உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கிராமப்புற குடும்பங்களின் வருமானம் அதிகரிப்பு; நபார்டு வங்கி ஆய்வில் தகவல்

கிராமப்புற குடும்பங்களின் வருமானம் அதிகரிப்பு; நபார்டு வங்கி ஆய்வில் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கிராமப்புறங்களில் வசிக்கும் குடும்பங்களின் வருமானம் 57.6 சதவீதம் அதிகரித்து உள்ளது நபார்டு வங்கியின் ஆய்வில் தெரியவந்துள்ளது.இது தொடர்பாக நபார்டு நடத்திய ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டு உள்ளதாவது: கடந்த 2015-17 ல் கிராமப்புறங்களில் வசிக்கும் குடும்பத்தினரின் சராசரி மாத வருமானம் ரூ.8,059 ஆக இருந்தது. இது 2021-22ம் ஆண்டில் ரூ .12,698 ஆக அதிகரித்து உள்ளது. இது 57.6 சதவீதம் உயர்வு ஆகும்.இதேகாலகட்டத்தில் சேமிப்பும் ரூ.9,104 ல் இருந்து ரூ.13,209 ஆக அதிகரித்து உள்ளது. இந்த விகிதமும் 5 ஆண்டுகளில், 50.6 சதவீதத்தில் இருந்து 66 சதவீதமாக உயர்ந்துள்ளது.அதேபோல், குடும்பத்தினரின் கடனும் 47.4 சதவீதத்தில் இருந்து 52 சதவீதமாக அதிகரித்துள்ளது. கிராமப்புறங்களில் வசிக்கும் குடும்பத்தினரில் யாரேனும் ஒருவர் காப்பீடு எடுத்து கொள்வது என்பது 2016 -17 காலகட்டத்தில் 25.5 சதவீதமாக இருந்தது. இதுவே 2021-22 ல் 80.3 சதவீதமாக ஆனது.வரவுக்கு ஏற்றார் போல் செலவும் அதிகரித்துள்ளது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. 2016 -17 ல் குடும்பங்களுக்கு ரூ.6.646 செலவான நிலையில், தற்போது இது ரூ.11,262 ஆக அதிகரித்துள்ளது. உணவுக்கு செலவிடும் தொகையானது 51 சதவீதத்தில் இருந்து 47 சதவீதமாக குறைந்துள்ளது. இவ்வாறு அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Kasimani Baskaran
அக் 11, 2024 05:35

அப்ப புதுசா ஒரு பத்தாயிரம் கடை திறந்து விடலாம் என்று ஒரு கோஷ்டி திட்டம் போட்டுவிடும். கம்மி யூனியங்களை வைத்து அன்னியனே வெளியேறு திட்டம் வேறு செயல்படுத்துகிறார்கள் - இதில் டாஸ்மாக் திட்டமும் சேர்ந்து கொண்டால் தமிழகம் குட்டிச்சுவராகி விடும். ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்.


R.PJEYA RAJA
அக் 10, 2024 22:44

கிராம வளர்ச்சி நாட்டின் வளர்ச்சி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை