உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீட் தேர்வு முறைகேடு: ஜூன் 21ல் காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம்

நீட் தேர்வு முறைகேடு: ஜூன் 21ல் காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம்

புதுடில்லி: நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றது தொடர்பாக ஜூன் 21ல் நாடு முழுவதும் உள்ள மாநில தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.நடந்து முடிந்த மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் வழங்கியது போன்ற முறைகேடுகள் நடைபெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இது தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நீட் தேர்வு முறைகேடு நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில், நீட் தேர்வுக்கு எதிராகவும், முறைகேடு தொடர்பாகவும் அனைத்து மாநில தலைநகரிலும் நாளை மறுநாள் (ஜூன் 21) போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

திமுக மாணவரணி ஜூன் 24ல் போராட்டம்

நீட் தேர்வுக்கு எதிராக திமுக மாணவரணி சார்பில் ஜூன் 24ல் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளது. நீட் தேர்வில் நடந்த மோசடி, குளறுபடிகளை கண்டித்து போராட்டம் நடைபெறும் என திமுக மாணவரணி செயலாளர் எழிலரசன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Gurusamy
ஜூன் 20, 2024 11:48

காங்கிரஸ் முதலில் கள்ளசாராய சாவை எதிர்த்து போராட்டம் நடத்த துணிச்சல் உண்டா?


Sivak
ஜூன் 19, 2024 22:44

DMK sponsored programme எங்களுக்கு வருஷத்திற்கு 500 கோடி நஷ்டம் ஆகுது பா நீட் எக்ஸாம்னாலே ... உங்க ஊர்ல போராட்டம் பண்ணுங்க ஒரு 10 கோடி கொடுக்கறேன் ...


என்றும் இந்தியன்
ஜூன் 19, 2024 17:46

நீட் தேர்வு முறைகேடு. முக்கிய நிபந்தனை நீட் தேர்வு குறித்து உங்களுக்கு ஒன்றும் தெரிந்திருக்கக்கூடாது.


Gopi
ஜூன் 19, 2024 16:42

இதில் நளினி சிதம்பரம் பங்கேற்பாரா ?


Mohan
ஜூன் 19, 2024 13:56

ஆஹா என்ன ஒரு கரிசனம், கூட்டணியான விடியல் மீது?. நீட் எதிர்ப்பு போராட்டத்தை மிக வஞ்சகமான மூறையில் சாமர்த்தியம் காண்பித்து, "நீட் முறைகேடு எதிர்ப்பு போராட்டம்" என்று பெயர் சூட்டி, "பலே பாண்டிய காங்கிரஸ் தலை ராகுலும் 40 ஜால்ராக்களும்" புதிய முறையில் மக்களை முட்டாளாக்குகிறார்கள். நீட் கொண்டுவந்தது இந்தியா கூட்டணி தானே, உச்சநீதிமன்றத்தில் "சீராய்வு மனு" போடலாமே. டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் எத்தனை முறை எத்தனை முறைகேடு நடந்தது என்று "ஸ்டாடிஸ்டிக்ஸ்" பார்த்தோம்னா ""நாறிடும்"". தமிழ் நாட்டு ஜனங்களுக்கு ""டாஸ்மாக்கில்""" பிரச்னை இல்லாம சரக்கு கிடைக்கணும், அவ்வளவுதான் உண்மையில் தகுதியும்,ஆர்வமும் உள்ள ஏழை மாணவர்கள் , கஷ்டப்பட்டு நீட்டிற்கு படித்து தேர்வாகி மெடிகல் படிப்பு படிக்க செல்வது அதிகரித்து ள்ளது இப்ப போய் ??


Saai Sundharamurthy AVK
ஜூன் 19, 2024 13:33

போண்டா, பஜ்ஜிகளை சாப்பிட்டு ஜீரணம் ஆக வேண்டுமே ! அதற்கு இது போன்ற போராட்டங்கள் செய்தால் தானே ஜீரணம் ஆகும். வேறு வேலை வெட்டி என்ன இருக்கிறது ????


Duruvesan
ஜூன் 19, 2024 13:21

நீட் எடுத்துட்டா ஏழைகள் பிள்ளைகள் டாக்டர் ஆகும் ஒன்னு அல்லது ரெண்டு, இப்போ 100 கு 90 பிள்ளைகள் ஆகுது, என் பையன் நீட் மூலம் வெறும் 44000 பீஸ் கட்டி மைசூர் ல மருத்துவம் சேர்ந்துட்டாரு. இனி எவனோ எப்படியோ நாசமா போகட்டும், வோட்டு போட்ட அடிமைகளுக்கு நன்றி


Rajasekar Jayaraman
ஜூன் 19, 2024 13:12

பாஜகவுக்கு இது ஒரு பாடம் எந்தத் தவறை எந்த கட்சி செய்தாலும் கண்டுகொள்ளாமல் இருக்கும் பாஜகவுக்கு இதுதான் பாடம்.


Palanisamy Sekar
ஜூன் 19, 2024 12:54

கம்யூனிஸ்டுகளின் தொந்தரவு அடியோடு அழிக்கப்பட்ட நிலையில் இப்போது பதவிக்காக காங்கிரஸ் கிளம்பிவிட்டது. மருத்துவக் கல்லூரிகளின் மறைமுக ஆதரவோடு நடக்கும் இந்த போராட்டத்தை திமுக ஆதரவு ஊடகங்கள் பெரிதுபடுத்தி சம்பாதிக்க முனைப்புக்காட்டும். இயற்றிய சட்டங்களை மாற்றி அமைப்பது அல்லது திருத்தம் செய்வதோ இயலாத நிலையில் இதுபோன்ற தவறுகளுக்கு தக்க தண்டனையை கொடுத்தாலே போதும். தேவையற்ற போராட்டங்களில் காங்கிரசின் பெயர் மேலும் கீழிறங்கும் உறுதியாக


சதீஷ்
ஜூன் 19, 2024 12:28

என்ன ஐயா தாங்களே முறையை புகுத்தி தற்போது குறை சொல்லி தப்பிப்பது தாழ்ந்த அரசியல்வாதியாக சித்தரிக்கும் பொய் புரட்டு இனி எடுபடாது தொடர்ந்து 5வருடம் இந்த புலம்பல் தொடரட்டும்


மேலும் செய்திகள்