உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஓட்டு திருட்டில் பிரதமர் மோடிக்கும் தொடர்பு: ஹைட்ரஜன் குண்டு வெடிக்கும் என்கிறார் ராகுல்

ஓட்டு திருட்டில் பிரதமர் மோடிக்கும் தொடர்பு: ஹைட்ரஜன் குண்டு வெடிக்கும் என்கிறார் ராகுல்

வயநாடு: ''பிரதமர் நரேந்திர மோடி 2024 லோக்சபா தேர்தலில் வெற்றி பெற, ஓட்டு திருட்டில் ஈடுபட்டார். அது தொடர்பான, 'ஹைட்ரஜன்' வெடிகுண்டை விரைவில் வெடிக்க வைப்போம்,'' என, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் 2023ல் நடந்த சட்டசபை தேர்தலின்போது, ஆலந்த் தொகுதியில் 6,018 வாக்காளர்களின் பெயர்களை நீக்க முயற்சி நடந்ததாக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் சமீபத்தில் குற்றஞ்சாட்டினார். 18 கடிதங்கள் இதற்காக, 'ஆன்லைன்' மூலம் பிரத்யேக செயலி பயன்படுத்தப்பட்டதாகவும், வாக்காளர் பட்டியலில் இருந்து உறவினரின் பெயரை சிலர் நீக்க முயற்சித்ததை ஓட்டுச்சாவடி அளவிலான அதிகாரி ஒருவர் தற்செயலாக கண்டறிந்தபோது, இந்த மோசடி தெரியவந்ததாகவும் ராகுல் கூறியிருந்தார். பெயர் நீக்கத்திற்கான விண்ணப்பங்கள் எங்கிருந்து சமர்ப்பிக்கப்பட்டன என்பதற்கான இணையதள ஐ.பி., முகவரி மற்றும் ஓ.டி.பி., எனப்படும் ஒருமுறை கடவுச்சொல் பதிவு விபரங்களை தருமாறு, தேர்தல் கமிஷனுக்கு 18 மாதங்களில் 18 கடிதங்களை அனுப்பியுள்ளனர். ஆனால், இதுவரை தேர்தல் கமிஷன் அதனை வழங்கவில்லை என்றும் அவர் விமர்சித்திருந்தார். அதே நேரம், ராகுலின் இந்தக் குற்றச்சாட்டை தேர்தல் கமிஷன் மறுத்திருந்தது. ஆன்லைன் மூலம் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை யாராலும் நீக்க முடியாது என தெரிவித்தது. வாக்காளர் பெயரை நீக்குவதற்கு முன்பாக சம்பந்தப்பட்டவருக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்றும் கூறியிருந்தது. இந்நிலையில், வயநாட்டில் நேற்று செய்தியாளர்களிடம் ராகுல் கூறியதாவது: ஓட்டு திருட்டு குறித்து ஒரு ஹைட்ரஜன் வெடிகுண்டு விரைவில் வெடிக்கும். அப்படி நடந்ததா என யாருமே சந்தேகப்பட்டிருக்க மாட்டார்கள். யதார்த்த நிலவரத்தை அப்படியே அழித்து விடும் அளவுக்கு அந்த உண்மை இருக்கும். ஆதாரங்கள் இல்லாமல் எதையும் சொல்வதில்லை. நடந்தவை குறித்து 100 சதவீத ஆதாரங்கள் எங்களிடம் இருக்கின்றன. விரைவில் அவற்றை வெளியிடுவோம். பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட்ட வாரணாசி தொகுதி பற்றியது தான் இந்த ஹைட்ரஜன் வெடிகுண்டா என்ற கேள்விக்கான விடையை, ஊடகங்களின் கணிப்புகளுக்கே விட்டு விடுகிறேன். என் வேலையை நான் செய்கிறேன். முறைகேடு கர்நாடகாவில் காங்கிரஸ் செல்வாக்கு பெற்ற ஓட்டுச்சாவடிகளில் இருந்து அதிக அளவில் வாக்காளர்களின் பெயர்களை நீக்க முயற்சி நடந்தது. மகாதேவபுரா, ஆலந்த் உள்ளிட்ட தொகுதிகளில் நடந்தது பற்றி நாங்கள் காண்பித்தோம். ஆலந்த் தொகுதியில் வாக்காளர் பெயர்களை நீக்க உதவிய போன் நம்பர்களை பகிருமாறு, தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாரிடம், மாநில சி.ஐ.டி., கேட்டிருந்தது. ஆனால், இதுவரை அவர் வழங்கவில்லை. இந்த முறைகேடு குறித்து கர்நாடக சி.ஐ.டி., தீவிரமாக விசாரித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Sivanantha Raja A
செப் 21, 2025 19:28

ஓட் போடும் நடைமுறையை நன்கு அறிந்தவர்கள் இவர் கதறலை கேட்டு தலையில் அடித்து கொள்வார்கள். ராஜ்ய சபாவுக்குக்கூட எங்க ஓட் போடணும்னு தெரியாதவர்.


HoneyBee
செப் 21, 2025 17:27

கடைசி வரை நீ நல்லா கதறி கிட்டே இரு பப்பு.


Oviya vijay
செப் 21, 2025 15:05

பப்பு வின் கதறல் அருமை பெருமை இனிமை. ஹா ஹா ஹா...


Prasath
செப் 21, 2025 14:16

ஹைட்ரஜன் குண்டு வெடிக்கும் இவன் ஆசனதில் இருந்து அவ்வளவுதான் இவனால் முடியும் இவன் மைக் பிடிச்சு பேசினாலே... இது வேறயா


நிக்கோல்தாம்சன்
செப் 21, 2025 10:00

கருநாடகத்தில் கரப்ஷன், கலெக்ஷன், கமிஷன் என்பதற்கு பெங்களூரு சாலைகள் சாட்சி ஒரு மாதம் முன்பு போடப்பட்ட சாலைகளும் பல்லை இளிக்கின்றன ராகுல், சோரி என்ற பொருளின் பதத்தை உங்களின் ஆட்சி வெகு எளிதாக வெளிக்காட்டுகிறது. சசிகாந்த் செந்தில் டீம் செய்த ஊழ்வினையால் இன்று கருநாடக மக்கள் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவிக்கின்றனர்


veeramani
செப் 21, 2025 09:43

இந்திய தேர்தல் கமிஷன் அனைத்து தேர்தல்களுக்கு முன்னர் வாக்காளர் சேர்ப்பு அறிவிப்பு கொடுத்து பின்னர்தான் தேர்தல் நடத்துகிறது. மாவட்ட கலெக்டர் வாக்குஅளிப்போர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளிடம் அளிக்கிறார். உடனடியாக சரிசெய்யமுடியும். முன்னர் தூங்கிவிட்டு பின்னர் கதறினால் எவர் என்னசெய்ய இயலும்


jaya
செப் 21, 2025 09:11

இந்த ஜோக்கர் மிகவும் விரக்தியடைந்துள்ளார். தான் ஒருபோதும் பிரதமராகவோ அல்லது பிரதமர் வேட்பாளராகவோ வரமாட்டேன் என்று அவருக்குத் தெரியும். அதனால் நாளுக்கு நாள் அவர் தனது விரக்தியைக் காட்டி வருகிறார். இந்த பொய்யான அறிக்கைகளுக்காக அவர் கைது செய்யப்பட்டால், அவர் அனுதாபத்தைப் பெற முடியும் என்பது அவருக்குத் தெரியும்.


R.MURALIKRISHNAN
செப் 21, 2025 09:05

உலக மகா பொய்யன் இந்த பப்பு என்கிற ராகுல். இப்ப ஒரு ரெண்டு மாசம் டூர் போவார் பாருங்களேன். இந்தியாவுக்கு உதவாத ஒருவர்.


Kanns
செப் 21, 2025 07:37

Expose& Eliminate this Divisive-Destructive ForeignAgent AntiNation AntiNativePeople Dreaded Conspirator Gangs


சாமானியன்
செப் 21, 2025 07:13

ராகுல் காந்தி சொல்வது அபத்தம். பொய் செய்தி பரப்புபவர்கட்கு கடுமையான தண்டனை தற்போது இல்லை. அதை சாதகமாக வைத்துக்கொண்டு அரசியல் விளையாட்டு விளையாடுகிறான். நாடு கடத்தப்பட வேண்டும் குடும்பத்துடன்.


Senthoora
செப் 21, 2025 07:59

சரி, அவர் சொல்வது அபத்தம், மடியில் கணம் இல்லை என்றால் யாருக்கு பயப்படணும். இந்த தேர்தலில் ஒட்டு சீட்டுப்பயன்படுத்தலாமே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை