தீப்பற்றிய கார் உயிர் தப்பிய பயணிகள்
மூணாறு:கேரளா, கோட்டயத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் காரில் காந்தலூருக்கு சுற்றுலா சென்று விட்டு நேற்று மதியம் திரும்பிக் கொண்டிருந்தனர். மூணாறு, உடுமலைபேட்டை ரோட்டில் கன்னிமலை எஸ்டேட் பகுதியில் வந்தபோது காரின் முன்பகுதியில் திடீரென புகை கிளம்பியது. காரை ரோட்டோரம் நிறுத்தி விட்டு அனைவரும் இறங்கினர். சில நிமிடங்களில் கார் தீப்பற்றி முற்றிலும் எரிந்தது. மூணாறு தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். தக்க சமயத்தில் காரில் இருந்தவர்கள் இறங்கியதால் காயமின்றி தப்பினர்.