உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் தேர்தல் கமிஷன் அலுவலகம் நோக்கி புறப்பட்ட எம்பிகள் கைது

டில்லியில் தேர்தல் கமிஷன் அலுவலகம் நோக்கி புறப்பட்ட எம்பிகள் கைது

புதுடில்லி: தேர்தல் முறைகேடு , வாக்காளர் பட்டியலில் போலியாக பலர் சேர்க்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்த காங்கிரஸ் தலைமையிலான இண்டி கூட்டணியினர் இன்று (ஆக.11)லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் தலைமையில் பல எம்.பி.,க்கள், பார்லிமென்டில் இருந்து தேர்தல் கமிஷன் அலுவலகம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர். பேரணியாக சென்ற எம்.பிக்கள் கைது செய்யப்பட்டனர்.

பதவி விலகினார்

https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=nrp0emr6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மத்திய பா.ஜ., அரசுக்கும், அவருக்கும் கருத்து வேறுபாடு நிலவியதால் பதவி விலகியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, 15வது துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் பணியை முடுக்கிவிட்ட தேர்தல் கமிஷன், தேர்தல் நடத்தும் அதிகாரியாக ராஜ்யசபா பொதுச்செயலர் பி.சி.மோடியை நியமித்து உத்தரவிட்டது. துணை ஜனாதிபதி தேர்தல் செப்., 9ல் நடக்கும் என்றும், ஓட்டுப்பதிவு முடிந்ததும் அன்றைய தினம் மாலை 5:00 மணிக்கு பின், ஓட்டு எண்ணிக்கை நடக்கும் என்றும் தேர்தல் கமிஷன் சமீபத்தில் அறிவித்தது. துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 7ம் தேதி துவங்கிய நிலையில், வரும் 21 வரை மனு தாக்கல் செய்யலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டால் மட்டுமே தேர்தல் நடக்கும். ஒருவர் மட்டுமே போட்டியிட்டால், அவர் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்.

நெருக்கடி

துணை ஜனாதிபதி தேர்தலில், மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் நிலையில், அக்கூட்டணிக்கு கடும் நெருக்கடி கொடுக்க, காங்., - தி.மு.க., - திரிணமுல் காங்., - ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய இண்டி கூட்டணி முடிவு செய்துள்ளது. அதனால், துணை ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்தவும் இண்டி கூட்டணி திட்டமிட்டுள்ளது.காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, டில்லி சாணக்யபுரியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில், கூட்டணி கட்சி தலைவர்களுக்கு இன்றிரவு விருந்து அளிக்கிறார். அப்போது, பொது வேட்பாளர் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

இது குறித்து, காங்., வட்டாரங்கள் கூறியதாவது:

துணை ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது. எனினும், அக்கூட்டணிக்கு வெற்றியை எளிதாக கொடுக்கக்கூடாது என்பதில் இண்டி கூட்டணி உறுதியாக உள்ளது. எனவே, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நெருக்கடி கொடுக்க, பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளோம்.

ஒரு மித்த கருத்து

தே.ஜ., கூட்டணியின் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்ட உடன், நாங்களும் எங்களது வேட்பாளரை அறிவிப்போம். இது தொடர்பாக, கூட்டணி கட்சி தலைவர்களுடன் மல்லிகார்ஜுன கார்கே பேசி வருகிறார்; அவர்களிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.பீஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் விவகாரத்தில், இண்டி கூட்டணியில் ஒற்றுமை நிலவுகிறது. அதேபோல, துணை ஜனாதிபதி தேர்தலிலும் ஒற்றுமை இருக்கும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின. யாருக்கு வெற்றி? லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்களின் மொத்த எண்ணிக்கை 788. ஏழு இடங்கள் காலியாக இருப்பதால், தற்போது 781 எம்.பி.,க்கள் உள்ளனர். துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற, 391 எம்.பி.,க்களின் ஓட்டுகள் தேவை. மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணிக்கு, லோக்சபா, ராஜ்யசபாவில் மொத்தம் 422 எம்.பி.,க்களின் ஆதரவு இருப்பதால், அக்கூட்டணியின் வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி. எதிர்க்கட்சிகளின் இண்டி கூட்டணிக்கு, இரு சபைகளிலும் 313 எம்.பி.,க்களே உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

ஜெகதீசன்
ஆக 11, 2025 12:56

இந்த முறை யாரந்த பலிகடா வேட்பாளரோ. பாரளுமன்றத்தை நடத்த விடுவதில்லை. ஆபரேஷன் சிந்தூர் பற்றி பேசனும் என்று குதித்தார்கள், அவமானபட்டது தான் மிச்சம்.


M Ramachandran
ஆக 11, 2025 11:55

எல்லாம் அடிமைய்யகளின் மழுங்கி போன மூளை. எதற்கும் உதவாது பாராளுமன்றத்தின் நடுவில் டிராமாடான்சு ஆடுவதன் மூலம் திருப்தி அடைந்து விடுவார்கள் .


M Ramachandran
ஆக 11, 2025 11:45

300 MPs க்களா எங்கிருந்து? எதிர் கட்சியன்ன மக்களின் தேவைக்காக கட்சி ஆளும் கட்சியினரை மக்கள் பணியில் தவறும் போது தட்டி கேட்கனும். சுதந்திரம் அடைவதற்கு முன் இருந்த ஆட்சியை என்று நினைத்து ஒரு கேடுகெட்ட அயல் நாட்டு விசுவாசியாக இருக்கும் மக்களுக்கு குடைச்சல் கொடுப்பதற்கில்லை. இதை மக்கள் தான் உணர்ந்து அந்த திருட்டு கும்பலை வெளி நாட்டிற்கு வெளியேற்ற வேண்டும்.


Karthik Madeshwaran
ஆக 11, 2025 11:42

ராகுல் காந்தி இந்தியாவின் எதிர்க்கட்சி தலைவர். கேபினட்டுக்கு சமமான முக்கிய பதவி. தனது திரையில், பிஜேபி கட்சியின் கைப்பாவையாக உள்ள தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகளை தெளிவாக விளக்கினார். அதை பெரும்பாலான மக்கள் பார்த்தார்கள். 300 எம்பிக்கள் மேல் ஆதரிக்கிறார்கள் என்றால் இந்தியாவின் 40% மக்களின் ஆதரவு இருக்கிறது என்று அர்த்தம். அன்று கார்ப்பரேட் ஊழல் பாஜக அரசு அவசரம் அவசரமாக தேர்தல் ஆணையரை நியமிக்கும்பொழுதே உச்சநீதி மன்றம் பல கேள்விகளை கேட்டது. அப்போ புரியல, இப்போ புரியுது.


Mettai* Tamil
ஆக 11, 2025 12:09

அப்போ புரியல, இப்போ புரியுது. தமிழ்நாட்டில் 40 க்கு 40 ஜெயிச்சதும் புரியுது . நல்லா புரியுது..


vivek
ஆக 11, 2025 16:56

சிரிக்காமல் கருத்து போடுவது நம்ம மகேசு


Murugesan
ஆக 11, 2025 17:29

நேர்மையான யோக்கியன் எலெக்சன் கமிஷன் கேட்ட ஆதாரத்தை நேரில் சென்று கொடுத்து நிருபிக்க வேண்டியது தானே, இல்லை , இந்திய திராவிட கொத்தடிமையான உச்சநீதிமன்றம் சென்று வழக்கு போடு ,இவனுங்க எப்படி வெற்றிபெற முடிந்தது ,மண்டையில மூளையற்ற அறிவில்லாத சுடலை உலகமாக அயோக்கியன் தேர்தல் முறைகேட்டில் பட்டம் வாங்கிய எமகாத உருட்டு


பேசும் தமிழன்
ஆக 11, 2025 19:40

அப்படியே நாட்டின் 60% மக்கள் நம்பவில்லை.... அதையும் கூறினால் நன்றாக இருக்கும்.... என்னய்யா கலர் கலரா ரீல் விடுற ???


பேசும் போது
ஆக 11, 2025 19:42

பாம்பின் கால் பாம்பறியும்.... இப்போது தான் தெரிகிறது இவர்கள் பாரளுமன்ற தேர்தலில் எப்படி 40 க்கு 40 தொகுதியில் வெற்றி பெற்றார்கள் என்று !!!


Keshavan.J
ஆக 11, 2025 11:15

ஸ்டார் ஹோட்டல் டின்னரை சாப்பிட்டுட்டு ....


Balasubramanian
ஆக 11, 2025 11:14

அவருக்கு, தயவுசெய்து உட்காரவும், உங்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப் படும், நான் உங்கள் பிரதிநிதி, அமைதியாக இருக்கவும், அமளி வேண்டாம், அமைதியாக இருங்கள், தயவு செய்து இருக்கைக்கு செல்லவும்! என்ற வார்த்தைகள் சொல்ல தெரிந்து இருக்க வேண்டும்! இல்லை என்றால், Maiden Wicket மாதிரி ஆள் ஆரம்பித்திலேயே அவுட்!


Balasubramanyan
ஆக 11, 2025 10:55

Will Rahul or Stalin say how they won in Karnataka,Telengana,Himachal Pradesh,Jargand ,TamilNadu. The voters list is prepared by concerned state election commission. Last LokSabha election the then Electon Commissioner informed all voters will revive booth slip. We have not received. Then DMK won 39 seats in TamilNadu. How.


Indhuindian
ஆக 11, 2025 09:07

மாட்டிவிட யாராவது ஒரு பக்ரா கிடைக்காதா என்ன?


பேசும் போது
ஆக 11, 2025 08:59

நீங்கள் பொது வேட்பாளரை நிறுத்துவீர்களோ அல்லது புது வேட்பாளரை நிறுத்துவீர்களோ... அதனால் ஒன்றும் ஆகப்போவதில்லை.


பாரத புதல்வன்
ஆக 11, 2025 08:54

கான்கிராஸ் பப்புவை நிறுத்தி அழகு பார்க்கலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை