உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜம்மு காஷ்மீர் தேர்தலில் வெற்றிமுகம்: முதல்வர் பதவியை நோக்கி உமர் அப்துல்லா!

ஜம்மு காஷ்மீர் தேர்தலில் வெற்றிமுகம்: முதல்வர் பதவியை நோக்கி உமர் அப்துல்லா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சியின் செயல் தலைவர் உமர் அப்துல்லா முதல்வராகும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் முதல் முறையாக அங்கு சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து, ஓட்டு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. தேர்தலில் காங்கிரஸ் தேசிய மாநாட்டு கட்சியுடன் கூட்டணி அமைத்தது. பா.ஜ., மெஹபூபா முப்தி கட்சி தனித்தனியே போட்டியிட்டன. ஓட்டு எண்ணிக்கை இன்று காலை முதல் வெளியாக காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி கூட்டணியினர் 50 தொகுதிகளை கடந்து முன்னிலையில் உள்ளனர். பெரும்பான்மைக்கு தேவையான தொகுதிகளின் எண்ணிக்கையை கடந்துவிட்டது.தேசிய மாநாட்டு கட்சியின் செயல் தலைவரும், முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா 2 தொகுதிகளில் களம் கண்டு, இரண்டிலும் முன்னிலையில் உள்ளார். அவர் போட்டியிட்ட புட்காம், கந்தர்பால் தொகுதிகளில் அதிக வாக்குகள் பெற்று இருக்கிறார்.நண்பகல் 12 மணி நிலவரப்படி கந்தர்பால் தொகுதியில் 7 ரவுண்டுகள் எண்ணப்பட்டு 5 ஆயிரம் ஓட்டுகள் முன்னிலையிலும், புட்காம் தொகுதியில் 9 ஆயிரம் ஓட்டுகள் முன்னிலையிலும் உள்ளார். 2 தொகுதிகளிலும் அவர் ஏற்ற நிலையில் இருப்பதோடு, காங்கிரசுடன் கூட்டணி அமைத்துள்ள அவரின் கட்சியும் அதிக தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அனைத்து தொகுதிகளிலும் வெளியிட நேரம் பிடிக்கும். தற்போதுள்ள சூழலில் தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ் கட்சி கூட்டணி 50 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது.இந்த கூட்டணி ஆட்சி அமைந்தால் உமர் அப்துல்லா மீண்டும் ஜம்மு காஷ்மீரின் முதல்வராகும் வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன. அதிகாரப்பூர்வமாக ஒட்டு மொத்த தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் இறுதியான நிலவரங்கள் தெரியும் என்றும், உமருக்கே முதல்வர் வாய்ப்பு என்றும் கூறுகின்றனர் அரசியல் நிபுணர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Rpalnivelu
அக் 09, 2024 09:53

வாரிசுகளுக்குத்தான் பதவிகளா? அப்போ தொண்டர்கள் போஸ்டர் மற்றும் வாழ்க என்று கூவுவதற்கு மட்டும்தானா?


sankaranarayanan
அக் 08, 2024 17:24

பப்புவிற்கும் உம்மருக்கும் ஒரே பின்னணிதான் இருவருக்கும் ஆதாரம் மூதாதையர்கள்கான் காஷ்மீரை சேர்ந்தவர்கள் ஒருவர் அப்துல்லா குடும்ப வாரிசு மற்றொருவர் பெரோஸ்கான் குடும்பத்தை சேர்ந்தவர் பெரோஸ்கான் இந்திராவை மணந்துகொண்டு அவர்களுக்கு பிறந்தவர்கள்தான் ராஜிவ்கான், சஞ்சய்கான் ராஜீவகானின் புதல்வர்தான் பப்புகான் புதவிதான் பிரியங்கா இவர்கள் வந்த வழி வம்ச வழி மூதாதையர்கள் போலத்தான் இருப்பார்கள்


Sudha
அக் 08, 2024 17:21

ரொம்ப வசதி, நடக்கிற வன்முறை களுக்கு மத்திய அரசே காரணம்னு சொல்லி சொல்லி காலத்தை ஓட்டலாம், ஒரு நன்மை என்னவென்றால் பிஜேபி கூராகும்கூறாகும்?


Rasheel
அக் 08, 2024 16:51

தேச விரோத குடும்ப காட்சிகள் பலம் பெறுவது நாட்டிற்கு நல்லதல்ல. டெல்லியில் ஒண்ணு பேசுவார், காஷ்மீரில் ஒண்ணு பேசுவார். மதம் பிரிவினை, வளர்ச்சி திட்டங்களை மீறி வெற்றி பெற்று உள்ளது. ராகுலின் குடும்ப உறவுக்காரர்.


Jysenn
அக் 08, 2024 15:34

இவரும் ராகுலும் நெருங்கிய உறவினர்கள் .


Suppan
அக் 08, 2024 15:16

ஒரு தேசத்ரோகக்கட்சியுடன் கூட்டு சேர்ந்து இந்த தேசத்துரோகி முதல்வராகும் சூழ்நிலை. பக்கித்தானுடன் பேச்சுவார்த்தை நடத்து என்ற கூச்சல் அதிகரிக்கும் . ஜம்மு காஷ்மீருக்கு இப்பொழுதைக்கு மத்திய அரசு கட்டுப்பாட்டில்தான் இருக்கும் . .


Lion Drsekar
அக் 08, 2024 14:21

டாக்டர் கரன்சிங் பரம்பரை ஆண்டது பிறகு தனியார் மயமானது ஷேக் அப்துல்லா, பாருக் அப்துல்லா, உமர் அப்துல்லா , அவரது சகோதரி , அரசு வேலை கிடைக்க பொது அறிவை வளர்த்துக்கொள்ள இப்படி ஒவ்வொரு குறுநில மன்னர்களின் வாரிசுகளை நினைவில் கொள்ள வேண்டும். வாழ்க நலமுடன் வந்தே மாதரம்


Thiyagarajan S
அக் 08, 2024 13:57

என்னாது இவன் முதல்வரா.... பப்பு என்ன விரல் சூப்புவானா..... போய்யா அந்த பக்கம்...


xyzabc
அக் 08, 2024 13:06

unfortunate outcome for J & K. It will not be productive and alliance may not last. Brews trouble.


Bhaskaran
அக் 08, 2024 13:03

வாழ்த்துக்கள் தேசத்தின் இறையாண்மை காக்கப்பட வேண்டும் தீவிரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் மக்கள் இயல்பு வாழ்க்கை வாழ அனைவரும் பிரார்த்தனை செய்வோம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை