உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உ.பி., பிரிஜ் மண்டலத்துக்கு ரூ.30,000 கோடி

உ.பி., பிரிஜ் மண்டலத்துக்கு ரூ.30,000 கோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரா: உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு மதுரா, ஆக்ரா, அலிகார், ஹத்ராஸ் மற்றும் எட்டா மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதி பிரிஜ் மண்டலம் எனப்படுகிறது. இதில் மதுரா, கிருஷ்ணர் பிறந்த இடமாக கருதப்படுகிறது. பிற இடங்களும் ஹிந்து புராணங்களுடன் நெருங்கிய தொடர்புடையவை. இந்த இடங்களுக்கு ஏரா ளமான பக்தர்கள், பயணியர் வருகை தருகின்றனர் . இந்நிலையில், புனித தலங்கள் அமைந்துள்ள மதுரா, பிருந்தாவன், பார்சனா மற்றும் கோகுல் ஆகியவற்றை இணைக்க, 30,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தை, கிருஷ்ண ஜெயந்தியான நேற்று முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார். மேலும், மதுரா - பிருந்தாவனில் 646 கோடி ரூபாய் மதிப்பிலான 118 திட்டங்களுக்கும் நேற்று அடிக்கல் நாட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

J.Isaac
ஆக 17, 2025 11:46

உ.பியை தனி நாடாக அறிவித்தால் மற்ற மாநிலங்கள் முன்னேற்றம் அடையும்


S.L.Narasimman
ஆக 17, 2025 07:19

விடியா அரசு தார்ரோடுன்னு போட்டு அடுத்த நாளே அல்வா மாதிரி பேர்ந்து போவதும், கட்டிய பாலங்கள் ஆறேமாதத்தில் உடைந்து போவதும், பாட்டிலுக்கு பத்து ரூபாய் வறிய மக்களிடம் கொள்ளை அடிப்பதும், கள்ளச்சாராயம், வன்முறை ஊழல், லஞ்சம் பெருகி தமிழகத்தை குட்டி சுவர் ஆக்குவதை தவிர எந்த மக்கள் நலபணிகளை தீயசக்தி செய்யவில்லை. அவிக அவங்க நாட்டை முன்னேற்றுவதில் உள்ளனர்


venugopal s
ஆக 17, 2025 06:19

சொந்தமாக உழைத்து சம்பாதித்த பணமாக இருந்தால் அதன் அருமை தெரியும். தென் இந்தியாவைக் கொள்ளை அடித்து கிடைத்த பணம் தானே? எப்படி வேண்டுமானாலும் செலவு செய்யலாம்!


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஆக 17, 2025 07:18

எப்படி? 1950-70 களில் வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று ஒப்பாரி வைத்து மத்திய அரசின் வருமானத்தில் பெரும் பங்கை ஆட்டையை போட்டு, வடமாநிலங்களின் வறுமையில் சுகமாக வாழ்ந்து, ஊழலில் குளித்தது திராவிடக் கூட்டம். அதை வசதியாக மறந்துவிட்டு இன்று அம்மாநில மக்களும் முன்னேறத் துவங்கியதைப் பார்த்து வயிறு எரியும் கீழ்த்தரமான புத்தியுள்ளவர்கள்தான் திராவிடர்கள். அனைத்து மாநில மக்களின் முன்னேற்றம்தான் ஒட்டுமொத்த நாட்டின் முன்னேற்றம் என்ற அடிப்படை அறிவு இல்லாத கூட்டம்தான் திராவிடர் கூட்டம்.


vivek
ஆக 17, 2025 07:59

மறதியில் ஸ்டாலினை சொல்கிறாய்...


N Sasikumar Yadhav
ஆக 17, 2025 08:10

உங்க மானங்கெட்ட கொத்தடிமையான உங்க மூளை உங்கள மாதிரியே கேவலமாக யோசிக்கிறது கண்ணெதிரே தமிழக மக்களின் ரத்தத்தை திருட்டு திராவிட மாடல் உறிஞ்சிகிறது . இதை கேட்க வக்கில்லாத நீங்க


என்னத்த சொல்ல
ஆக 17, 2025 09:24

30000 கோடி செலவழித்து ஒரு 300 பேருக்கு கூட வேலை கொடுக்கல. ஓசியா வர்ற பணம்தானே ...


ஆரூர் ரங்
ஆக 17, 2025 11:19

70 ஆண்டுகளில் காஷ்மீரிலிருந்து மத்திய அரசுக்குக் கிடைத்த வருவாயை விட 10 மடங்கு மத்திய நிதி அவர்களுக்கு ஒதுக்கப்பட்டது. கிறிஸ்தவர்கள் மெஜாரிட்டியாக உள்ள வடகிழக்கு மாநிலங்களுக்கு வசூலை விட 5 மடங்கு வரை ஒதுக்கப்பட்டது. அதெல்லாம் உங்கள் கண்ணில் படாது. ஜிஎஸ்டி விலக்கு, வருமானவரி விலக்குள்ள விவசாய உற்பத்தியை முக்கிய தொழிலாகக் கொண்ட உ.பி க்கு நிதி ஒதுக்குவதை எதிர்ப்பது மதவாத எண்ணம். ஹிந்து வெறுப்பு.


என்னத்த சொல்ல
ஆக 17, 2025 13:12

நீங்க உ பி க்கறாரா?


சமீபத்திய செய்தி