உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேரள நர்சை காப்பாற்ற ரூ.34.7 லட்சம் நிதி: மத்திய அரசு தகவல்

கேரள நர்சை காப்பாற்ற ரூ.34.7 லட்சம் நிதி: மத்திய அரசு தகவல்

புதுடில்லி: ஏமனில் மரண தண்டனை பிடியில் உள்ள கேரளாவைச் சேர்ந்த நர்ஸ் நிமிஷா பிரியாவை காப்பாற்ற, மத்திய அரசு 34.73 லட்சம் வழங்கி உள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்தவர், நர்ஸ் நிமிஷா பிரியா, 36. இவர் மேற்காசிய நாடான ஏமனில் நர்சாக பணிபுரிந்து வந்தார். கடந்த 2014ல், அவரது கணவர் மற்றும் பெண் குழந்தை இந்தியாவுக்கு திரும்பினர். அந்த ஆண்டில் ஏமனில் உள்நாட்டு போர் ஏற்பட்டதால், நிமிஷா பிரியாவால் நாடு திரும்ப முடியவில்லை.கடந்த 2017 ம் ஆண்டு ஏமனில் நர்சாக பணியாற்றிய போது, அந்நாட்டை சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவரை கொலை செய்த குற்றச்சாட்டில் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. அது முதல் அவர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரது மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அந்நாட்டு சட்டப்படி, இறந்தவரின் குடும்பத்துடன் பேச்சு நடத்தி அவர்களிடம் மன்னிப்புக் கேட்டு அவர்கள் கேட்கும் பணத்தை நஷ்ட ஈடாக வழங்குவதுடன், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர், மன்னித்தால் தண்டனை தள்ளுபடி செய்யப்பம் எனும் வழக்கம் உள்ளது. இதனை பயன்படுத்தி நிமிஷா பிரியாவை காப்பாற்ற முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த எம்.பி., ஜான் பிரிட்டாஸ் எழுப்பிய கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் அளித்த பதில்: நிமிஷா பிரியாவை விடுதலை செய்வதற்காக மத்திய அரசு ரூ.34,73 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளது. இந்த பணம், ஏமனில் உயிரிழந்த நபரின் வங்கிக்கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், சிறையில் இருந்து நிமிஷா பிரியா விடுதலை செய்யப்படுவது என்பது இனிமேல், அவரின் குடும்பத்திற்கும், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கும் இடையிலானது. அவரது தாயார் ஏமன் செல்லவும், வழக்கை நடத்த அந்நாட்டு வழக்கறிஞரை நியமிக்கவும் மத்திய அரசு உதவியது. இந்த விஷயம் உணர்ச்சிமிக்கது என்பதால், அனைவரும் கவனமுடன் இருக்க வேண்டும். பேச்சுவார்த்தையில் எந்த பின்னடைவு ஏற்பட்டாலும், அதில் நிமிஷா பிரியாவின் விடுதலையில் பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
பிப் 15, 2025 13:57

இந்த நர்ஸ் மேல் சாட்டப்பட்டுள்ள கொலை குற்றம் உண்மையில் கொலை இல்லை. சிகிச்சையின் போது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. அவ்வளவே. இதனை கொலை குற்றம் அளவுக்கு கொண்டு சென்றதற்கு காரணம் பணத்தாசை தான். மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் அந்த நாட்டு சட்டபடி பாதிக்கப்பட்ட நபரின் குடும்ப உறுப்பினர்கள் மன்னித்தால் விடுதலை செய்யலலாம். பாதிக்கப்பட்ட நபரின் உறவினர்கள் ஈடாக பணம் பெற்றுக் கொண்டு மன்னிப்பார்கள். இது அங்கே உள்ள நடைமுறை ஏறக்குறைய அனைத்து அரபு நாடுகளிலும் இதே நிலை தான். குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதால் சிக்கல் எதுவும் வரக்கூடாது என்பதற்காக இந்த பெண்மணியின் விடுதலையில் மத்திய அரசு மிகவும் அடக்கி வாசிக்கிறது. நல்லது நடக்க நாமும் இறைவனை வழிபட வேண்டும். அல்லா நிச்சயம் நல்வழி காட்டுவார் என நம்புவோம். இதே போல சவூதியில் ஒரு ஓட்டுநர் ஒருவரை காப்பாற்ற பிரபலமான நகை கடை ஒன்று உதவியது.


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 14, 2025 22:47

இவர் குற்றமிழைத்தாரா என்று கூட ஆராயாமல் இங்கே நான் உட்பட பலர் இவரை ஆதரித்து எழுதினோம்... பிறகுதான் தெரிந்தது இவர் வேண்டுமென்றே செய்துள்ள தகவல் .....


Amar Akbar Antony
பிப் 14, 2025 21:23

அது கேரளா தமிழ்நாடு அல்ல. உண்மையை உரக்க பேசும் makkal


Ramesh Sargam
பிப் 14, 2025 21:11

மத்திய அரசு தன்னுடைய கடமையை சிறப்பாக செய்துள்ளது. இனி இரு குடும்பத்தினரும் பேசி, பேச்சில் சமரசம் ஏட்பட்டு, நர்ஸ் விடுதலை பெற வேண்டும். முடிந்தால் வாய் கிழிய பேசும் எதிர் கட்சி தலைவர்கள் நர்ஸ் விடுதலைக்கு உதவலாம்.


hari
பிப் 14, 2025 20:50

why govt has to support an accused. she was sentenced to death. so no need to support. no religion on this issue


Anantharaman Srinivasan
பிப் 14, 2025 20:49

எந்த சந்தர்ப்பத்தில் இந்த கொலை நிகழ்ந்தது. கொலை குற்றவாளிக்கு அரசு பணத்தை கொடுத்து காப்பாற்ற வேண்டிய அவசியமென்ன.??


M Ramachandran
பிப் 14, 2025 20:14

கேரளாக்காரங்களுக்கு நண்ணி என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாது. கம்மிகளாக ஊறி போயி தோலும் கெணமாயி போச்சி போயிடுச்சி.


GMM
பிப் 14, 2025 20:00

உலகு எங்கும் போலீஸ், வக்கீல், நீதிபதி, அரசியல்வாதிகள் அல்லது அரசர் சட்ட அமுல் முறை கணிக்க முடியாது. அளவிட முடியாது. நர்ஸ் ஒரு நோயாளியை மருத்துவமனையில் எப்படி பராமரிப்பு மற்றும் உதவி செய்வார் என்று அறிய, தனியார் மருத்துவ இல்லத்தின் சில நாள் தங்கி மருத்துவம் பார்த்தால் தெரியும். கொலை செய்ய வாய்ப்பு இல்லை. சூழ்நிலை கைதி. ஜான் இவ்வளவு கேள்வி கேட்கும் போது, கேரளா மக்கள் பிரதிநிதி உறுப்பினர்கள் அனைவரும் ஒரு மாத சம்பளம் கொடுக்க முன் வந்து இருக்க வேண்டும். பணம் மன்னிப்பு உயிர் பிழைப்பு. ஓட்டு வாங்கிய விஜயன் குரூப் மௌனம். மத்திய அரசு இயன்ற உதவி. நல்ல மக்கள் பிரதிநிதிகள் தேவை.


N.Purushothaman
பிப் 14, 2025 19:54

மத்திய அரசு அவர்களை இந்தியராக பார்க்குது ....ஆனா இங்க இருக்கிற மதவாதிகளுக்கு பா.ஜ மதவாத கட்சி ...


கல்யாணராமன்
பிப் 14, 2025 19:31

அந்த பெண் நர்ஸ் கேரளாவில் வந்து இறங்கியவுடன் முதல்வர் பிணராயி விஜயனுக்கு நன்றி என்று பேட்டி கொடுப்பார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை