உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சல்மான் கானை கொல்ல ரூ.25 லட்சம் பேரம்: போலீசார் திடுக் தகவல்

சல்மான் கானை கொல்ல ரூ.25 லட்சம் பேரம்: போலீசார் திடுக் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொலை செய்ய சிறையில் உள்ள லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் ரூ.25 லட்சம் பேரம் பேசியதாக போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவித்து உள்ளனர்.பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான், மும்பையின் பாந்த்ரா பகுதியில் வசித்து வருகிறார். கடந்த ஏப்., 14ம் தேதி அதிகாலை அவர் வீடருகே துப்பாக்கிச்சூடு நடந்தது. இச்சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு ஆயத சப்ளை செய்த மேலும் இரண்டு பேரையும் கைது செய்தனர். அதில் குற்றவாளி ஒருவர், சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

கண்காணிப்பு

நவி மும்பை போலீசார் நீதிமன்றத்தில் 5 பேர் மீது தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் கூறியதாவது: பண்ணை வீட்டில் சல்மான் கானை கொலை செய்வதற்கு ரூ.25 லட்சம் பேரம் பேசப்பட்டு உள்ளது. இந்த பேரத்தை சிறையில் உள்ள ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் பேசி உள்ளான். கொலையில் ஈடுபட புனே, ராய்காட், நவி மும்பை, தானே மற்றும் குஜராத்தில் உள்ள 18 வயதுக்கும் குறைவான சிறார்களை தேர்வு செய்துள்ளனர். பந்த்ரா வீடு, பன்வெல் பண்ணை வீடு, கூர்கான் திரைப்பட நகரில் சல்மான்கானின் நடவடிக்கைகளை 60 முதல் 70 பேர் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். 2023 ஆக., முதல் ஏப்.,2024 வரை சல்மான் கானை கொலை செய்வதற்கான அனைத்து திட்டங்களையும் தயாரித்து உள்ளனர்.

பாக்., ஆயுதம்

கொலை முயற்சி வழக்கில் கைதான சுக்லா என்பவன் தான், அஜய் கஷ்யாப் உள்ளிட்டு பேரிடம் சல்மான்கானை கொல்வதற்கான பொறுப்பை ஒப்படைத்து உள்ளான். சல்மான் கானுக்கு உள்ள பாதுகாப்பு, குண்டு துளைக்காத வாகனங்கள் காரணமாக கொலை செய்வதற்கு அதிநவீன ஆயுதங்களை வாங்க வேண்டும் என இக்கும்பல் கூறியுள்ளது. இதனையடுத்து, சல்மான் கானை கொலை செய்வதற்காக ஏகே 47, ஏகே 92 மற்றும் பாகிஸ்தானில் இருந்து எம்16 உள்ளிட்ட ஆயுதங்களையும் வாங்கி உள்ளனர். இதற்காக பாகிஸ்தானை சேர்ந்த ஆயுத தரகரையும் வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டுள்ளனர். இதற்காக முதற்கட்டமாக 50 சதவீதம் பணத்தை முன்பணமாகவும் கொடுக்க ஒப்புக்கொண்டனர்.

இலங்கைக்கு...

கனடாவில் வசிக்கும் ரவுடி கோல்டி பிரார், சிறையில் உள்ள லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரன் அன்மோல் பிஷ்னோய் ஆகியோரின் ஒப்புதலுக்காக காத்திருந்தனர். கொலை செய்த பிறகு அவர்கள் அனைவரும் கன்னியாகுமரியில் ஒன்று கூடி இலங்கைக்கு தப்பி செல்லவும் திட்டமிட்டனர். இவ்வாறு அந்த குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டு உள்ளது.

பாதுகாப்பு அதிகரிப்பு

மும்பையில் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து சல்மான் கானுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை போலீசார் அதிகரித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Sathyanarayanan Sathyasekaren
அக் 17, 2024 22:28

சல்மான் கான்னால் பாதிக்கப்பட்டோர், வாழ்க்கையை இழந்தோர் எக்கச்சக்க பேர் உள்ளனர்.


அப்பாவி
அக் 17, 2024 21:56

என்ன? வெறும் 25 லட்சம் தானா? அதான் போலீஸ் அதிர்ச்சி.


Barakat Ali
அக் 17, 2024 20:47

சல்மான்கான் விவகாரம் மக்களைத் திசை திருப்ப ...... ரியல் எஸ்டேட் போட்டிதான் சித்திக் கொலைக்குக் காரணம் .......


Ramesh Sargam
அக் 17, 2024 19:57

கனடாவில் பிஷ்னோய் கும்பல் அட்டூழியம். யாரிந்த பிஷ்னோய்? அவன் மற்றும் அவன் கும்பலுக்கு என்று தண்டனை கிடைக்கும்? வெறும் வழக்கு பதிவு செய்து, சிறையில் மூன்று வேலை சாப்பாடு போட்டுக்கொண்டிருந்தால், தண்டனை எதுவும் நிறைவேற்றாமல், அவன் மேலும் பல அட்டூழியங்களை செய்துகொண்டுதான் இருப்பான். நீதிமன்றம் இதுபோன்ற வழக்குகளை அதிசீக்கிரத்தில் விசாரித்து குற்றவாளிகளுக்கு கடுமையாக தண்டிக்கவேண்டும்.


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
அக் 17, 2024 19:40

இந்த லாரன்ஸ் பிஷ்னோய் வைத்து திரைப்படம் தயாரித்து அதில் அவரை தியாகி போல் சித்தரித்து காட்ட சென்னையில் பல திரைப்பட கம்பெனிகள் இப்பொழுதே தயாராகிக் கொண்டிருக்கும். வாழ்க தமிழ் வளர்க தமிழகம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை