உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தமிழகத்தில் தமிழ் படிப்போர் எண்ணிக்கை குறைவு: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்

தமிழகத்தில் தமிழ் படிப்போர் எண்ணிக்கை குறைவு: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்

புதுடில்லி: '' தமிழகத்தில் தமிழ் படிப்போர் எண்ணிக்கை குறைந்துவிட்டது, '' என ராஜ்யசபாவில் பேசும் போது மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.தேசிய கல்விக்கொள்கை தொடர்பாக நேற்று லோக்சபாவில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க., எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரிய தர்மேந்திர பிரதான், பேசியதை வாபஸ் பெற்றுக் கொண்டார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zxl9voru&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், இன்று ராஜ்யசபாவில் தர்மேந்திர பிரதான் பேசியதாவது: திருக்குறளை அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிப்பெயர்க்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். பிஎம்ஸ்ரீ பள்ளிகள் திட்டம் தொடர்பாக தலைமைச்செயலர் கடந்த ஆண்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். அதில், பிஎம்ஸ்ரீ பள்ளிகளை நிறுவ தமிழக அரசு ஆர்வமாக இருக்கிறது எனக்கூறியிருந்தார். மாநில அரசுகளுடன் ஆலோசித்த பிறகே புதிய தேசிய கல்விக்கொள்கை இறுதி செய்யப்பட்டது. 1963 ல் கொண்டு வரப்பட்ட மும்மொழிக் கொள்கைக்கும், தற்போதைய மும்மொழிக் கொள்கைக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. உலகத்தின் தேவையை கருத்தில் கொண்டு தான் மும்மொழிக் கொள்கை கொண்டு வரப்பட்டது. 5ம் வகுப்பு வரை அந்த மாநிலத்தின் மொழியில் தான் கல்வி கற்பிக்க வேண்டும் என கல்விக்கொள்கையில் கூறப்பட்டு உள்ளது.தமிழ் மொழியை கற்க விரும்புகிறேன். தமிழ் மொழி அனைவருக்கும் பொதுவானது. பிரதமர் மோடி அரசு தமிழர்களுக்கும், தமிழகத்திற்கும் விரோதமானது அல்ல. எந்த மொழியையும் நாங்கள் திணிக்கவில்லை. தி.மு.க., எம்.பி.,க்களின் வலி எனக்கு புரிகிறது. என்னுடைய பேச்சு யாரையும் புண்படுத்தி இருந்தால் 100 முறை மன்னிப்பு கேட்டு தயார். ஆந்திராவில் 10 மொழிகளை கற்பிக்கத் தயார் என சந்திரபாபு கூறியுள்ளார். எங்களுக்கு இரு மொழியே போதும் எனக்கூறுபவர்களின் அரசுப் பள்ளிகளில் தமிழ் படிப்போர் எண்ணிக்கை குறைந்துவிட்டனர். தமிழக சட்டசபையில் ஜெயலலிதாவை எப்படி நடத்தினீர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். எப்படி நடந்து கொள்ள வேண்டும் என யாரும் பாடம் எடுக்க வேண்டாம். தமிழகத்தில் உள்ள 1500 சிறுபான்மையின பள்ளிகளில் 900 பள்ளிகளில் மும்மொழி கற்றுத்தரப்படுகிறது. மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளும் மும்மொளிகளில் ஒன்றாக கற்பிக்கப்படுகிறது. நாமக்கல்லைச் சேர்ந்த பெண்ணிடம் பேசிய போது ஹிந்தி கற்க ஆர்வமாக உள்ளதாக கூறினார். இது தான் புதிய தமிழகம்.ஹிந்தி, சமஸ்கிருதம் படிக்க வேண்டும் என எங்கேயும் கட்டாயப்படுத்தவில்லை. இந்தியாவின் வரலாற்றை பற்றி பெருமிதம் கொள்ளாதவர்களை என்ன செய்வது. தி.மு.க.,வினர் தனி உலகில் வாழலாம். ஆனால், அதுதான் உண்மை. என்னை நீங்கள் முட்டாள் எனக்கூற முடியாது. தமிழக மக்களை ஏமாற்ற முடியாது. என் மீதான தனிப்பட்ட தாக்குதல்களை அவர்கள் தொடரட்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
மார் 12, 2025 11:57

தமிழகத்தில் தமிழின் இன்றைய நிலைமை. குட் மார்னிங் சார் நேத்து என்ன பண்ணிங்க. உடம்புக்கு சரியில்லை ஃபீவர் சொன்னீங்கடாக்டர் கிட்ட செக் பண்ணி மெடிசின் எடுத்துட்டீங்களா. முடியவில்லைன்ன செகன்ட் ஒப்பீனியன் பார்த்துக்கோங்க. மார்னிங் பிரேக் பாஸ்ட் முடிஞ்சதா. நான் பிரேக் பாஸ்ட் முடிச்சுட்டு லஞ்ச் மீல்ஸ் வித் எக் பேக் பண்ணிட்டு ஆபீஸ் போய்ட்டு இருக்கேன். ஆஃபீஸ்லே வொர்க் ரொம்ப ஹெவி சார். அசிஸ்டென்ட் டூ டேஷ் லீவு ஏதோ மேரேஜ்மா. எல்லாமே லோன்லியா நானே செய்ய வேண்டியதா இருக்கு. பக்கத்து கேபின் பாஸ்கர் ட்ரெயின் லேட் வே வருது. அவரு கொஞ்சம் எர்லியரா வந்தா டைம் ஈஸியா பாஸ் ஆயிடும். என்ன பன்றது ஒரே ஸ்டெர்ஸ் சார். இது சாம்பிள் தான். இது தான் 60 ஆண்டுகள் திராவிட தமிழ் வளர்த்த விதம். வாழ்க தமிழ் வெல்க தமிழகம்


Palanisamy T
மார் 12, 2025 04:02

2. தமிழ்மொழியின் அருமையுணர்ந்தவன் அதன் மேலான சிறப்பை யறிந்தவன் தன் பிள்ளைக்கு ஆரம்பக் கல்வி தமிழாக யிருக்கவேண்டுமென்பதை உணர்ந்து "அ" என்ற அகரயெழுத்து மூலம் அவர்களின் கல்வி வாழ்க்கை தொடங்கவேண்டு மென்பதையறிவான். தமிழில் மட்டும்தான் "அ" என்ற அகரயெழுத்து உண்டு வேறு மொழிகளுக்கு இல்லை. இனிமேலும் இருக்காது. அதனால்தான் தமிழுக்கு தமிழ் தாய் வாழ்த்துப் பாடலில் கோவிலும் அமைந்திருக்கின்றது. தமிழ் மேலான உயர்ந்த மொழி. இன்றைக்கும் இந்த உண்மையறியாத வடிக்கட்டின மூடர்கள் நாம் "தலைவாரி பூச்சூடி உன்னை பாடசாலைக்கு போவென்று சோன்னாலும் நன்மை, விலைப்போட்டு வாங்கவா முடியும் கல்வி விலைப் போட்டு வாங்கவா முடியும்" என்ற பாரதிதாசன் பாடலை நாம் இன்று நினைவுக் கூறுவோம். இன்றைக்கு பலச் செல்வந்தர்கள் அரசியல் செல்வாக்கும் வசதியும் படைத்தவர்கள் இன்றைக்கு தங்களின் பிள்ளைகளின் ஆரம்பிக் கல்விக்கும் மேலை நாடுகளில் விலைப் போட்டு வாங்கி கொண்டிருக்கின்றார்கள் அது அவர்களின் சொந்த ஊரிமை, விருப்பம்.


Palanisamy T
மார் 12, 2025 03:15

1. தமிழகத்தில் தமிழ் படிப்போரின் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்றுச் சொன்னதற்கு, அவருக்கு நாம் நிறைய நன்றிக் கடன்பட்டுள்ளோம். இதற்காக திமுக வினர் நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிப்பதும் அமளியில் ஈடுபடுவதும் சரியில்லை. ஒருவேளை இது உண்மையாக கூட திமுகவிரின் அமளி நாடகமாக கூடயிருக்கலாம். உண்மை நிலையறிந்து ஆராய்ந்து இந்த குறைப்பாட்டை தமிழக அரசு சரிச் செய்ய வேண்டும்.


இராம தாசன்
மார் 12, 2025 01:44

நேற்று நிர்மலா அம்மா சும்மா வெளு வெளு என்று ஈர வெங்காய கும்பல ஓட விட்டார்களே அதை போடுங்க - ஒரு திருட்டு கழக mp கூட இல்லை - ஓடி போய்ட்டாங்க


இராம தாசன்
மார் 12, 2025 01:41

கட்டாயம் என்ற பொது எதிர்க்க மாட்டோம் - விருப்பமொழி என்றால் எதிர்ப்போம் இது தான் திராவிட மாடல்


ES
மார் 12, 2025 01:40

If he is right why did he came out apologizing? Called entire tamil illiterates and here people defending this arrogant guy. I'm no supporter of any one but instead of your dmk hate go out and read what's real news


vinoth kumar
மார் 11, 2025 23:43

தமிழ் படிப்பவர் குறைந்தால் என்ன , தமிழ்நாட்டில் குடிப்பவர் அதிகரித்துள்ளனர் .சாராயத்துக்கு வீரன் என்று தமிழ் பெயர் வைத்து தமிழ் வளர்க்கின்றது திராவிட மாடல் அரசு . அதை பார்த்து சந்தோஷப்படுங்கள் அமைச்சரே .


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
மார் 11, 2025 22:27

பாஸ் இன்ஜினியரிங் படிச்சிட்டு 5000 ரூவாய்க்கு வேலைக்கு போனேன் , விட்டுட்டு பெங்களூரு மும்பை னு போனது 50000 ஆச்சி , அப்புறம் வெளி நாடு வாழ்கை மாறி விட்டது, அவனுங்க கும்மிடி பூண்டி தாண்டி வர மாட்டானுங்க விடுங்க


nb
மார் 11, 2025 22:00

திராவிட மாடலின் வெற்றி


பாரதி
மார் 11, 2025 21:59

சீனா ஆங்கிலம் இல்லாமல் வளர்ந்துள்ளது! ஆங்கிலம் உலக மொழி என்பது சதிப் பொய்! நம் தந்தையைக் கொன்று, தாயைக் கற்பழிக்க வந்த ஆங்கில மொழியை, கருவறுக்க விரும்புபவனே தரமான மகன் ! படிக்க விரும்புபவன் தரம்கெட்ட மகன்!!


chennai sivakumar
மார் 11, 2025 22:09

தற்சமயம் சீனாவும் ஆங்கிலத்தை கையில் எடுத்து கொண்டு விட்டது. காரணம் ஆங்கிலம் இல்லாமல் அவர்களால் கணினி துறையில் முன்னேற்றம் காண முடியவில்லை. இந்தியா முன்னேறி விட்டது. இன்னும் சிறிது காலம் கழித்து கணினி துறையிலும் சீனா ஆட்சி செய்யும். ப்ளீஸ் வெயிட் அண்ட் வாட்ச்.


சரவணன்,திருச்சி
மார் 11, 2025 22:10

ஏலே இப்ப நீ என்னதான் சொல்ல வர்ற


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை