உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆபரேஷன் புளூஸ்டார் தவறு; சிதம்பரம் ஒப்புதல்!

ஆபரேஷன் புளூஸ்டார் தவறு; சிதம்பரம் ஒப்புதல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'அமிர்தசரஸ் பொற்கோவிலை மீட்பதற்காக, ராணுவத்தை அனுப்பிய ஆபரேஷன் புளூஸ்டார் நடவடிக்கை, ஒரு தவறான வழிமுறை,' என்று, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்தார்.இமாச்சல் மாநிலம் கசவுலியில், மறைந்த எழுத்தாளர் குஷ்வந்த் பெயரில் இலக்கியத் திருவிழா நடந்து வருகிறது. இதில், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் பேசியதாவது: பயங்கரவாதிகளிடம் இருந்து பொற்கோவிலை மீட்கும் முடிவானது, ராணுவம், போலீஸ், உளவுத்துறை, சிவில் சர்வீஸ் என அனைத்து தரப்பினரின் கூட்டு முடிவு. அந்த முடிவுக்காக இந்திராவை மட்டும் குறை சொல்ல முடியாது. ஆபரேஷன் புளூஸ்டார் நடவடிக்கையானது, பொற்கோவிலை மீட்பதற்காக கையாளப்பட்ட தவறான வழிமுறை. அந்த தவறுக்காக, இந்திரா தன் உயிரையே இழந்தார். சில ஆண்டுகள் கழித்து, ராணுவத்தை பயன்படுத்தாமலேயே, பொற்கோவிலை சரியான வழியில் மீட்டோம். காலிஸ்தான் பிரிவினைவாத கோரிக்கை இப்போது மங்கிப்போய் விட்டது. பொருளாதார பிரச்னைகள் முக்கியத்துவம் பெற்று விட்டன. பஞ்சாப்புக்கு சென்று வந்த வகையில், பிரிவினைவாதம் மடிந்து விட்டது என்று நான் நம்புகிறேன். உண்மையான பிரச்னை என்பது பொருளாதார சூழல் தான்.இவ்வாறு சிதம்பரம் கூறினார்.அது என்ன ஆபரேஷன் புளூஸ்டார்அமிர்தசரஸ் பொற்கோவிலுக்குள் பதுங்கியிருந்த பிந்திரன்வாலே தலைமையிலான பயங்கரவாதிகளை வெளியேற்றுவதற்காக, 'ஆபரேஷன் புளூஸ்டார்' நடவடிக்கையை 1984ம் ஆண்டு ஜூன் 1 முதல் ஜூன் 8 வரை ராணுவம் மேற்கொண்டது.பொற்கோவில் வளாகத்தில் பலர் கொல்லப்பட்ட நிலையில், சீக்கியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக, அப்போது பிரதமராக இருந்த இந்திரா, 1984ம் ஆண்டு அக்.,31ல் சீக்கிய பாதுகாவலர்களால் படுகொலை செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Gurumurthy Kalyanaraman
அக் 13, 2025 12:45

சிதம்பரம் பேசியதில் ஓன்றும் தவறு இருப்பதாக தெரியவில்லையே. காங்கிரஸ் எதற்காக கொந்தளிக்க வேண்டும்? அவர் இந்திராவை குறை கூறவில்லை. ப்ளூ ஸ்டார் ஆபரேஷனை மட்டுமே குறை கூறுகிறார்.


tamilvanan
அக் 12, 2025 19:48

இந்திராவின் உயிரை குடித்து அவரின் மடத்தனமும், அவரின் பாதுகாவலகலர்களின் அறிவீனனமும் தான். சீக்கிய மெய்காப்பாளர்களை யாராவது ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் பின்னர் அருகில் வைத்து கொள்வார்களா? அந்த ஆபரேஷுனுக்கு பின்னர் சீக்கியர்களின் மனநிலையை கூட புரிந்து கொள்ள கூட முடியாதா?


Rathna
அக் 12, 2025 18:25

வளர்ந்த கடா மார்பில் பாய்ந்தடா என்பது தான் இந்த கதை. பிந்தரன்வாலேயை வளர்ந்ததே அதற்கு காரணம். அதே போல சிவப்பு கம்யூனிஸ்ட் நக்ஸல் தீவிரவாதத்தை வளர்த்தது. பங்களாதேஷிகளை அஸ்ஸாமிலும், வங்காளத்திலும் செட்டில் செய்தது. காஷ்மீர் தீவிரவாதிகளிடம் கைகுலுக்கி பிரியாணி சாப்பிட்டு காஷ்மீரை பிரிக்க பார்த்தது. அரசியல் காரணத்திற்காக செய்த செயல்கள் நாட்டின் ஒற்றுமைக்கு மிக பெரிய கேட்டினை உண்டாக்கியது. இன்னும் உண்டாக்கி கொண்டு உள்ளது.


vbs manian
அக் 12, 2025 17:55

ஒவ்வொன்றாக காங்கிரஸ் செய்த தவறுகளை பட்டியல் போடுகிறார்.


M Ramachandran
அக் 12, 2025 16:51

அப்போ அமைச்சர் மீதா அல்லது ராணுவத்தின் மீது பலி போராடுறீங்க்ளா?


panneer selvam
அக் 12, 2025 14:56

Now people should understand about Chidambaram ji , so called leader is without a vision and cowardice . When Golden Temple was captured by extremist Bindaranwale and broading against India Killed Punjab DIG at the entrance of Golden Temple , what government has to do ? , extremism in Punjab was exterminated by valiant police officers like KPS Gill and Julio Ribeiro by policy of bullet to bullet , not because of your intelligence or economy . People should avoid these kind of incompetent so called leaders


KOVAIKARAN
அக் 12, 2025 14:47

சீக்கியர்கள் இந்திரா அம்மையாரைக் கொலைசெய்தது அவர் ராணுவத்தையும் காவல் துறையையும் பொற்கோவிலுக்குள் அனுமதித்தது மூலம் கோவிலின் புனிதம் கெட்டுப் போய்விட்டது என்பதற்காகத்தான். இந்திராவால் வளர்க்கப்பட்ட சீக்கிய தீவிரவாதியை ராணுவம் கொன்றதற்காக அல்ல. ஆனால், அதற்குப்பின் காங்கிரஸ்காரர்கள் தில்லியிலும் பஞ்சாபிலும் 3000 சீக்கியர்களுக்கு மேல் கொன்று குவித்தார்கள். அவர்களுக்கு பயந்துதான் அன்றைய காலகட்டத்தில் ஏராளமான சீக்கியர்கள் தென்னிந்தியாவிற்கு புலம்பெயர்ந்து வந்து குடியேறினார்கள்.


RAJ
அக் 12, 2025 14:32

தாய்நாட்டின் நலன் விரும்பாத கட்சிகளில் காங்கிரஸ்க்கு முதலிடம்.. நம்ப ப.சி. க்கு பஸ்டு மார்க்கு..


N Sasikumar Yadhav
அக் 12, 2025 14:24

சுதந்திர பாரதத்தின் முதன்முதலாக ஜவஹருலாலு நேரு பதவி ஏற்றது முதல் மிகப்பெரிய தவறு . சர்தார் வல்லபாய் படேல் முதல் பிரமராகி இருந்தால் நாடு நன்றாக இருந்திருக்கும்


CHELLAKRISHNAN S
அக் 12, 2025 14:16

bindranwala was groomed by none other than Indira Gandhi. than vinai thannai sudum


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை