வாசகர்கள் கருத்துகள் ( 13 )
If we need to consider tamil actors then it has to be in Dr. Sivajis Era. Everyone was good.
மத்திய அரசு வெட்கித் தலைகுனிய வேண்டிய தருணம் இது... அனைத்து இந்திய மொழி நடிகர்களாலும், ஒருவரின் அசாத்திய திறமைக்காகப் போற்றப்படும் ஒரு நடிகர் என்றால் அது நம் தமிழ் திரையுலகத்தைச் சார்ந்த கமல்ஹாசன் தான். அதில் எவருக்கும் இங்கே மாற்றுக் கருத்து என்பது இருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவருக்கு வழங்கப்படும் விருதுகள் யாவும் காலம் தாழ்த்தியே வழங்கப் படுகின்றன. காரணம் எந்நாளும் அவர் தற்போதிருக்கும் மத்திய அரசுடன் இணக்கம் காட்டியதில்லை. ஒருவேளை மத்திய அரசுக்கு அவரும் ஜால்ரா தட்டுபவராக இருந்திருந்தால் இந்நேரம் அவருக்கு அனைத்து விருதுகளும் அவர் வீட்டின் முன்னே வரிசையில் நின்றிருக்குமோ என்னவோ. தற்போது விருது அறிவிக்கப் பட்டிருக்கும் நடிகர் மோகன்லாலின் திறமையை இங்கே குறைத்து மதிப்பிடுவது என்னுடைய நோக்கமல்ல. ஆனால் இத்தகைய உயரிய விருதுகள் அறிவிக்கப்படும் பொழுது அதனை வாங்கும் நடிகர்களுக்கே அது தர்மசங்கடத்தை உண்டு செய்யும். அவருக்குத் தெரியாதா என்ன. இந்த விருது இன்னமும் கமல்ஹாசனுக்கு வழங்கப்படவில்லை என்பது கமலை விட அவர் திறமை படைத்தவர் என்றால் அவரே ஒப்புக் கொள்ள மாட்டார். மோகன்லாலின் கலைப்பயணம் ஆரம்பித்தது 1978 ல்... ஆனால் கமல்ஹாசனின் கலைப்பயணம் 1960 ல் தன் ஐந்து வயதிலேயே ஆரம்பித்தாயிற்று... விருதுகள் என்பது மற்ற கலைஞர்களை வேண்டுமானால் பெருமைப் படுத்தலாம். ஆனால் கமலுக்குக் கொடுக்கப்படும் எத்தகைய விருதும் தனக்குத் தானே பெருமை கொள்ளுமேயொழிய உண்மையில் அதில் கமலுக்குப் பெருமையல்ல. பத்மபூஷன் விருது ரஜினிக்குக் கொடுக்கப்பட்ட பின்னரே கமலுக்குக் கொடுக்கப்பட்டது. அதே போல் பத்மவிபூஷன் விருதும் அவ்வாறே ரஜினிக்குத் தான் முதலில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இன்னமும் கமலுக்குக் கொடுக்கப் படவில்லை. இங்கே திறமைக்கு மரியாதை இல்லாமல் அரசியல் செல்வாக்கினால் விருதுகள் வழங்கப்படும் போக்கு நீடிக்குமானால் அது கலைஞர்களுக்கு ஆளும் அரசுகள் செய்யும் துரோகம் என்றே கூறவேண்டும்... நம் தமிழகத்தின் பொக்கிஷம் நாகேஷ் என்னும் மாபெரும் நடிகர் மத்திய அரசால் வழங்கப்படும் ஒரு விருது கூட பெறவில்லை என்பது எவ்வளவு வருத்தத்திற்குரியது. அதே போல் பிரான்ஸ் நாட்டின் உயரிய செவாலியே என்னும் விருது நம் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு வழங்கப்பட்ட பின்பே மத்திய அரசால் இந்திய நாட்டின் உயரிய விருது தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதைப் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றது நம் நடிகர் திலகம் தான். அவ்வாறு இன்னொரு நாடு நம் நாட்டின் கலைஞனின் திறமையை அங்கீகரிக்கும் போது நம்மை ஆளும் அரசுகளின் கண்களுக்கு அது புலப்படாமல் போவது வெட்கக்கேடு. இந்த சூழ்நிலையில் பாராட்டத்தக்க ஒருவர் என்றால் அது பின்னணிப் பாடகி எஸ் ஜானகி அவர்கள். அவருக்கு வழங்கப்பட்ட பத்மபூஷன் விருதை வாங்க மறுத்து அதற்கான காரணமாக, இது காலம்தாழ்த்தி வழங்கப்படும் மிகச்சிறிய விருது என்றும் அதனைப் பெற தனக்கு விருப்பமில்லை என்றும் தன் சேவைக்கு நாட்டின் உயரிய விருதான பாரத் ரத்னாவே உரியது என்றும் மத்தியில் ஆளும் அரசுக்கு சம்மட்டி அடி கொடுத்திருந்தார். பாகுபாடு பார்த்து வழங்கப்படும் விருதுகள் ஆளும் அரசுகளுக்குத் தான் அவமானமேயன்றி விருதுகள் பெறாத திறமை வாய்ந்த கலைஞர்களுக்கு அல்ல... விருதுகள் கொடுப்பதில் யார் புறக்கணித்தாலும் உலகளவில் பெருமை சேர்க்கும் கமல்ஹாசன் என்னும் ஒரு மாபெரும் கலைஞன், ஒரு தமிழன் என்பதில் எந்நாளும் ஒரு நமக்குள் கர்வம் இருக்கத்தான் செய்கிறது...
Not really. There is versatility amongst malayalam actors. Kamal ia predi. Even a new comer in Malayalam is very creative. Whether is behind the screen or on stage
மலையாளத் திரையுலகின் திரைப்பட நடிகருக்கு தாதா சாகிப் பால்கே விருது வழங்க முடிவு செய்திருந்தால் எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காத மம்முட்டிதான் மோகன் லாலை விட மிகச் சிறந்த தேர்வாக இருந்திருப்பார்.
இவரும் சளைத்தவ அல்ல. Kireedam, Thanmathra, vanaprastham மற்றும் இன்னும் பல.
தமிழக மருமகன். வாழ்த்துகள். ( உறவினர் ரஜனி ரொம்ப நாளா காத்திருக்கிறார்.பாவம்)
அப்ப இது நடிப்புக்காக கொடுக்கப்பட்ட விருது இல்லையா? இதுவும் அரசியல்?
தேர்தல் அடுத்த வருடம் கேரளாவில் அதற்கு முன்னோட்டம் இந்த விருது. நல்ல நடிகர். மோகன்லால் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
சுரேஷ் கோபி MP அவர்களின் பரிந்துரையாக கூட இருக்கலாம். வாழ்த்துக்கள்...
Lal Ettanukku வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள் லால் ஜி
Kerala election coming.... Game starts now....