உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மொபைல் திருடனுக்கு கிடைத்த நூதன தண்டனை: பீஹாரில் அதிர்ச்சி சம்பவம்

மொபைல் திருடனுக்கு கிடைத்த நூதன தண்டனை: பீஹாரில் அதிர்ச்சி சம்பவம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: பீஹாரில் ஓடும் ரயிலில், வெளியில் இருந்து மொபைல் போன் பறிக்க முயன்ற திருடனின் கைகளை பயணிகள் பிடித்து இழுத்து சென்றனர். இதனால், அந்த திருடன் சுமார் ஒரு கி.மீ., தூரம் ஜன்னலில் தொங்கியபடி பயணித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் எப்போது நடந்தது என்ற தகவல் வெளியாகவில்லை.பீஹாரின் பகல்பூர் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில் ரயில் கிளம்பிய நிலையில், அங்கு நின்றிருந்த திருடன் ஜன்னல் வழியாக பயணி ஒருவரின் மொபைல் போனை பறிக்க முயன்றான். சுதாரித்து கொண்ட பயணி, திருடனின் கைகளை இறுக பிடித்து கொண்டார். மற்றவர்களும் திருடனின் கைகளை பிடித்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=t7rus4ac&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனால், செய்வது அறியாது தவித்த அந்த திருடன், அவர்களிடம் இருந்து தப்பிக்க, எடுத்த அனைத்து முயற்சிகள் எதுவும் கைகூடவில்லை. இதனால், சுமார் ஒரு கி.மீ., தூரம் ஜன்னல் கம்பிகளுக்கு மத்தியில் தொங்கியபடி பயணித்தான். அவனுக்கு வேண்டப்பட்டவர்கள் என கருதப்படும் சிலர் வந்து அவனை மீட்டு சென்றனர். இதனை சக பயணிகள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

vijay
ஜன 19, 2024 17:26

//...பீகாரில் வேலை இல்லை பாவம்...// ஆனால் பீஹாரியை தமிழ்நாட்டிற்கு அழைத்து 380 கோடி கொடுத்து தேர்தல் ஆலோசகரா வச்சு ஜெயிச்சும் விட்டாங்க. எப்புடி..


D.Ambujavalli
ஜன 19, 2024 06:30

'ஐயா , சாமிகளா. கைகளை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள் ஐயா கைவிட்டுவிடாதீர்கள் இனி ஜென்மத்துக்கும் இப்படித் திருட மாட்டேன் ' என அலறியிருப்பான்


g.s,rajan
ஜன 19, 2024 04:15

பீகாரில் வேலை இல்லை பாவம்,ஆனால் மக்கள் திருடித் தான் சாப்பிடணுமா ....???


Ganesh Kumar 007
ஜன 19, 2024 10:02

தமிழ் நாட்டுல திருடன் இல்லையா....


g.s,rajan
ஜன 19, 2024 04:09

இந்தியாவில் பலர் பணம் மற்றும் பதவிக்காகத் தொங்கறாங்க ,இந்தத் திருடன் பசிக்காகத் தொங்கறான்....


g.s,rajan
ஜன 19, 2024 04:07

நம் நாட்டில் அரசியல்வாதிகள் ,அரசு அதிகாரிகள் பல பேர் குறுகிய காலத்தில்,மிகக் குறுகிய காலத்தில் ,மிகக் குறைந்த உழைப்பில் ,குறுக்கு வழியில் எளிதாக பணம் சம்பாதிக்க பணத்துக்காக மற்றும் பதவிக்காகத் தொங்கறாங்க, நாகரீகமாத் திருடறாங்க ஆனால் கஷ்டப்பட்டு சம்பாதிக்க மனம் இல்லாமல் உழைக்காமல் எதையாவது திருடித் தான் சாப்பிடணும்னு இந்தத் திருடன் தொங்கறான், பாவம்...


subramanian
ஜன 18, 2024 21:35

தவறான செயல். அவனை போலிஸ் இடம் ஒப்படைக்க வேண்டும்.


இராம தாசன்
ஜன 19, 2024 02:44

அவனே போலீஸ் ஆளாக இருந்தால் ?


NicoleThomson
ஜன 18, 2024 20:48

கழகம் பிகாரியை கூப்பிட்டுதான் ஆட்சிக்கு வந்தது?


அப்புசாமி
ஜன 18, 2024 20:05

வேண்டபட்டவர்களா? கூட்டுக்களவாணிகளா இருப்பாய்ங்க.


Senthoora
ஜன 18, 2024 17:55

ஐயே திருடனுக்கு வேண்டப்பட்டவர்களா


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ