ஜார்க்கண்டில் நடந்த துப்பாக்கிச் சண்டையில், தடைசெய்யப்பட்ட சிபிஐ மாவோயிஸ்ட் அமைப்பை சேர்ந்த ரூ.1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்ட சஹ்தேவ் சோரன் உட்பட 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.ஜார்க்கண்டின் ஹசாரிபாக் மாவட்டத்தில் மாவோயிஸ்ட்கள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் வந்தது. அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் உடன் போலீசார் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கி இருந்த மாவோயிஸ்ட்கள் தாக்குதல் நடத்தினர். பின்னர் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தடைசெய்யப்பட்ட சிபிஐ மாவோயிஸ்ட் அமைப்பை சேர்ந்த ரூ.1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்ட சஹ்தேவ் சோரன் உட்பட 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.அப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினர் சந்தேகப்படுகின்றனர். இதனால் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Tamilan
செப் 15, 2025 20:04

நாடு முழுவதும் கொள்ளையடிக்க புதிது புதிதாக இடம் தேடி அலைகிறது மத்திய அரசு


Ramesh Sargam
செப் 15, 2025 12:55

சுட்டுத்தள்ளிய வீரர்களுக்கு அநேககோடி நமஸ்காரங்கள். ஸ்வீட் எடு, கொண்டாடு.


VenuKopal, S
செப் 15, 2025 11:07

அருமை. இனி அத்தகையவர்களுடன் தொடர்பு வைத்து இருப்பவர்களை கருவறுக்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை