உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரயில்வே உட்கட்டமைப்பு பணி துவக்கி வைத்தார் பிரதமர்

ரயில்வே உட்கட்டமைப்பு பணி துவக்கி வைத்தார் பிரதமர்

புதுடில்லி : ஒடிசாவின் ராயகடா ரயில்வே மண்டல கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டியதுடன், தெலுங்கானாவில் சர்லாபள்ளி ரயில் நிலையம், ஜம்மு ரயில்வே மண்டலத்தையும் பிரதமர் நரேந்திர மோடி நேற்று துவக்கி வைத்தார்.ரயில்வே உள்கட்டமைப்புகளை விரிவுபடுத்தும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது. அந்த வரிசையில், ஒடிசாவின் ராயகடா ரயில்வே மண்டல கட்டடத்துக்கு பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். மேலும், தெலுங்கானாவில் சர்லாபள்ளி ரயில் நிலையம், ஜம்மு ரயில்வே மண்டலத்தையும், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பிரதமர் துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:நம் நாட்டின் ரயில்வே கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் புதிய பாய்ச்சலை நிகழ்த்தி வருகின்றன. 2025ம் ஆண்டு துவக்கத்தில், 'மெட்ரோ' ரயில் சேவை, 1,000 கி.மீ., துாரத்தை எட்டியுள்ளன. இப்போது துவங்கப்பட்டுள்ள இந்த மூன்று புதிய சேவைகள், வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு ரயில்வேயின் புதிய மைல்கல்லாக திகழும்.ரயில்வே துறையில் கடந்த 10 ஆண்டுகளில் மிகப் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. மொத்தம், 50 வழித்தடங்களில், 136 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. சமீபத்தில் நடந்த சோதனை ஓட்டத்தில், வந்தே பாரத் ரயில் மணிக்கு 180 கி.மீ., வேகத்தை எட்டியுள்ளது. நம் நாட்டின் முதல் புல்லட் ரயில் இயக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை. இவ்வாறு பிரதமர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி