மேலும் செய்திகள்
இ-சிகரெட், லேப்டாப் பறிமுதல்
06-Oct-2025
புதுடில்லி: சர்வதேச விமான நிலையத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்துடன் மியான்மர் நாட்டு பெண் கைது செய்யப்பட்டார். மியான்மர் நாட்டின் யாங்கோன் நகரில் இருந்து, புதுடில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்று முன் தினம் வந்த விமானத்தில் வந்த பயணியரிடம் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஒரு பெண் பயணி உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த, 996.5 கிராம் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு 1.17 கோடி ரூபாய் என மதிப்பிட்டுள்ள அதிகாரிகள், அந்தப் பெண்ணை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
06-Oct-2025