வாசகர்கள் கருத்துகள் ( 21 )
அருமையான சட்டம்... இதன் மூலம் மாநில அரசுகள், மத்திய அரசின் தேர்வில் அவர்களின் சட்ட மன்ற ஆட்களைவைத்து எதுவும் செய்ய முடியாது... மக்கள் சுதந்திரமாக வாக்கு செலுத்தலாம்
எதிர்க்கும் எம்பிகளை சஸ்பெண்ட் செய்வது, இந்த மசோதாவை எளிதாக நிறைவேற்றுவதற்கு வழிவகுக்கும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரே தேதி என்று அறிவிக்கவில்லை என்றால் தேர்தல் நடத்தி முடிக்க மூன்று மாதங்கள் ஆகும் . மேலும் இரட்டிப்பு வாக்கு இயந்திரங்கள் பல கோடிகள் செலவு செய்து வாங்க வேண்டும் . இந்தியா முழுவதும் ஒரே நாளில் தேர்தலை கண்காணிக்க 5 லட்சம் போலீசார் தேவைப்படுவார்கள் . கூட்டிக் கழித்துப் பார்த்தால் தேர்தல் செலவு குறையப்போவதில்லை . இந்த திட்டம் நல்லதென்றால் BJP தவிர வேறு எந்த கட்சியும் இந்த திட்டத்தை விரும்பவில்லை என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும் . MLA க்கள் கட்சி தாவினால் மாநில ஆட்சி கவிழ்ந்து அடுத்த 5 ஆண்டுகள் வரும் வரை ஆளுநர் ஆட்சி அமுல்படுத்தப்படும் . அரசியல் கட்சிகளை காட்டிலும் ஜனநாயகத்திற்குத் தான் பாதிப்பு ஏற்படும்
உங்க கருத்திலிருந்து, நீங்க இன்னும் தெளிவா யோசிக்கணும்னு தெரியுது... சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றம் தேர்தல் ஒரு மாநிலத்தில் இரண்டு முறை நடத்தினா அதுக்கு இரண்டு முறை செலவு... நீங்க சொல்ற வாக்கு இயந்திர செலவு மட்டுமே உண்மை... அதுவும் ஒரு முறை செய்தால் போதும்...
ஒரே தேர்தல் எதிர் குரல் - மாநில உரிமை . மாகாணம் நீக்கி தான் மொழி மாநிலம். மாகாணம் இருந்த போது மாவட்டம், உள்ளாட்சி அமைப்புகள் நிர்வாகம் சிறந்து இருந்ததாக கூறுவர் . மாநில கட்சிகள் அதிகாரம் துஸ்பிரயோகம், ஊழல், நிர்வாக சீர் கேட்டை அதிகரித்து சர்வாதிகார முறையை கையாண்டு வருகின்றனர். மொழி கொள்கை, மேலவை நீக்கம், லோக் அயோக் அமைப்பு முடக்கம், மத்திய விசாரணை அமைப்புகள் தடுப்பு போன்ற பல சர்வாதிகார முடிவு எடுத்து வருகின்றனர். தேர்தலுக்கும், நிர்வாக அதிகாரத்திற்கும் தொடர்பு இல்லை. எதிர்க்க தேவையில்லை. மக்களை குழப்புகின்றனர். ஒரே தேர்தல் வேண்டாம் என்றால், மீண்டும் மாகாண அமைப்பு. ஏற்குமா எதிர்க்கும் கட்சிகள் .?
நிறைவேற்றப்பட வேண்டிய சட்ட மசோதா... வாழ்த்த வயதின்றி வணங்குகிறேன் திரு மோடி ஜி..
இதன் மூலம் ஒவ்வொரு தேர்தலுக்கும் பணம் வாங்கும் மக்கள் பாதிக்கப்படுவாரே.... இதை எப்படி அனுமதிக்க முடியும்?
ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் . இந்தி கூட்டணி இந்தியா தேசத்தின் களவாணிகள் இவர்களை களையெடுப்பதே இந்தியா மக்களுக்கு நல்லது . போதுமடா சாமி , இந்த மதுவுக்கும் இலவசத்திற்கும் ஆசை பட்டு இந்த களவாணிகளை தேர்தலில் ஜெயிக்க வைத்தது . தமிழர்களே விழித்துக் கொள்ளுங்கள் இல்லையேல் உங்கள் மொழியையும் நாட்டையும் அபகரித்தவர்கள் உங்கள் இனமே இல்லாமல் செய்து விட்டு , இவர்களே தங்களை தமிழர்கள் என்று கூறிக்கொள்வார்கள் .
ஒரு சாதாரண படிப்பறிவற்ற பாமரனுக்கு , ஏழை குடிமகனுக்கு ஜனநாயக மாண்பு, மாநில அரசின் உரிமைகள், ஒன்றிய அரசின் எதேச்சதிகாரம் , அரசியல் அமைப்பு சட்டத்தின் ஆட்சி , உரிமை மீறல் , பறிபோகும் சட்டமன்ற உரிமை என்றெல்லாம் சொன்னால் கண்டிப்பாக புரியாது. பாராளுமன்றத்தில் எம்பிக்கள் கத்துவதை பார்த்தால் அவன் ரெண்டு கட்சிக்குள்ள சண்டை என்றே புரிந்துகொள்ளுவான். அவன் பேசுவதை கூட புரிந்துகொள்ள நேரம் இருக்காது. அவசியம் இருப்பதாகவும் அவனுக்கு தோன்றாது. ஏன் இப்போது இருக்கும் இளைஞர்களிடம் கூட கேட்கலாம். இதை படிக்கும் யாரவது இது பற்றி ரோட்டில் , பஸ்சில் , ரயிலில் கூட நடப்பவர்களிடம், பயணிப்பவர்களிடம் பேச்சு கொடுத்தாலே போதும். இவற்றை பற்றி அவர்களுக்கு விளக்கமாக சொல்லத்தெரியாது.மொத்தத்தில் ஆளும் பாஜக மக்களுக்கு ஒரே தேர்தல் சட்டத்தின் சாராம்சத்தை அவர்களுக்கு புரியும் விதத்தில் எடுத்துக்காட்டோடு விளக்கவேண்டும். எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி தரும்விதமாக அடிக்கடி தேர்தல் வந்தால் செலவு அதிகம், அந்த செலவு எவ்வளவு, அந்த செலவை ஈடுகட்ட நாட்டு மக்கள் மீது கூடுதல் வரி போடவேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என்று மட்டுமே சொன்னால் போதும். எங்கே பொருளாதார ரீதியாக சொல்லிவிட்டால் அதுவே எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பூமராங் போல திரும்பி விடுமோ என்று பாமரனுக்கு புரியாத விஷயத்தை பற்றி காட்டுக்கத்தல் போட்டு அலறுகிறார்கள். இதுதான் நிதர்சனம்.
இது ஒரு சிறிய விஷயம் இதை இப்படி பெரிய கொடுமை போல பிட்ட போடும் எதிர் கட்சிகள் தப்பி தவறி கூட அடுத்த முறை வெற்றி பெறாதுகள் அடுத்த தேர்தல்களில் பா ஜா க தொடர் வெற்றிதான்
நிறைவேற்றப்படவேண்டிய மசோதா