உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீதிபதி வீட்டில் சாக்கு மூட்டையில் பணம்; சுப்ரீம் கோர்ட் செயலுக்கு வக்கீல் உஜ்வால் நிகம் பாராட்டு

நீதிபதி வீட்டில் சாக்கு மூட்டையில் பணம்; சுப்ரீம் கோர்ட் செயலுக்கு வக்கீல் உஜ்வால் நிகம் பாராட்டு

புதுடில்லி: டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஸ்வந்த் வர்மா வீட்டில், கத்தை கத்தையான ரூபாய் நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தில் வீடியோவை சுப்ரீம் கோர்ட் வெளியிட்டது பாராட்டுக்குரிய விஷயம் என மூத்த வழக்கறிஞர் உஜ்வால் நிகம் தெரிவித்தார்.டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஸ்வந்த் வர்மா வீட்டில், கத்தை கத்தையான ரூபாய் நோட்டுகள் தீயில் எரிந்த நிலையில் இருக்கும் வீடியோ சுப்ரீம் கோர்ட் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் நோக்கத்துடன் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vxhfpd4u&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து மூத்த வழக்கறிஞரும், பா.ஜ., தலைவருமான உஜ்வால் நிகம் கூறியதாவது: நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் விசாரணையை துவங்கி உள்ளது. வெளிப்படைத்தன்மை என்பது நீதித்துறையில் முக்கியம். அந்த வகையில் உச்ச நீதிமன்றத்தின் செயலை நான் பாராட்ட விரும்புகிறேன்.எந்தவொரு நாட்டின் ஸ்திரத்தன்மையும் இரண்டு விஷயங்களை சார்ந்துள்ளது என்று நான் எப்போதும் கூறுவேன். மக்கள் அந்நாட்டின் கரன்சி (பணம்) மீது நம்பிக்கை வைத்திருக்க வேண்டும். இரண்டாவதாக, மக்கள் அந்த நாட்டின் நீதித்துறை மீது நம்பிக்கை கொள்ள வேண்டும்.நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட அதிக அளவு பணம் தொடர்பாக வீடியோவை உச்ச நீதிமன்றம் இணையத்தில் வெளியிட்டது. இது விசாரணைக்குரிய விஷயம் போல் தெரிகிறது. உச்ச நீதிமன்றம் உறுதியான நிலைப்பாட்டை எடுக்கும் என்று நான் நம்புகிறேன். வெறும் இடமாற்றம், பணிநீக்கம் மட்டும் போதாது. இதுபோன்ற விஷயங்களில் முக்கிய முடிவுகளை பார்லிமென்ட் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். யார் இந்த உஜ்வால் நிகம்* உஜ்வால் நிகம் பிரபலமான வழக்கறிஞராக இருந்து வருகிறார். * இவர் 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி நடைபெற்ற மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில், அரசு தரப்பு வழக்கறிஞராக செயல்பட்டவர் * பூனம் மகாஜனின் தந்தை பிரமோத் மகாஜனின் கொலை வழக்கிலும் உஜ்வல் நிகம் வழக்கறிஞராக செயல்பட்டார். * குல்ஷன் குமார் கொலை வழக்கு, 1993 மும்பை குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல முக்கியமான வழக்குககளில் வழக்கறிஞராக இருந்துள்ளார் உஜ்வல் நிகம். * 2013 மும்பை கூட்டு பலாத்கார வழக்கில் சிறப்பு அரசு வழக்கறிஞராகவும் இருந்தார்.கடந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., கட்சி சார்பில் மும்பையில் போட்டியிட்ட நிகம் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

Vazhga Ganesan
மார் 27, 2025 07:33

இனம் இனத்தோடு சேரும்


Dsri Sub
மார் 25, 2025 14:51

எல்லாத் துறையிலும் ஊழல் மக்கள் என்னத்த பார்த்துக் கொண்டு இருக்கிறார்களோ. பிரெஞ்சு புரட்சியில் மக்கள் பட்டினி ஆனதால் கோபம் அடைந்தனர். இங்கு இலவசம், மானியம் இதனால் பசி குறைவு போராட மனம் இல்லை


Ramesh
மார் 25, 2025 07:57

நீதித்துறை சீரழிந்து முப்பது ஆண்டுகள் கடந்துவிட்டது விலை உயர்ந்த விற்பனை நீதியும் மருத்துவமும் கல்வியும் என ஆகிவிட்டது . மக்களின் பணத்தில் சம்பளம் அதுபோக அரசியல்வாதிகளிடம் பேரம் பேசி விற்கும் படும் நீதி அரசர் என்கிற பட்டப்பெயர் தேவைதானா இது கலியுகத்தின் இறுதி அத்தியாயம் அதனால்தான் அசுரர்கள் ஆட்சி புரிகிறார்கள்


Tetra
மார் 25, 2025 07:06

எல்லா நீதிபதிகள் வீட்டையும் சோதனையிட்டால் தெரியும் நீதியின் லட்சணம்


rasaa
மார் 24, 2025 09:17

இவரை அலகாபாத் நீதிமன்றத்திற்கு மாற்ற கொலீஜியம் நினைக்க, அலகாபாத் என்ன குப்பை தொட்டியா? என வக்கீல் சங்கம் ஆட்சேபணை தெரிவித்துள்ளது. தமிழகம்தான் கேரளாவின் குப்பை தொட்டியாக உள்ளதே. இவரைப்போன்றவர்களை இருகரம் கொண்டு ஆதரிக்க தயாராக உள்ளதே.


Bhaskaran
மார் 24, 2025 08:02

நம்ம ஊர் ஓய்வு பெற்று திமுகவுக்கு ஜால்ரா போடும் ஜட்ஜ் கள் வீட்டில் ரெய்டு விடவேண்டும்.இப்போ ஒருத்தர் ஜட்ஜ் நியமனத்தில் சாதி பிரச்சனை கிளப்பறாரு


என்னத்த சொல்ல
மார் 23, 2025 23:25

இந்த நீதிபதி எத்தினை அநியாய தீர்ப்பு வழங்கி இருப்பார். எத்தினைபேர் வாழ்வை கெடுத்திருப்பார். இவர் வழங்கிய தீர்ப்பை மரு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்...


Mediagoons
மார் 23, 2025 22:56

அதை மீடியாக்களும் வெளியிடாதது ஏன்?. யாரை காக்கும் முயற்சி ?


Mediagoons
மார் 23, 2025 22:55

இந்த பாஜ அரசின் பித்தலாட்டங்களுக்கு எடுத்துக்காட்டு. எப்போதும் போல் இது பிடிபட்டது . மோடி அரசின் பாஜவின் Tip of the ice berg


Tetra
மார் 25, 2025 07:08

உங்கள் பெயரே நீங்கள் கழகக்கண்மணிகள் என்றுசொல்கிறதே. வேறு எப்படி பேசுவீர்கள்.


Vijay D Ratnam
மார் 23, 2025 21:48

இவரு மாட்டிகிட்டாரு அவ்ளோதான், ஊட்டுலயா அம்புட்டு பணத்தையும் வச்சிப்பான் மனுஷன். படிச்சவன் செய்ற வேலையா இது. பில்லியனில் கொள்ளையடிக்குற தற்குறி பயலுவோலாம் காலரை தூக்கிக்கிட்டு வலம் வராய்ங்க. இவரு என்னடான்னா. சரி, இப்போ என்ன தூக்கிலா போடப்போறாய்ங்க. கைது கூட பண்ணமுடியல. ஒரு நாள் நியூஸ் அம்புட்டுதேன். நாளைக்கி வேற பிரேக்கிங் நியூஸ் வந்துடும்ல. நாளைக்கே ஒரு இளம்பெண் இவரை மாதிரி ஒருத்தர் மேல செக்ஸ் டார்ச்சர் செய்தார் என்று மீடியாவை கூப்பிட்டு ஒப்பாரி வைத்தால் போதும், இந்த நூறு கோடி ரூபா வண்டி பிரேக்டவுன் ஆயிடும். இப்போ நம்ம திராவிட மாடல் தமிழ்நாட்டை எடுத்துக்குங்க, எவனாச்சும் இப்போ 2ஜி ஸ்பெக்ட்ரம், நீட், வேங்கைவயல், ஜி-ஸ்கொயர், ஒரே வருஷத்தில் முப்பதாயிரம் கோடி கொள்ளை, அண்ணா யுனிவர்சிட்டி பாலியல் பலாத்காரம், மணல்கொள்ளை, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகள் பற்றி பேசுறானா. லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்த துரைமுருகன், பொன்முடி, டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன், ஆண்டிமுத்து ராசா, மூர்த்தி, அனிதா ராதாகிருஷ்ணன் கே.டி.சகோதரர்கள் சமாச்சாரம் என்னாச்சுன்னு கேட்கிறானா. அதெல்லாம் ஓல்ட் நியூஸ். இப்போ லேட்டஸ்ட் டாஸ்மாக் கொள்ளை. செந்தில்பாலாஜி சபரீசன் டெல்லிவாலா காலில் உழுந்து கத்தரித்து வந்தது. நாளைக்கி வேற வந்துடும். அவ்ளோதான். ஒண்ணுமில்லியா இருக்கவே இருக்குது ஹிந்தி, நாடாளுமன்ற தொகுதி அதிகரிப்பு, காவிரி, நிதி கொடுக்கலன்னு ஒப்பாரி, என்று எவ்ளோ இருக்குது பாஸ்.


CPs
மார் 24, 2025 06:47

ஏன் இவர் ஒரு நீதிபதி இவர் வீட்டில் இவ்வளவு பணம் எப்படி வந்தது என்று கேட்க வக்கில்லை. அதுவும் இந்த ஆள் பாஜக சார்பாக எம்பி தேர்தலில் போட்டியிட்டவர். கண்டிப்பாக இதில் பாஜக வின் கை இருக்கும். இவரிடம் இருந்த பணம் பாஜக பணமாக கூட இருக்கலாம். நீங்க இதை பற்றி பேசுவதை விட்டு தமிழ்நாட்டில் நடக்காத ஒன்றை பேசி திசை திருப்புகிறாயா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை