உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமெரிக்காவில் போதுமான பொறியியல் பட்டதாரிகள் இல்லை: சசி தரூர்

அமெரிக்காவில் போதுமான பொறியியல் பட்டதாரிகள் இல்லை: சசி தரூர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' அமெரிக்காவில் போதுமான பொறியியல் பட்டதாரிகள் மற்றும் மென்பொருள் வல்லுநர்கள் இல்லை,'' என எச்1பி விசா குறித்த விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் கூறியுள்ளார்.அமெரிக்க குடியுரிமை பெறாத வெளிநாட்டினர் அங்கு தங்கி பணியாற்றுவதற்கான எச்1பி விசா பெறுவதற்கான கட்டணத்தை அதிபர் டிரம்ப் ரூ.88 லட்சமாக உயர்த்தி உள்ளார். இது தொடர்பாக மத்திய அரசை காங்கிரஸ் தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.இந்நிலையில் திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்பி சசி தரூர் கூறியதாவது:இந்த எச்1பி விசா விவகாரத்தில் நாம் விதியை வகுக்க வேண்டாம். இது நமக்கு பின்னடைவு. எதிர்பாராதது. இது குறுகிய காலத்தில் சில தனி நபர்களையும் நிறுவனங்களையும் பாதிக்கும். ஆனால், நீண்ட காலத்துக்கு உண்மையில் நம்மை வலுப்படுத்தக்கூடிய வகையில் பதில்களும் உள்ளன. இந்த விஷயத்தில் நாம் பாதிக்கப்பட்டவர்கள் என்று தொடர்ந்து எண்ணக்கூடாது.இந்த ஆண்டின் துவக்கத்தில் டிரம்ப் நமக்கு எதிர்மறையான திசையில் கணிக்க முடியாதவராக இருக்க முடிந்தால், வரும் காலங்களில் அவர் நமக்கு எ திர்பாராத விதமாக நேர்மறையாக மாறக்கூடும். அமெரிக்காவில் போதுமான பொறியியல் பட்டதாரிகள் மற்றும் மென்பொருள் வல்லுநர்கள் இல்லை. டிரம்ப்பின் முடிவின் விளைவானது, தற்போது அமெரிக்காவில் செய்யப்படும் சில வேலைகள் பிரிட்டன் மற்றும் அயர்லாந்தில் உள்ள நிறுவனங்களின் கிளைகளுக்கும் பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இந்தியாவிற்கும் கூட அதிகமாக அவுட்சோர்சிங் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

past
செப் 23, 2025 11:18

Slave of sunanda case !!!!


அப்பாவி
செப் 23, 2025 07:21

இந்தியாவுல தடுக்கி விழுந்தா இஞ்சினீயர் மேல விழற மாதிரி பட்டதாரிகள் இருக்காங்களே? ஏன் அமெரிக்கா மாதிரி முன்னேறல?


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 23, 2025 11:35

ஏன்னா அமெரிக்கா மக்கள் தொகை 35 கோடி இந்திய மக்கள் தொகை 140 கோடி 2014 வரை இந்தியா தொழில்நுட்பத்திற்கு இந்தியா வெளி நாடுகளையே சார்ந்திருந்தது இப்போது தான் தற்சார்பு பாரதம் ஆத்ம நிர்மார் பாரத் என்று கொண்டு வந்து தொழில்நுட்பத்தில் தன்னிறைவு நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம். முதலில் ராணுவத்திற்கு விமானம் வாங்க வேண்டும் என்றால் விமானம் மட்டும் வாங்குவோம் அதுவும் ஒரு புரோக்கர் கம்பெனி மூலமாக. ஆனால் தற்போது இந்தியா நேரடியாக வாங்குகிறது புரோக்கர் இல்லாமல் மேலும் குறிப்பிட்ட அளவு விமானம் வந்தவுடன் மீதி விமானங்கள் இந்தியாவில் தயாரிக்க வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்படுகிறது. 60 ஆண்டுகள் அமெரிக்காவை பார் ரஷ்யாவை பார் சீனாவை பார் என்றே நம்மை வளர்த்து விட்டார்கள். இப்போது தான் இந்தியாவை பார் என்று நம்மை வளர்க்க ஆரம்பித்து உள்ளார்கள்


Iyer
செப் 23, 2025 06:40

SOFTWARE துறையில் இன்னும் 20-30 வருடங்கள் வரை உலகம் இந்தியாவின் மீதே சார்ந்து இருக்கவேண்டிய கட்டாயம்


Kasimani Baskaran
செப் 23, 2025 04:12

இல்லை என்பது பல காலமாக உண்மைதான் - ஆனால் அந்த வெற்றிடத்தை வெளிநாட்டவர்களை வைத்து நிரப்பி விடலாம் என்பது ஒரு வகை கனவு. உள்ளூர் மனிதவளத்தை பாதுகாக்கிறேன் பேர்வழி என்று பல மாற்று ஏற்பாடுகள் கூட அங்கு உண்டு. சமீப டிவிஸ்ட்டாக இன்று ஏஐ வேறு பிரச்சினைகளை சிக்கலாக்கி விட்டது. இப்பொழுது டிரம்ப் வேறு புது பரிமாணத்தில் விளையாடிக்கொண்டு இருக்கிறார்.


Ramesh Sargam
செப் 23, 2025 02:20

இப்பொழுதுள்ள அமெரிக்க அதிபரே முற்றிலும் சரியில்லை. அமெரிக்காவின் இன்றைய வளர்ச்சிக்கு காரணமே இந்தியா, சீனா போன்ற வேறு நாடுகளிலிருந்து சென்று அங்கு வேலை பார்க்கும் பொறியியல் பட்டதாரிகள் மூலமாக ஏற்பட்டவைதான்.


spr
செப் 23, 2025 01:04

பிற நாடுகளில் போதுமான பொறியியல் பட்டதாரிகள் இல்லை என்பது உண்மையாக இருக்கலாம் ஆனால் இந்தியாவில் தேறிய பொறியியல் பட்டதாரிகளுக்குப் போதுமான தொழிற்துறை அறிமுக அறிவு இல்லை. நம் கல்வி முறை இதனைச் சீர் செய்ய வேண்டும். அப்படியிருந்தால், இங்கிருந்து அவர்களை அனுப்பும் நிறுவனம் இந்த அதிகத் தொகை குறித்தெல்லாம் கவலைப்படத் தேவையில்லை. AI தொழில் நுணுக்கம் அதிகமாகத் தொடங்கினால் திரும்பத் திரும்பச் செய்யும் தொழிலை கணிணிகளே செய்துவிடும். அந்தத் தொழில் நுட்பத்தை வடிவமைக்கும் அறிவே இனி தேவை நம் கல்லூரிகள் ஆயுத்தமாகிவிட்டனவா? இந்த வரி அதிகரிப்பு இங்கிருந்து தொழில் செய்தாலும் நிருவனங்களுக்குப் பிரச்சினைதான். கூகிள் அமேசான் போன்ற பன்னாட்டு நிறுவனங்களைச் சார்ந்திராமல், அவற்றுக்கு மாற்றுவழிகளைக் கண்டறிந்து நம்மால் செயலாற்ற முடிந்தால், அவை மூடப்படும் நம் திறமைக்குத் தேவை தானே உண்டாகும்


Sivagiri
செப் 23, 2025 00:47

கரெக்டு , அமேரிக்கால , இங்கிலாண்டுல பொறந்து வளர்ந்தவனெல்லாம் , மேதைகள் என்ற இமேஜ் வளர்த்து வச்சிருக்காங்க , நிஜத்தில் , அமெரிக்காவில் பாதிபேர் பள்ளி படிப்பை தாண்டாதவர்கள் , ஏனென்றால் அங்கே கல்வியும் ஒரு காஸ்டலியான கம்மாடிட்டி . . . எக்கச்சக்கமான பணம் இருந்தால்தான் மேலே படித்துக் கொண்டே இருக்கலாம் , இங்கே போல எளிதாக கிடைக்க கூடியது அல்ல , , , பார்ட் டைம் வேலை செய்து கொண்டு படிப்பவர்கள்தான் அனைவரும் , , , ,


சாமானியன்
செப் 22, 2025 22:43

சசி தரூர் கருத்து மிகவும் சரியே. இந்தியர்களை நாடுகடத்துவதை விட அவர்களது சம்பளத்தை 10% குறைக்கலாம். இல்லாவிட்டால் வருமான வரி 10% உயர்த்தலாம். மற்ற விஷயங்களை அறிய நிர்மலாஜி ஃபோனில் பேசவும் டிரம்ப் அவர்களே !


கடல் நண்டு
செப் 22, 2025 22:41

இரும்பு கரம் கொண்ட ஓங்கோல் சர்வாதிகாரி டாஸ்மாக் மூலம் கிட்டதட்ட வீட்டுக்கு 1 ஊதாரியை உருவாக்கி வருகிறார் .. விரைவில் அமெரிக்கா இல்லன்னா அன்டார்டிக்காவுக்கு அனுப்பி வைப்பார் …


Krishnamurthy venkatramanan
செப் 23, 2025 00:11

super


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை