உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கச்சா எண்ணெய் விலை கட்டுக்குள் இருக்கிறது: பெட்ரோலிய அமைச்சர்

கச்சா எண்ணெய் விலை கட்டுக்குள் இருக்கிறது: பெட்ரோலிய அமைச்சர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மத்திய கிழக்கில் பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், ''கச்சா எண்ணெய் விலையில் எந்த பிரச்னையும் இல்லை. நிலையானவை, கட்டுக்குள் இருக்கிறது'' என மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.ஈரான்- இஸ்ரேல் போர் காரணமாக, கச்சா எண்ணெய் விலைகள் உயரக்கூடும் என்ற அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்தி உள்ளன. இந்த சூழலில், கச்சா எண்ணெய் விலை உயருமா என்ற கேள்விக்கு, ஹர்தீப் சிங் புரி கூறியதாவது: கச்சா எண்ணெய் விலை நிலையாக, சமாளிக்கக் கூடியதாக உள்ளது. உலகளாவிய எரிசக்தி விலை கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த கொந்தளிப்பை சமாளிக்க முடியும் என்று அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது. உலகில் எண்ணெய் பற்றாக்குறை இல்லை. நாங்கள் நிலைமையைக் கண்காணித்து வருகிறோம். மத்திய கிழக்கில் மோதல் தொடங்கிய போது, ​​விலை 100 டாலர் தாண்டுமோ என்று மக்கள் கவலைப்பட்டனர். இருப்பினும், கடந்த சில மாதங்களாக, கச்சா எண்ணெய் விலை கட்டுக்குள் இருக்கிறது. அமெரிக்கா, கனடா போன்ற மேற்கத்திய நாடுகளிலிருந்து அதிக எண்ணெய் சந்தைக்கு வருகிறது. இஸ்ரேல்-ஈரான் மோதலில் வணிகக் கப்பல்கள் மற்றும் எண்ணெய் டேங்கர்கள் இதுவரை குறிவைக்கப்படவில்லை என்பதால் தான் தேவையற்ற கவலை வேண்டாம்.அது இப்போது நடக்கவில்லை. ஹவுத்தி படையினர் செங்கடலில் கப்பல்களைத் தாக்கியபோது அது நடந்தது. இந்தியா ஒரு நாளைக்கு 5.5 மில்லியன் பீப்பாய்களை கச்சா எண்ணெய் பயன்படுத்துகிறது. ஒரு இடத்தில் இருந்து ஒன்றரை மில்லியன் பீப்பாய்கள் வருகின்றன. மேலும் நான்கு மில்லியன் பீப்பாய்கள் வேறு இடங்களிலிருந்து வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

G VEERAMANIKANDAN
ஜூன் 21, 2025 10:46

கச்சா எண்ணெய் எவ்வளவு விலை குறைந்தாலும் பெட்ரோலிய பொருட்களின் விலை குறைப்பு இருக்காது, ஆனால் விலை அதிகரித்தால் விலை உயர்வு நள்ளிரவு முதலே அதிகரித்து விடும்.‌ ஒன்றிய பாஜக அரசு விலை குறைப்பின் பயனை மக்களுக்கு அளிக்க மனமில்லை. பெரு நிறுவனங்களுக்கு பல லட்சம் கோடிகளை தள்ளுபடி செய்யும். ஆனால் சாமானிய மக்களுக்கு செய்யாது.


Perumal
ஜூன் 20, 2025 17:21

இந்தியாவில் மட்டுமல்ல , எல்லாநாடுகளிலும் இதே மாதிரிதான் , இங்கிலாந்து பெட்ரோல் விலை இந்தியா ரூபாய் மதிப்பில் 152 , இத்தனைக்கும் அரபு நாடுகளிலிருந்து குழாய் வழியாக கச்சா ஆயில் ஐரோப்பா வருகிறது , ஆனால் இந்தியாவிற்கு கப்பல் வழியாகத்தான் வர வேண்டும் , பிஜேபி இல்லை காங்கிரஸ் அல்லது யார் வந்தாலும் ஒன்றும் செய்யமாட்டார்கள், அரசாங்கத்திற்கு மிக சுலபமான வரி வருமானம் இதுதான்


venugopal s
ஜூன் 20, 2025 14:15

ஏற்கனவே பெட்ரோல் விலையை மிகவும் அதிகமாக ஏற்றி வைத்து உள்ளது மத்திய பாஜக அரசு, இனிமேல் ஏற்றுவதற்கு என்ன உள்ளது?


RAVINDRAN.G
ஜூன் 20, 2025 12:11

விலையை ஏற்றுவார்களே தவிர குறைக்க மாட்டார்கள்.விலையை குறைக்க வேண்டாம்.ஏற்றவும் வேண்டாம். இப்படியே இருக்கட்டும்.


Karthik Madeshwaran
ஜூன் 20, 2025 10:03

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 120 டாலர் தாண்டும் வரை இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையை ஏற்ற கூடாது. இத்தனை வருடங்கள் மக்களை ஏமாற்றி முட்டாளாக்கி வருகிறார்கள். உலக சந்தையில் விலை ஏறும் பொழுது விலையை ஏற்றுபவர்கள், உலக சந்தையில் விலை குறைந்தால் ஏன் இந்தியாவில் விலையை குறைக்காமல் அதே விலையிலையே தக்க வைக்கிறார்கள் ? யார் முட்டாள்கள் என்று மக்களே யோசியுங்கள். பாஜக கட்சிக்கு கூஜா தூக்கும் அந்த சொம்புகளுக்கும் அதே விலை தானே ? உங்களுக்கு என்ன தனி டிஸ்கோவுண்ட் ஆ தருகிறார்கள். நடுநிலையுடன் சிந்திக்கணும்.


THIRUMALAI KUMAR
ஜூன் 20, 2025 13:21

விலையை குறைத்தால் விடியலார் பஸ் கட்டணத்தை குறைப்பாரா


ஆரூர் ரங்
ஜூன் 20, 2025 14:26

திமுக தேர்தல் வாக்குறுதிபடி பெட்ரோல் டீசல் விலையை 5 ரூபாய் குறைத்து விட்டதா?. எரிவாயு மானியம் 500 எங்கே?. ஆனால் சென்ற 3 ஆண்டுகளில் மத்திய அரசு மூன்றுமுறை பெட்ரோல் வரியைக் குறைந்துள்ளது .


Karthik Madeshwaran
ஜூன் 20, 2025 09:56

2022 ஆம் ஆண்டு உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 120 டாலர் அளவில் இருந்த பொழுது இந்தியாவில் உச்சம் தொட்டது பெட்ரோல் விலை 100 ரூபாய்க்கும் மேல். பிறகு மே 2023 இல் 64 டாலர் ஆக பெருமளவில் விலை குறைந்தது. அப்போது பெட்ரோல் டீசல் விலை குறைக்க படவில்லை. கடந்த ஏப்ரல் மாதம் 2025 கூட 55 டாலர் என்ற அளவில் வெகுவாக குறைந்தது. அப்போதும் பெட்ரோல் டீசல் விலை குறைக்கவில்லை. ஏற்றிய விலையை ஏற்றிய படியே இந்தியாவில் பெட்ரோல் 100 ரூபாய்க்கும் மேலே தான் உள்ளது, விலை குறைக்கவே இல்லை. யார் பாக்கெட்டுக்கு அந்த மக்கள் பணம் சென்றது என்பதை நாட்டு மக்கள் யோசிக்க வேண்டும். இப்போது வெறும் 25 டாலர் விலை மேலே போனவுடன் மீண்டும் விலையை கூட்ட பார்க்கிறார்கள். யார் தலையில் மிளகாய் அரைக்கிறார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை