உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மைசூரு மன்னர் குடும்பத்துக்கு ரூ.3,400 கோடி வழங்க உத்தரவு

மைசூரு மன்னர் குடும்பத்துக்கு ரூ.3,400 கோடி வழங்க உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: கர்நாடக மாநிலம், பெங்களூரின் பல்லாரி சாலை மற்றும் ஜெயமஹால் சாலை பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடி மிக அதிகமாக உள்ளது. இதற்கு தீர்வு காணும் நோக்கில், பல்லாரி சாலை, ஜெயமஹால் சாலையை அகலப்படுத்த, மாநில அரசு திட்டமிட்டது.இப்பணிகளுக்காக, பெங்களூரு அரண்மனை மைதானத்தை சேர்ந்த 15.39 ஏக்கர் நிலத்தை, மாநில காங்., அரசு 2023ல் கையகப்படுத்தியது.இதற்கு மைசூரு அரச குடும்பத்தினர் ஆட்சேபம் தெரிவித்தனர். நிலத்துக்கான நிவாரணம் வழங்கும்படி வலியுறுத்தினர். ஆனால், அரசு மவுனம் சாதித்தது.இதுகுறித்து, உச்ச நீதிமன்றத்தில், அரச குடும்பத்தினர் மனு தாக்கல் செய்தனர். விசாரணை நடத்திய நீதிமன்றம், அரசு கையகப்படுத்திய நிலத்துக்கு ஏக்கருக்கு 220 கோடி ரூபாய் வீதம், 3,400 கோடி ரூபாய் டி.டி.ஆர்., எனும் மாற்றக்கூடிய மேம்பாட்டு உரிமை தொகையாக அளிக்க வேண்டும் என, கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.இந்த தொகையை உச்ச நீதிமன்றத்தில் டிபாசிட் செய்யும்படியும் உத்தரவிட்டது. இதன்படி, கர்நாடக அரசும் உச்ச நீதிமன்ற பதிவாளர் பெயரில் 3,400 கோடியை டிபாசிட் செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரச குடும்பத்தினர் மனு தாக்கல் செய்தனர்.மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுந்தரேஷ், அரவிந்த்குமார் முன்னிலையில், நேற்று விசாரணை நடந்தது.மன்னர் குடும்பத்தின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், 3,400 கோடி ரூபாயை உடனடியாக, அரச குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

krishnan
மே 27, 2025 11:33

மன்னர் 2000 கோடியை 5000 ஏழை குழந்தைகளை தத்து எடுத்து மாஸ்டர் டிகிரி வரை நல்ல இன்ஸ்டிடூடில் சேர்க்க வேண்டும்.


ram
மே 24, 2025 11:19

இங்கு கிளம்பாக்கம் பஸ் ஸ்டேண்ட் to ரயில்வே ஸ்டேஷன் நடை மேடை அமைப்பதற்கு திமுகவில் இருக்கும் ஒரு நபரின் லேண்ட் 2-3 acre 340 கோடி என்று சொல்ல, இப்போது அந்த வேலை பாதியில் நிற்கிறது. ஆதலால் இங்கு mysore மன்னரை எதிர்த்து கருத்து போடும் அனைவரும் இதையும் சேர்த்து போடவும்.


GMM
மே 23, 2025 09:55

இந்து மன்னர்கள் பூர்வீக குடிகள். வருவாய் ஈட்டி வள படுத்திய பரம்பரை சொத்து. நிலம் மூலம் அரசு வருவாய் ஈட்டி உரிய பங்கை மன்னர் வாரிசுக்கு ஒப்படைக்க வேண்டும். மன்னர் குடும்ப நிவாரணம் உச்ச மன்ற பதிவாளரின் ஒப்படைக்க கூறியது தவறு. நிவாரணம் நில உரிமையாளர் மன்னர் குடும்பம் அல்லது நில பதிவேடு பராமரிப்பு தாசில்தாரிடம் ஒப்படைக்க வேண்டும். நீதிபதி நிர்வாக முறைகள் அறிந்து தீர்வு காண வேண்டும். அந்நிய ஆங்கிலேயர், நவாப் நில பரிவர்த்தனை தகவல்கள் ஆக்கிரமிப்பு, மிரட்டல் முறையில் ஏற்பட்டது? அவைகள் செல்ல தக்கவை அல்ல. அதன்மூலம் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டி, தன் பிறந்த நாடுகளுக்கு கடத்தி சென்று விட்டார்கள். நிலமெடுப்பில் இழப்பீடு வழங்க அவசியல் இல்லை.


நல்லதை நினைப்பேன்
மே 23, 2025 08:21

காசிமணி அவர்களின் கருத்துகளை ரசிப்பேன். இதில் அவரின் கருத்தில் மாறுபடுகின்றேன். அது பரம்பரையாக கிடைத்த மன்னரின் சொத்து. அது எப்படி வந்தது என கேட்கமுடியுமா. ஆற்காடு நவாபு சென்னை பட்டினத்தை 1,000 ரூபாய்க்கு பறங்கியரிடம் விற்றதாக சரித்திரம். ஆக சென்னைப் பட்டினம் அவர்களுக்கு எப்படி வந்தது என கேட்கமுடியுமா? தஞ்சாவூரில் பல இடங்கள் சரபோஜி மன்னர் குடும்பத்தால், நடராஜபுரம், சுந்தரம் நகர் போன்ற இடங்கள், ஏக்கர் 250, 300 ரூபாய்க்கு அக்காலத்தில் விற்கப்பட்டு இருக்கின்றன. சரபோஜி மன்னர், தமிழ் நாட்டை சேர்த்தவர் அல்ல. ஆக தஞ்சாவூர் அவர்களுக்கு எப்படி வந்தது என கேட்கமுடியுமா?


Roy
மே 23, 2025 07:46

speedy justice for royal family, case takes years for poor and down trodden, colonial mentality of judiciary, they are paid from taxpayers money


R.RAMACHANDRAN
மே 23, 2025 07:33

கோடிக்கணக்கில் வழக்கிற்கு செலவிட்டால் கோடி கணக்கில் இழப்பீடு பெறலாம் இந்நாட்டில்.ஏழையாக இருந்தால் எந்த நிவாரணமும் இல்லை என நீதி மன்றங்களில் இருந்து துரத்தி அடிக்கின்றனர்.


Vinayagam
மே 23, 2025 07:01

இந்த தீர்ப்புதான், மற்றவர்களுடைய வழக்குக்கு உதவியாக இருக்கும்.


Kasimani Baskaran
மே 23, 2025 03:57

மன்னர் என்ன ஆட்சியா செய்கிறார் - இவ்வளவு பெரிய தொகை வழங்க?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை