உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வருகிறது புதிய ஒய்வூதிய திட்டம் : மத்திய அரசு ஊழியர்களுக்கு ‛குட் நியூஸ்

வருகிறது புதிய ஒய்வூதிய திட்டம் : மத்திய அரசு ஊழியர்களுக்கு ‛குட் நியூஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மத்திய அரசு ஊழியர்கள் பயன் பெறும் வகையில் ‛‛ஒருங்கிணைந்த ஒய்வு திட்டத்திற்கு'' மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிர்மலா சீத்தாராமன், நட்டா, அஷ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் ஒருங்கிணைந்த ஒய்வூய்திய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.இதுதொடர்பாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியது, ஒருங்கிணைந்த ஒய்வூதிய திட்டம் கொண்டு வர அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. புதிய ஒய்வூதிய திட்டத்தின்படி மத்திய அரசு ஊழியர்கள் ஒய்வுக்கு முன்பாக சிறு தொகையை பெற்றுக்கொள்ளலாம். மத்திய அரசு ஊழியர்கள் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணியை முடித்திருந்தால், ஓய்வு பெறுவதற்கு முந்தைய கடந்த 12 மாதங்களில் பெறப்பட்ட அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக பெற்றுக்கொள்ளலாம். பணியின் போது மத்திய அரசு ஊழியர்கள் இறந்து விட்டால், குடும்ப ஒய்வூதிட்டத்தின் கீழ் 60 சதவீத ஒய்வூதிய பலனை அடைய முடியும் இதன் மூலம் 23 லட்சம் ஒய்வூதியர்கள் பலனடைவர். தற்போதைய ஓய்வூதியத் திட்டத்தில் ஊழியர்களின் 10 சதவீத பங்களிப்பையும், மத்திய அரசு 14 சதவீத பங்களிப்பையும் வழங்குகிறது, புதிய ஒய்வூதிட்டத்தின் கீழ் மத்திய அரசு பங்களிப்பு 18 சதவீதமாக உயர்த்தப்படும் . இத்திட்டம் 2025 ம் ஆண்டு ஏப்.01ம் தேதிமுதல் அமல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Venktachalam
ஆக 27, 2024 05:22

அருமையான திட்டம். அரசு ஊழியர்களுக்கு எல்லா வகையான ஓய்வூதிய பலன்கள் கிடைக்கும்.


J.Isaac
ஆக 25, 2024 13:34

ஏழை எளிய மக்களின் ரத்தத்தை ஊறிஞ்சி மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போலாகும்.


SRINIVASARAGHAVAN.S
ஆக 25, 2024 10:02

வழக்கம்போல, தனியார் துறை ஓய்வூதியர்களைப் பறாறிய அக்கறையின்மை. என் அளவே மாதச் சம்பளம் வாங்கி வந்த , என் சம வயதுடைய மாநில/மத்ய அரசுப் பணியாளர்கள் பரவலாக₹ 20,000/- முதல் ₹ 40,000/- வரை ஓய்வூதியம் பெறுகிறார்கள். எனக்கு வந்த பிஎஃப் மற்றும் க்ராஜுடி தொகைக்கான மாத வட்டிப் பணம், 2012 ல் ₹ 9,750/- என இருந்தது, தற்போது 2024ல் ₹ 8,250/- எனக் குறைந்து விட்டது. ஃபேமிலி பென்ஷன் மாதம் ₹ 1921/- மாறாமல் வருகிறது. இந்த பத்தாயிரத்தை வைத்துக் கொண்டு, வயதான தம்பதியர் வாடகை தந்து, உணவு உண்டு, மின் கட்டணம் செலுத்தி, மருத்துவச் செலவுகளைச் செய்து, போக்குவரத்துச் செலவுகள், மொபைல் பில்போன்றவற்றை எப்படிச் சமாளிக்க முடியும். ஓய்வூதியத்தை மறு பரிசீலனை செய்தால் அரசு தனியார் என்று இரு துறையினருக்கும் செய்ய வேண்டும்.அல்லது இரு தரப்பினருக்கும் பென்ஷனை உயர்த்தாமல் இருக்கலாம். காங்கிரஸ், பாஜக இந்த விஷயத்திலும்மத்ர வர்க்க வருமான வரியிலும்ஒரே ஜாதியாக இருப்பது வேதனை தருகிறது. மோடிஜியிடம் நாங்கள் நிறைய எதிர் பாய்க்கவில்லை எனினும், தனியார் ஓய்வூதியர்களுக்கு அடிப்படை அங்கீகாரமாவது தர வேண்டும் என கண்ணீருடன் வேண்டுகிறேன்.


Sri
ஆக 24, 2024 22:41

இது 20% மத்திய அரசு பாங்க் ஊழியர்கள் பொதுதுறை ஊழியர்களுக்கும்..மற்றும் 29 மாநில அரசுகளுககும் தங்களது 25% ஊழியர்களுக்கும் பண நோட்டு அடித்தோ அரசு கடன் பத்திரம் மூலமோ வழங்கும் ஓட்டு அரசியலுக்காக...ஐடி ஊழியர் தவிர மற்ற50% மக்கள் இந்திய புண்ணிய பூமியில் வாழ வழியின்றி மடிவர்..செலவினங்களையும் லஞ்ச லாவண்யங்களை குறைககாமல் இப்படி 50% மக்களின் முலம் இதை சுமத்தி மாபாதக செயலை செய்கிறார்கள் இந்த அரசியல் விற்பன்னர்கள் .


மத்திய அரசு ஊழியன்.ராதாகிருஷ்ணன் (மனுகுரு) தெலங்கானா.
ஆக 24, 2024 22:26

எதுவும் தேவையில்லை. அளவிற்கு அதிகமாகவே கொடுக்கப்படுகின்றது. மோதியின் அரசு வாழ்க. ....


gmm
ஆக 24, 2024 22:16

25 ஆண்டுகள் பணி முடிப்பு சரி. ஓய்வு பெறுவதற்கு 12 மாத சம்பளம் கொண்டு முடிவு செய்யும் போது, குறுகிய காலத்தில் பணம் பெற்று பதவி உயர்வு கொடுத்து விடுவர். அல்லது சீனியர் மீது குற்றம் சாட்டி, பலனை மாற்றி விடுவர். பணி கால மொத்த சம்பளம் எடுக்க வேண்டும்.


subramanian
ஆக 24, 2024 21:50

வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும்


Sridhar
ஆக 24, 2024 21:34

Pension per se must be abolished. Like private company employees, let the government employees too must be asked to save and use during retirement.


Swamimalai Siva
ஆக 24, 2024 21:33

மத்திய அரசு பொதுத்துறையில் 40 வருடங்கள் வேலை செய்த நான் வாங்குவது ரூ1,500/- தான்.


Mukundan Arasanipalai Sadagopachari
ஆக 24, 2024 21:12

எனி பயன்பெற. பென்ஷன் அட்வான்ஸ் பய்மேன்ட் ஐஸ் குவேன் பிட்டுறே ஒன ரெடிரிட்மென்ட் பென்ஷனேர்ஸ் வில்ல பீல் போர் ரெஸிவிங் லேஸ் பெனிபிட்ஸ் எவேதோக்ஹ் தே ரெஸிவேட் சோமே அமௌன்ட்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை