வாசகர்கள் கருத்துகள் ( 8 )
மனுஷன் போடும் ஒரு சின்ன ரொட்டித்துண்டுக்காக தனது இன் உயிரை இழக்க எந்த நாயும் தயார். ஆனால் இது புரியாமல் டெல்லியில் எல்லா நாய்களையும் ஜெயிலில் அடைத்து கொன்றுபோடுங்கள் என்று நீதிபதி உத்தரவு போட்டார். நாய் பசி அல்லது பயத்தால் தான் கடிக்கிறது. தெரு நாய்களுக்கு சாப்பாடு போடாதீர்கள் என்று ஒரு கும்பல் மிரட்டுகிறது. பசியோடு இருந்தால் தான் நாய்கள் கடிக்கும். கல்லையெடுத்து அடிப்பதால், மனிதர்களை கண்டாலே விரோதிகளாக நாய்கள் பார்க்க தொடங்கிவிட்டன. பயத்தால் கடிக்கின்றன. அன்போடு பாருங்கள். சாப்பாடு போடுங்கள். உங்களை ஒருநாளும் கடிக்காது. உங்களுக்காக உயிரை விடும் ஜீவன் தான் நாய். நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யவேண்டும்.
வீட்டுக்குள் புகுந்த விஷப்பாம்பை அதே வீட்டில் வளர்ந்து வரும் நாய் சண்டையிட்டு போராடி விரட்டி உள்ளது. இதிலே எஜமானியை காப்பாற்றியது என்பது பில்ட் அப் போல தெரிகிறது
பொதுவாக நாய் நன்றியுள்ளது என்று கூறுவார்கள். ஆனால் திருமதி துஷாரா வளர்த்த நாய் நன்றியுடன் வீரத்தையும் காட்டியுள்ளது. அந்தளவிற்கு அந்த செல்ல நாயை வளர்த்த துஷாரா மற்றும் அவரது கணவருக்கும் பாராட்டுக்கள்.
unmai
நாய் காவல் தெய்வம் அசுரர்கள் பசுக்களை திருடுவதை தடுத்து தேவர்களை காக்க சரமா என்ற நாய் படைக்கப் பட்ட குறிப்புகள் ரிக் வேதத்தில் உண்டு அதன் வம்சாவளி சாரமேயம் - என்பது சம்ஸ்கிருதத்தில் நாய்களைக் குறிக்கும் சொல்! தன் யஜமானரைக் காத்த ராக்கி சீக்கிரம் குணமடைய வாழ்த்துகிறோம்
உண்மைதான் எங்க வீட்டு பைரவன் பப்புலு இரண்டும் பாம்பை கண்டால் விடாது. தோட்டதிற்கு இரவு என் கூடவே வரும் நன்றியுள்ள ஜீவன் என்றால் அது நாய் தான்
உண்மை நன்றியுள்ள ஜீவன்
நன்றியுள்ள ஜீவன்... எங்கள் வீட்டு நாயும் பல முறை பாம்பு வரும் போது குரைத்து எங்களை அலெர்ட் செய்து காப்பாற்றி உள்ளது