உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கடன் தள்ளுபடி கிடையாது என்ற துணை முதல்வருக்கு எதிர்ப்பு

கடன் தள்ளுபடி கிடையாது என்ற துணை முதல்வருக்கு எதிர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: 'விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது; கடன்களை விவசாயிகள் திருப்பி செலுத்த வேண்டும்' என, மஹாராஷ்டிர துணை முதல்வர் அஜித்பவார் கூறியதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மஹாராஷ்டிராவில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்., கட்சிகளின் மஹாயுதி கூட்டணி வெற்றி பெற்றது. பா.ஜ.,வைச் சேர்ந்த தேவேந்திர பட்னவிஸ் முதல்வராகவும், சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்., தலைவர் அஜித்பவார் ஆகியோர் துணை முதல்வர்களாகவும் பதவியேற்றனர். தேர்தலின்போது, விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என, மஹாயுதி கூட்டணி சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், மஹா.,வில் உள்ள பாரமதியில் நடந்த நிகழ்ச்சியில், நேற்று முன்தினம் பேசிய அஜித் பவார், 'தேர்தலில் அளிக்கும் வாக்குறுதிகள் எப்போதுமே நேரடியாக செயல்படுத்தப்படுவதில்லை. மஹாராஷ்டிர விவசாயிகள், தங்கள் பயிர்க் கடன்களை மார்ச் 31-க்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். நிதி சூழ்நிலையை கருத்தில் வைத்து, எதிர்காலத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும். எனினும், இப்போதைக்கு வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த வேண்டும்' என்றார். அஜித் பவாரின் இந்த கருத்துக்கு காங்கிரஸ், சரத்பவார் பிரிவு தேசியவாத காங்., - உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா ஆகிய எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதற்கிடையே, இந்த சர்ச்சைக்கு நேற்று விளக்கம் அளித்த முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், ''விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய மாட்டோம் என அஜித் பவார் கூறவில்லை. அரசின் நிலைமையை மட்டுமே அவர் தெரிவித்தார்,'' என கூறினார். மற்றொரு துணை முதல்வரான ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், ''எதிர்க்கட்சியினரைப் போன்று, தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்ததை அச்சுப் பிழை என கூறி, நாங்கள் தப்ப முயற்சிக்க மாட்டோம். அனைத்து வாக்குறுதிகளையும் நிச்சயமாக நிறைவேற்றுவோம். பட்ஜெட்டில் கூட, வேளாண் துறைக்கு மட்டும் பயிர் காப்பீடு உள்ளிட்ட திட்டங்களுக்காக 45,000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ேளாம்,'' என விளக்கம் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

S George
ஏப் 01, 2025 17:09

Nantri


subramanian
மார் 31, 2025 21:12

விவசாயிகள் விஷயத்தில் கொஞ்சம் தகுதியானவர்களுக்கு தள்ளுபடி செய்வது நல்லது. ஆனால் திமுக அவர்களின் கட்சி ஆளுக்கு மட்டும் எல்லாவற்றையும் தள்ளுபடி செய்து விடும் திருடர்கள்.


R.Varadarajan
மார் 31, 2025 17:00

பிரதமர் 144 கோடி இந்திய மக்களுக்கு எந்த வேறுபாடின்றி தேசத்தலைவர் அதேபோல மாநில முநல்வர் எல்லா மக்களுக்கும் முதல்வர் ஆகையல் மத மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு எல்லோருக்கும் எர்லா மதத்தவருக்கு அவரவர்களுடைய பண்டிகைகளுக்கு வாழ்த்துக்கூறுவதற்கு தயக்கம் கூடாது இந்துக்களுக்குமட்டும் அவர்களுடைய பண்டிகைகளுக்கு வாழ்த்துக்கூறக்கூடாது எனும் வன்மம் காட்டுவது தான் மதச்சார்பற்ற தன்மையோ?


மதிவதனன்
மார் 31, 2025 04:10

இப்படி தான் சின்ன மாநிலம் டெல்லி அறிவித்த மகளிர் உரிமை தொகை இன்னும் தரவில்லை


Appa V
மார் 31, 2025 02:23

விவசாய கடன் கல்வி கடன் தள்ளுபடி செய்ய அரசாங்கம் கடன் வாங்க வேண்டும் ..விவசாயிகள் மானிய விலையில் உரம் விதைகள் இலவச மின்சாரம் வருமான வரி விலக்கு இப்படி நிறைய சலுகைகள். எதிர்க்கட்சிகள் எதார்த்த நிலமையை புரிந்து நடந்தால் எதிர்காலம் நன்றாக இருக்கும்


தமிழன்
மார் 31, 2025 01:52

செய்த ஊழலை தள்ளுபடி செய்த கட்சியுடன் சேர்ந்த பிறகு கடன் தள்ளுபடி கிடையாது என்பதை எதிர்ப்பதா?? ஓ மை காட்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை