உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது என்ற கமலுக்கு எதிர்ப்பு! பாவம் வரலாறு தெரியாமல் பேசுகிறார்: சித்தராமையா

தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது என்ற கமலுக்கு எதிர்ப்பு! பாவம் வரலாறு தெரியாமல் பேசுகிறார்: சித்தராமையா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: 'தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம்' என கூறிய நடிகர் கமலுக்கு, கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பாவம், வரலாறு தெரியாமல் கமல் பேசுவதாக முதல்வர் சித்தராமையா காட்டமாக கூறியுள்ளார். 'கமல் ஒரு பைத்தியம், நகர்ப்புற நக்சல்' என்று, எதிர்க்கட்சி தலைவர் அசோக் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி உள்ளார். 'தன் பேச்சுக்கு மன்னிப்பு கேட்கவில்லை என்றால், கமல் திரைப்படத்தை கர்நாடகாவில் ஓட விட மாட்டோம்' என கன்னட அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.கமல், சிம்பு நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவான தக் லைப் திரைப்படம் ஜூன் 5ல் வெளியாக உள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடந்தது. கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் பங்கேற்றார். நிகழ்ச்சியில் கமல் பேசுகையில், 'தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம்' என்றார்.இது தொடர்பான வீடியோ நேற்று முன்தினம் வெளியாகி, கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. கமலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தின. பெங்களூரில் நேற்று முன்தினம், தக் லைப் திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. கமல், சிம்புவை வரவேற்று ரசிகர்கள் வைத்திருந்த பேனர்களை, கன்னட அமைப்பினர் கிழித்தனர்.கமலின் பேச்சுக்கு, கர்நாடகா முழுதும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பெங்களூரில் முதல்வர் சித்தராமையா நேற்று அளித்த பேட்டியில், ''கன்னட மொழிக்கு நீண்ட வரலாறு உள்ளது. அது பற்றி கமலுக்கு தெரியவில்லை; பாவம், வரலாறு தெரியாமல் பேசுகிறார்,'' என்று காட்டமாக கூறினார்.பா.ஜ.,வைச் சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர் அசோக் கூறுகையில், ''நடிகர் கமல் மனநலம் சரியில்லாதவர்; அவர் ஒரு பைத்தியம். கன்னட சினிமா துறை அவருக்கு நிறைய கொடுத்து உள்ளது. இதை எல்லாம் மனதில் வைத்திருந்தால், கன்னட மொழி பற்றி அவர் பேசி இருக்க மாட்டார். கொஞ்சமாவது நியாயமாக பேச வேண்டும். கமலை போன்ற நகர்ப்புற நக்சல்கள் இப்படி தான் பேசுவர்,'' என்றார்.கன்னட வளர்ச்சி துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி கூறுகையில், ''கன்னடம் குறித்து, நடிகர் கமல் தேவையில்லாத கருத்துகளை பேசி உள்ளார். கன்னட மக்கள் ஒருபோதும் இதை பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். ''தன் கருத்துக்கு கமல் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்; இல்லாவிட்டால், அவரது தக் லைப் திரைப்படத்திற்கு தடை விதிக்கப்படும். இது தொடர்பாக கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கடிதம் எழுதுவேன்,'' என்றார்.கமலை கண்டித்து, பெலகாவியில் நேற்று கன்னட அமைப்பினர் நடத்திய போராட்டத்தில், கமலின் உருவப்படத்திற்கு தீ வைக்கப்பட்டது. உருவப்படத்தை செருப்பால் அடித்தும் தங்கள் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர். கமல் கருத்துக்கு, கர்நாடக பா.ஜ., தலைவர் விஜயேந்திரா உள்ளிட்ட தலைவர்களும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.இதற்கிடையே, கமல் கருத்தை, தமிழக அரசியல் தலைவர்கள் வரவேற்றுள்ளனர். 'தமிழில் இருந்து தான் கன்னட மொழி பிறந்தது. இது தான் வரலாற்று உண்மை' என, சீமான், அன்புமணி, திருமாவளவன் உள்ளிட்டோர் கமலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மன்னிப்பு கேட்க முடியாது

என் கருத்தை, என் அருகில் இருந்து பார்த்தால் சரியாக தெரியும். உங்கள் பக்கத்தில் இருந்து பார்த்தால், அது தவறாக தோன்றும். அன்பு மிகுதியால் நான் அப்படி பேசினேன். இந்த விஷயத்தில் அவர்கள் குழம்பி உள்ளனர். மொழி பற்றி வரலாற்று அறிஞர்கள் எனக்கு கற்று கொடுத்துள்ளனர். மொழிகள் பற்றி பேச, அரசியல்வாதிகளுக்கு தகுதி இல்லை. அன்பு எப்போதும் மன்னிப்பு கேட்காது.- கமல் ஹாசன்தலைவர், மக்கள் நீதி மய்யம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 55 )

Muthu kumar
ஜூன் 02, 2025 21:30

கமல் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் தமிழ் தான் உலகின் மூத்த மொழி. கன்னடர்கள் அறியாமையில் உளறுகிறார்கள்.


Santha Kumar
ஜூன் 01, 2025 17:41

உலக நாயகன் உண்மை தான் கூறுகிறார் தமிழில் இருந்து பிரிந்தது தான் கன்னடம் , தெலுங்கு, மலையாளம்


rajan_subramanian manian
ஜூன் 01, 2025 11:13

இந்த கமலா ஹாசன் சொல்வதையெல்லாம் சீரியஸாக எடுத்துகொள்ளவேண்டாம். இவர் பேசுவது அவருக்கும் தெரியாது, மற்றவர்களுக்கும் புரியாது. ஒரு எம்பீ சீட்டுக்காக அவர் கூறியதை பெரிதுபடுத்தி அந்த ஆளை பெரிய ஆளாக்க வேண்டாம். பாராளு மன்றத்தில் கன்னி பேச்சு பேசியபிறகு கூட்டாளிகளுடன் ஒரு ஆறு வருடங்கள் கேன்டீனில் தான் இருப்பார். எதாவது சாப்பிட வாங்கி கொடுங்கள் பாவம். மன நோயாளிகளிடம் அன்பாக இருக்க வேண்டும்.


K V Ramadoss
மே 31, 2025 14:04

ஐயா சித்தராமையா கன்னட பாஷை சரித்திரம் நீங்கள்தான் சொல்லுங்களேன்.... ஓ உங்களுக்கும் தெரியாதா ?


Babusutha 2694
மே 31, 2025 13:14

கர்நாடகா மக்கள் வரலாறு சரியாக அவர்கள் தான் படிக்க வேண்டும் நமது பாரத பிரதமர் மோடி ஜி அவர்கள் பல மேடையில் அவரே தெரிவித்துள்ளார் முதலில் தோன்றிய ஆதி மொழி தமிழ் என்று கமலஹாசன் அவர்கள் தெரிவித்தது தவறு என்றால் மோடிஜி அவர்களும் தெரிவித்து ஏன் எதிர்க்கவில்லை


MUTHU SRINIVASAN
மே 31, 2025 10:43

கமல் பேசிய வார்த்தை சரிதானே மக்கள்.......


Krishnamoorthy
மே 30, 2025 15:20

பகுத்தறிவு, அறிவியல் அறிவு இல்லாதவர்கள்........


chinnamanibalan
மே 29, 2025 19:50

தமிழக பள்ளிகளில், தாய் மொழியான தமிழை கட்டாயம் படிக்க வேண்டும் என்ற நிலை இல்லை. ஆனால் கர்நாடக பள்ளிகளில், அவர்களின் தாய் மொழியான கன்னடம் கட்டாயம் கற்க வேண்டும் என்ற நிலை உள்ளது. எனவேதான் நம்மிடம் இல்லாத தாய் மொழி பற்று கன்னடர்களுக்கு அதிகமாக இருக்கிறது. தமிழ் மொழி தான் மூத்த மொழி என அறிந்திருந்தும், தங்களது தாய் மொழியான கன்னடத்தை உயர்த்தி பிடிக்கின்றனர். கடந்த அரை நூற்றாண்டு காலமாக தமிழகத்தில், தமிழை வைத்து அரசியல்வாதிகள் பிழைப்பு நடத்தினார்களே தவிர, தமிழை வளர்க்க ஆக்கப்பூர்வமான முயற்சி எதையும் செய்யவில்லை. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தந்ததாக கூறும் திமுக, தமிழக பள்ளிகளில் தாய் மொழியான தமிழை கற்பது கட்டாயம் என்ற நிலையை ஏன் இதுவரை உருவாக்கவில்லை?


Prabu Varadharaju
மே 29, 2025 21:30

Yes


தமிழன்
ஜூன் 05, 2025 18:19

தமிழ்நாடு பள்ளிகளில் தமிழ் கட்டாயமாக்கப்படவேண்டும் அதற்கு இடையூறு செய்யும் ஆரிய சமஸ்கிருதம் தமிழ் நாட்டில் முழுவதுமாக தடை செய்யப்படவேண்டும்


JaiYeshuah
மே 29, 2025 17:13

மலையாளம் தமிழ் மொழியில் இருந்து தான் வந்தது என்று மலையாளிகள் ஏற்றுக் கொண்டு பெருமைப்படும் போது இந்த குன்னட அற்ப ஆணவ அகங்காரிகள் மட்டும் ஏன் அஞ்சு நடுங்குகிறார்கள்? உண்மையை அறிந்த பிறகும் ஏற்றுக் கொள்ள மறுப்பது ஏன்?


Keshavan.J
மே 29, 2025 14:43

Kamal has split personality some times he speak as an actor sometimes he speak like a politician but another time he speak unnecessarily. In a movie launch you talk like an actor and try to impress the whole some audience. Tamil is superior language no need to prove anything. The world accepted it. If Kannadigas, Telugu or Malayali assume their language is not connected with Tamil let them think. Kamal thought all are like Tamilians. Because Tamilians has no self respect, shame and love for the language. Even in Tamil Nadu politicians and many others insult Tamils and Tamil Language, but you will not see any pro. But in other state people have pride in their language. We invite everybody to our state and keep them in high pedestal.


K V Ramadoss
மே 31, 2025 14:06

unnecessarily or like a fool ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை