மேலும் செய்திகள்
சுள்ளியாங்குப்பத்தில் தேர் திருவிழா
3 hour(s) ago
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
3 hour(s) ago
உலக தாய்மொழி நாள் விழா
3 hour(s) ago
புதுடில்லி: நாட்டின் வளர்ச்சி மற்றும் சிறந்த நிர்வாகத்திற்கான வரைபடத்தை ஜனாதிபதி உரை எடுத்துக் காட்டி உள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதள பதிவில் கூறியுள்ளதாவது: பார்லிமென்ட் கூட்டுக் குழு கூட்டத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரையானது நாட்டின் வளர்ச்சி மற்றும் சிறந்த நிர்வாகத்திற்கான வரைபடத்தை எடுத்துக் காட்டியது. இந்தியா செய்து வரும் பணிகள் மற்றும் எதிர்காலத்தில் ஆற்ற வேண்டிய பணிகளை எடுத்துரைத்துள்ளது. நமது மக்களின் வாழ்க்கையில் தரமான மாற்றத்தை உறுதி செய்வதற்காக நாம் கூட்டாக ஆற்ற வேண்டிய சில முக்கிய சவால்கள் பற்றி அவரது உரையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அந்த பதிவில் மோடி கூறியுள்ளார்.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago