வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஜி.எஸ்.டி குறைஞ்சதிலேயே பணம் கொட்டோ கொட்டுனு கொட்டுது...
புதுடில்லி: ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வட்டி விகிதம் 5.5 சதவீதமாக நீடிக்கும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்தார்.வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம் ரெப்போ வட்டி விகிதம். இரு மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கி கூடி, ரெப்போ வட்டி விகிதம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கும். இந்நிலையில் இன்று (அக் 01) வங்கிகளின் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4synbnk0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வட்டி விகிதம் 5.5 சதவீதமாக நீடிக்கும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்தார். மேலும், அவர் கூறியதாவது: வளர்ந்து வரும் பொருளாதார மற்றும் நிதி முன்னேற்றங்கள் மற்றும் எதிர்கால தொலைநோக்கு பார்வை அடிப்படையில் ரெப்போ வட்டி விகிதத்தை 5.5% ஆக மாற்றாமல் வைத்திருக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அடுத்த ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 6.8 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்கா வரி தொடர்பான முடிவுகள் வளர்ச்சியை பாதிக்கும்.இவ்வாறு சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தார்.880 டன் தங்கம்
மேலும் சஞ்சய் மல்ஹோத்ரா கூறியதாவது: ஜிஎஸ்டி வரி குறைப்பு உள்ளிட்ட மத்திய அரசிவ் நடவடிக்கைகள் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். இந்திய ரிசர்வ் வங்கியிடம் 880 டன் தங்கம் கையிருப்பில் உள்ளது. இதன் மதிப்பு 4.32 லட்சம் கோடி ரூபாய். இவ்வாறு அவர் கூறினார்.
ஜி.எஸ்.டி குறைஞ்சதிலேயே பணம் கொட்டோ கொட்டுனு கொட்டுது...