வாசகர்கள் கருத்துகள் ( 16 )
மொத்தத்தில் பொதுமக்களை சுரண்டும் சுங்க வசூல் நிறுவனங்கள் ....... துணைபோகும் அரசுகள் .......
2001ல் சாலை திறப்பு. 2031வரை கட்டணம் வசூலிக்க அனுமதி. 15 ஆண்டுகளுக்கு பின் 2016 ல் நல சங்கம் கட்டணம் அதிகம் என்று வழக்கு. தடை. சாலைக்கு பின் தான் குடியிருப்பு கட்டப்பட்டு இருக்கும்? CAG- அரசு அமைப்பு. ஆடிட் அறிக்கை சட்டமன்றத்தில் விவாதிக்கப்படும். கட்டணம் வசூலிக்க தடை என்றால், நிறுவனம் மறுத்தால் பராமரிப்பது யார்? கட்டணம் மதிப்பீடு செய்து தீர்ப்பில் பரிந்துரை செய்யலாம். தீர்ப்பில் தீர்வு தேவை. முதலீடு செய்த பின் வழக்கும், தடையும் கடனை அதிகரிக்கும். சில பராமரிப்பு சங்கங்கள் வாடகையில் பாதி, பராமரிப்பு கட்டணமாக வசூலிக்கும். குறைகள் நாடு முழுவதும் உள்ளன. அரசு தான் குறைக்க முடியும்.
இங்கேயும் ஸ்ரீபெரும்புதூர் எட்டுவழி சாலை அமைக்க நில எடுப்பு செய்ததில் ஊழல் சாலை பராமரிக்கப் படவேயில்லையென்று சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு வந்து சாலை வரி பாதிதான் வசூலிக்கலாம் என்று தீர்ப்பு வந்ததே
நான் எந்த கட்சியையும் சாராதவன் நாடு முழுவதும் உள்ள பல பகல் கொள்ளையை விட மோசமாக கொள்ளையடித்து மக்களின் ரத்தத்தை உறிஞ்சும் டோல்களை நீக்க யாராவது வழக்கு தொடுக்க வேண்டும் சாலைக்கு செலவு செய்ததை விடவும் வசூல் செய்யும் கால வரம்பு முடிந்தும் இன்னும் பல மடங்கு சுங்கம் வசூலித்துக் கொண்டிருக்கும் டோல்கள் பல உள்ளன இந்த நாட்டில் அவைகளை கண்டறிந்து மூட வேண்டும் சாலைகள் அமைக்க டோல் தேவைதான் ஆனால் அது நியாயமான வசூல் செய்வதாக இருக்க வேண்டும்
டாஸ்மாஸ்க் நடத்த தெரிந்திருக்கும் அரசாங்கம் சாலைகள் அமைத்து நியாயமாக சுங்கவரி வசூலித்து முன்மாதிரியாக திகழலாம்
தனக்கு எல்லா சுதந்திரமும் வேண்டும் என்று நடந்து கொண்டு ...
என்ன சட்டமோ! என்ன தீர்ப்போ!! அரசாங்கம் சாலை போட வக்கில்லாததனால்தானே தனியாரை கூப்பிட்டது.
நொய்டா விரைவு சாலை தனியார் நிறுவனம் அமைப்பு. அதிக சுங்க கட்டணம் என்று நல சங்கம் வழக்கு. எவ்வளவு கட்டணம் செலுத்த முடியும் என்று நல சங்கம் வழக்கில் கூறியிருக்க வேண்டும். கட்டணம் வசூலிக்க நீதிமன்றம் தடை என்றால், பராமரிப்பு செலவு யார் பொறுப்பு? CAG - தணிக்கை அரசு - வரவு செலவுக்கு மட்டும். நாட்டில் நீதிமன்றத்தை தணிக்கைக்கு உட்படுத்தலாம். தனியார் நிறுவனம் மீது அரசு தணிக்கை கூடாது. ?
ஜி எம் எம் அவர்களே, என் டி பி சி ல் நிறுவனம் தங்களுடைய எஸ்டிமேட்க்கல நல சங்கங்களின் ஒப்புதலை கேட்டா கட்டணத்தை நிர்ணயம் செய்தார்கள்? இல்லை. அப்படியென்றால் நல சங்கங்கள் எதற்கு பயனாளிகள் இவ்வளவு கட்டணம் தான் கொடுக்கமுடியும் என்று வழக்கில் சொல்வதற்கு? நாட்டின் அரசு கணக்குகளை சரி பார்க்கும் தணிக்கையாளர் கொடுத்த ரிப்போர்ட்ஐ பார்த்து உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இந்த ரிப்போர்ட் பொது சொத்து. இதை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளலாம். அதை தான் நல சங்கங்கள் செய்திருக்கின்றன. மற்றும் 20 விழுக்காடு நிரந்தர வருமானம் லாபம் என்பது அதிகப்படியான ஒன்று. அதைத்தான் உச்ச நீதி மன்றம் சரியில்லை என்று சொல்லி இருக்கிறது. சாலை பராமரிப்புக்கு உண்டான செலவை அவர்கள் சுங்க கட்டணத்தில் சேர்திருப்பர்கள். இதுதான் நிலவரம். நீதி மன்றங்கள் இருப்பதினால் சாதாரண மக்கள் பிழைத்து கொண்டிருக்கிறார்கள். எனக்கு தெரிந்த ஒருவர் ஒரு மாநிலத்தில் உள்ள ஒரு துறையை அதன் வேலையை செய்ய சொல்ல உயர் நீதி மன்றத்தை நாட வேண்டியிருந்தது. இது தான் இன்றைய நிலை. நாம் நாட்டு பாதுகாப்பை கருதி வாங்கப்பட்ட விமான விவகாரம் உச்ச நீதி மன்றம் செல்ல வில்லையா? தனியார் நிறுவனத்தின் வரவு செலவு கணக்குகளை நீதி மன்றம் சில சமயங்களில் தணிக்கை செய்ய வேண்டும். இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஏனென்றால் அந்த வேலையை உச்ச நீதி மன்றம் செய்துள்ளது. நீர் உமது கருத்தை மாற்றி கொள்ள இது ஒரு வாய்ப்பு.
ஊழல் ரோடு ரோடா பெருக்கெடுத்து ஓடுது. 2031 வரை கேரண்டீடு.
உள்க்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தனியார் முதலீடுகளை பயன்படுத்தி குறிப்பிட்ட தரத்துடன் பராமரித்து வர பணம் செலவாகத்தான் செய்யும். அது கூடாது என்று சொல்லுவது தேசவிரோதம். ஒப்பந்தம் செய்யும் பொழுது இதையெல்லாம் கவனிக்காமல் விட்டுவிட்டு அதன்பின் புலம்புவது தேவையற்றது.
நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை தணிக்கைக்கு உட்படுத்தவேண்டும்