உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேரளாவில் மீண்டும் பரவ தொடங்கிய நிபா வைரஸ்: 3 மாவட்டங்களுக்கு அலர்ட்

கேரளாவில் மீண்டும் பரவ தொடங்கிய நிபா வைரஸ்: 3 மாவட்டங்களுக்கு அலர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்; கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பரவத் தொடங்கி உள்ளதால் 3 மாவட்டங்களுக்கு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.கேரளாவில் கடந்த மே மாதம் நிபா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அதன் பின்னர் சுகாதார நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டது. இந் நிலையில் ஜூன் 28ம் தேதி கோட்டக்கல் பகுதியில் நிபா வைரஸ் தொற்றுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர், பின்னர் மூளைச்சாவு அடைந்தார். அவருடன் தொடர்புடைய 100க்கும் மேற்பட்டோருக்கு தொற்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.இதேபோன்று மலப்புரம் மாவட்டத்தில் பெண் ஒருவர் நிபா வைரஸ் அறிகுறிகளுடன் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு நிபா வைரஸ் காய்ச்சல் இருப்பது உறுதியானது.இதையடுத்து கோழிக்கோடு, மலப்புரம், பாலக்காடு ஆகிய 3 மாவட்டங்களில் சுகாதார முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. பாலக்காடு மாவட்டத்தில் உள்ள 6 வார்டுகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள கல்வி நிலையங்கள் தற்காலிகமாக மூடுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Vijay D Ratnam
ஜூலை 04, 2025 21:34

கேரளா ஒரு நோஞ்சான் மாநிலம். பறவைக்காய்ச்சல், பன்றிக்காய்ச்சல், சிக்குன் குன்யா, கொரோனா, நிபா வைரஸ் எல்லா கருமமும் கேரளாவில்தான் தொடங்குது. சேச்சியும் சேட்டனும் மாட்டுக்கறியும், வாத்துக்கறியும், வாத்துமுட்டையும், மத்தி மீனும் நல்லா அதிகமா அடிச்சி விடுவதாலோ என்னவோ.


suresh Sridharan
ஜூலை 04, 2025 19:02

நிப்பா வைரஸ் பெரிய பாதிப்பு இல்லை வெறும் சாதாரண காய்ச்சல் பவளமல்லி இலை மல்லி கசாயம் எனது 400 மில்லி தண்ணீர் அதில் பொடி செய்து விட்டு விலையை பிச்சிட்டு கொதிக்க வைத்து 200 மில்லி ஆக்கியதும் அதில் நாலு துள்ளி லெமன் பில்டர் செய்து சூடோடு குடிக்கவும்


சமீபத்திய செய்தி