உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஓட்டுத் திருட்டு விவகாரத்தை விடவில்லை: ராகுல்

ஓட்டுத் திருட்டு விவகாரத்தை விடவில்லை: ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: ''ஓட்டுத் திருட்டு விவகாரத்தை நான் விடவில்லை. பிரதமர், அமித்ஷா, தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் ஓட்டுகளை திருடியுள்ளனர் என நான் தெளிவாக கூறுகிறேன்'', என காங்கிரஸ் எம்பி ராகுல் கூறியுள்ளார்.கிஷன்கஞ்ச்சில் நிருபர்களிடம் ராகுல் கூறியதாவது: ஹரியானாவில் நடந்த 25 லட்சம் ஓட்டுத்திருட்டு குறித்த தகவல்களை வெளியிட்டேன். ஆனால், மீடியாக்கள் அதனை காட்டவில்லை. இதனை முன்னிலைப்படுத்தியிருக்க வேண்டும் . ஓட்டுத் திருட்டு விவகாரத்தை நான் விடவில்லை. பிரதமர், அமித்ஷா, தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் ஓட்டுகளை திருடியுள்ளனர் என நான் தெளிவாக கூறுகிறேன். அவர்களின் முழுமுயற்சி நடக்கிறது. மீண்டும் இது நடக்காமல் இருப்பதற்கு ஓட்டுச்சாவடிகளில் விழிப்புடன் இருப்பது உங்களின் கடமை என பீஹார் இளைஞர்கள், மாணவர்களின் கடமை. அம்பானி, அதானிக்காக மோடியும், நிதீஷ்குமாரும் பணியாற்றி வருகின்றனர். உங்களின் எதிர்காலத்தை திருட வேண்டும் என்பதற்காக, ஓட்டுக்களை திருட முயற்சி செய்கின்றனர்.ஹரியானாவில் 25 லட்சம் ஓட்டுகள் திருடப்பட்டுள்ளன. ஒன்றிரண்டு ஓட்டுச்சாவடிகளில் பிரேசில் மாடலின் புகைப்படம் 200 முறை இடம்பெற்றுள்ளது. உ.பி.,யில் இருந்து ஓட்டுப்போட பாஜ தொண்டர்கள் ஹரியானா வந்துள்ளனர். என்னிடம் நீங்கள் கேள்வி கேட்கின்றீர்கள். ஆனால், உண்மையான பிரச்னை ஓட்டுத் திருட்டு. இவ்வாறு ராகுல் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

திகழ் ஓவியன், AJAX AND
நவ 10, 2025 14:05

ரெண்டு தொகுதியில் நின்று ஒன்றில் தேற்று poonaan. இவனின் பாட்டி அரசு ஓட்டு திருட்டு காக ஓட்டு மொத்தமாக கலைக்க பட்டது...முதல் ஓட்டு திருட்டு கூட்டம் Khan க்ரூஸ்


VENKATASUBRAMANIAN
நவ 10, 2025 08:13

இப்படியே பேசுங்கள் அதுதான் பாஜகவுக்கு நல்லது. ஒரு எதிர்கட்சியாக செயல் பட முடியவில்லை. எப்போதும் இப்படியே பேசிக்கொண்டு இருந்தால் மக்கள் உங்களை நிராகரிப்பார்கள்


raja
நவ 10, 2025 06:13

தொடர்ந்து அவpதூறு பரப்பும் இந்த கேடுகெட்ட இழி பிறவியை கைது செய்து உள்ளே தூக்கி போட்டு உதைக்க முடியாதா...


Venugopal, S
நவ 10, 2025 05:16

கான் க்ரூஸ் ஆளும் மாநிலங்களில் ஓட்டு திருட்டு செய்து வெற்றி பெற்றனர்...திருடர்கள் கூட்டம். எச்சரிக்கை...


rama adhavan
நவ 09, 2025 23:39

குணசீலம், ஏர்வாடியில் கட்டாயம் மந்திரிக்க வேணும்.


சாமானியன்
நவ 09, 2025 22:22

ஐந்து வயது குழந்தை கூட சொல்லும் ராகுல் பேசுவது அபத்தம் என்று. அப்படி வாக்குத் திருட்டு ஏற்படக் கூடாது என்பதற்காகவே அடிக்கடி S.I.R நடக்கின்றது.


D Natarajan
நவ 09, 2025 22:08

சிங்க்வி, கபில் சிபல் தயாராய் இருப்பார்களே


Vasan
நவ 09, 2025 22:04

All voter ID to be linked with Aadhaar ID.


vadivelu
நவ 10, 2025 09:54

ஆதார் உங்களின் வசிக்கும் முகவரியின் அடையாளம், அவ்வளவே, உங்கள் குடியுரிமையின் அடையாளம் இல்லை. நாட்டின் தேர்தலில் நாட்டின் குடிகள் மட்டுமே வாக்களிக்க முடியும்.


பாரத புதல்வன்
நவ 09, 2025 21:36

இத்தாலி மனநல காப்பகத்தில் சேர்த்து விடவும்.


Balasubramanian
நவ 09, 2025 21:31

நாங்களும் இந்த விவகாரத்தை விட்டு விடப் போவதில்லை! பீகாரில் தேர்தல் முடிவுகள் தெரிந்த பிறகு நீங்கள் சொல்ல போவதை கேட்க ஆவலாக இருக்கிறோம்!


சமீபத்திய செய்தி