உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹாரில் ரூ.25 கோடி மதிப்பு நகைகள் துணிகர கொள்ளை: இருவரை சுட்டுப்பிடித்த போலீஸ்

பீஹாரில் ரூ.25 கோடி மதிப்பு நகைகள் துணிகர கொள்ளை: இருவரை சுட்டுப்பிடித்த போலீஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: பீஹார் மாநில நகைக்கடையில் பட்டப் பகலில் துப்பாக்கி முனையில் ரூ.25 கோடி மதிப்பு நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பீஹாரில் உள்ள அரா மாவட்டம் கோபாலி சவுக் கிளையில் உள்ள நகைக் கடையில் இன்று(மார்ச் 10) காலையில் ஊழியர்கள் தங்கள் வழக்கமான பணிகளை செய்து கொண்டிருந்தனர்.அப்போது அங்கு துப்பாக்கியுடன் திடீரென உள்ளே புகுந்த 6 பேர் கொண்ட கும்பல், கடையின் கதவை மூடிவிட்டனர். கடையில் இருந்த ஊழியர்களை துப்பாக்கி முனையில் சிறைவைத்து நகைகளை கொள்ளை அடித்தனர். அப்போது அந்த கும்பல் ஊழியர்களை தாக்கியதில் இருவருக்கு காயம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து நகைகளை கொள்ளை அடித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் தப்பிச்செல்லும் போது அவர்களை விரட்டிச்சென்ற போலீசார் தற்காப்புக்காக சுட்டதில் 2 கொள்ளையர்கள் காயம் அடைந்தனர்.போஜ்பூர் போலீசார் கூறியதாவது:கொள்ளையடித்துச்சென்றவர்களில் இருவரை சுட்டுப்பிடித்து கைது செய்துள்ளோம். அவர்களிடமிருந்து திருடிய நகைகளை மீட்டுவிட்டோம். அந்த நகைகளின் மதிப்பு ரூ.25 கோடி. அவர்களிடமிருந்த 2 துப்பாக்கிகள் மற்றும் 10 தோட்டாக்கள், வாகனங்கள் பறிமுதல் செய்துள்ளோம். தப்பியோடிய 4 கொள்ளையர்களை தனிப்படை அமைத்து தேடி வருகிறோம்.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Azar Mufeen
மார் 10, 2025 22:30

தி மு க, பாஜக ஆளும் மாநிலங்களில் இதுலாம் சகஜமப்பா


kantharvan
மார் 10, 2025 22:01

புதிய கல்வி கொள்ளை


Karthik
மார் 10, 2025 21:49

சுட்டுப் பிடிக்கக் கூடாது.. கண்டவுடன் சுட்டுக் கொல்லனும் அந்த நாய்ங்க யாராயிருந்தாலும். அப்பத்தான் மத்தவனும் தப்புப் பண்ண துணியமாட்டான்.


Ramesh Sargam
மார் 10, 2025 19:47

தப்பியோடியவர்கள் அநேகமாக வங்காள தேசத்துக்கு அல்லது பாகிஸ்தானுக்கு தப்பி செல்ல வாய்ப்புள்ளது. ஆகையால் இந்திய எல்லையில் பாதுகாப்பை வலுப்படுத்தவும்.


கலைஞர்
மார் 10, 2025 19:46

இதுவே தமிழ் நாடா இருந்தா திருடர்களுக்கு மாவு கட்டு போட்டு மருத்துவமனையில் அட்மிட் பண்ணிருப்பாங்க..நகைகளை மீட்க மாட்டாங்க..


MARUTHU PANDIAR
மார் 10, 2025 19:17

கொள்ளையர்களின் பெயர்களையும் வெளியிட்டிருக்கலாம்


V K
மார் 10, 2025 19:16

யார் அங்கே யாரடா அங்கே நம் தி மு க வுக்கு போட்டியா பீகார்ல


முக்கிய வீடியோ