வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இந்த போர் நிறுத்த வேண்டும் என்றால் ஒரே வழி தான் உண்டு உக்ரைனை ரஷ்யாவுடன் இணைத்து விடுவது தான். அமெரிக்காவின் போலி வாக்குறுதிகள் நம்பி உக்ரைனின் ஜெலன்ஸ்கி போரில் ஈடுபட்டது தவறு. எந்த ஒரு நாடும் மற்றொரு நாட்டின் வாக்குறுதிகளை நம்பி போர் போன்ற முக்கிய முடிவுகள் எடுக்க கூடாது என்பதற்கு உக்ரைன் ஒரு சாட்சி. ஆட்சி மாற்றம் ஏற்படும் போது வாக்குறுதிகள் நிறைவேறாமல் போக வாய்ப்புகள் அதிகம். ஜெலன்ஸ்கி இளைய வயதுகாரர். அனுபவம் குறைவாக இருக்கலாம். ரஷ்யாவை உக்ரைன் பொருளாதார ரீதியாகவும் தாழ்ந்த நிலையில் தான் உள்ளது. ஆகவே ஜெலன்ஸ்கி உக்ரைன் நாட்டு மக்களுக்கு ஆக விட்டு கொடுத்து ரஷ்யாவுடன் நட்புறவு பாராட்டி போரை நிறுத்த வேண்டும். இல்லை என்றால் போர் தொடர்ந்தால் உள்நாட்டில் ஜெலன்ஸ்கி எதிர்ப்பு வலுக்க ஆரம்பித்துவிடும். ஜப்பான் இரண்டாம் உலகப் போரில் அமெரிக்க அணுகுண்டு வீசியவுடன் போரை முடிவுக்கு கொண்டு வந்தது. பின்னர் தன்னை அழித்த அதே அமெரிக்காவுக்கு தனது உழைப்பின் மூலம் தாங்கள் யார் என்பதை நிரூபித்து இன்று உலகில் தொழில்நுட்பத்தில் முன்னணி நாடாக உள்ளது.
ManiMurugan Murugan அமெரிக்க அதிபர் சீனாவை இருண்ட என்று சொல்வது வேடிக்கை யே பிறகு ஏன் அமெரிக்கா சீனாவிடமும் வர்த்தகம் செய்கிறது அமெரிக்க இருண்ட சீனாவிடம் மாட்டவில்லையா அமெரிக்க மக்களின் அத்தியாவசிய பொருட்கள் இந்தியாவின் இறக்குமதி மக்கள் நலன் பேசும் அமெரிக்க அதிபருக்கு அது பெரிது இல்லை மக்கள் காசு கொடுத்து வாங்கட்டும் ஆனால் அமெரிக்க அரசு இராணுவ உபகரணங்கள் உதிரிகள் காசு கொடுத்து வாங்க க் கூடாது என்ன ஒரு சமுதாய சீர்திருத்த எண்ணம் ஒரு வளர்ந்த நாட்டின் அதிபரின் மனப்போக்கு இது தான் இதில் ஒரு கூட்டம் மேலை நாட்டினர் என்று ஒப்பாரி கேவலம்
உக்ரைனை பலிகடா ஆக்கியது அமெரிக்காவின் ஏகபோக அதிகாரமே .சோவியத் யூனியன் கியூபாவில் missile நிறுவ முற்பட்டபோது அமெரிக்கா அதை தடுக்கும் முயற்சியில் அணுகுண்டு போர் நடத்தவும் தயாரானது என்பதை கண்டு உலகமே அலறியது .அப்படியிருந்தப்போது உக்ரைனை நேட்டோ அமைப்பில் இணைத்து அமெரிக்காவின் missile கள் உக்ரைனின் ரஷ்யா எல்லையில் நிறுவப்படும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியதே அமெரிக்காதான் .அதன்விளைவே ரஷ்யாவின் உக்கிரனின் போர்தொடுப்பு .இப்போதும் ரஷ்யா எல்லையில் எந்த அமெரிக்கா போர் ஆயுதங்களையும் நிருவாது என்ற உத்திரவாதத்தை தர அமெரிக்கா தயாராக இல்லை .அமெரிக்கா உக்ரைநை நேட்டோவில் இணைக்காது ,எந்த போர் ஆயுதங்களையும் உக்ரைனில் ரஷ்யாவுக்கு எதிராக நிருவாது என்ற உத்திரவாதம் தந்தால் ஒருவேளை அமைதி ஒப்பந்தம் ஏற்படவாய்ப்புண்டு.அதை ரஷ்யா வின் புடிநே ஓரிடத்தில் அறிவித்துவிட்டார் .இதை மறைத்து போருக்கு காரணமே இந்தியாதான் என்று மடைமாற்றம் செய்ய முயற்சிப்பது அமெரிக்காவின் அறிவீனமான ராஜதந்திரம் .உலகில் யாரும் நம்பமுடியாத தாகும்.அலஸ்க்கா பேச்சுக்கப்புறம் புடின் உற்சாகமாகவும் டிரம்ப் உற்சாகமின்றி காணப்பட்டதின் காரணமே இந்த காரணங்களை புடின் முன்னெடுத்துவைத்ததே .
ரஷ்யா... உக்ரைன் போர் ஏற்பட காரணம் அமெரி்க்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தான்..... பில்லியன் டாலர் கணக்கில் பணம் மற்றும் ஆயுதங்களை உக்ரைன் நாட்டுக்கு கொடுத்து சண்டையை மூட்டி விட்டதே நீங்கள் தான்.... இப்போது இந்தியா மீது குறை சொல்ல வந்துட்டான் அமெரிக்ககாரன் .
கம்மியான விலையில் பொருள் எங்கு கிடைக்குதோ அங்கு தாராளமா பொருள் வாங்கலாம்.மற்றவங்க இஷ்டத்துக்கு நாம பொருள் வாங்க முடியாது.
அமெரிக்க அதிபருக்கு இந்தியாமீது 50-0சதவீதம் வரி விதிக்கும் முன்பல முறை யோசித்து நமது பிரதமர் மோடியைம் கலந்தாலோசித்து முடிவு எடுத்து இருக்க வேண்டும்.திடீரென்று பாம் போட்ட மாதிரி வரிப்பாம் இந்தியாமீது போட்டாலே இந்திய அதிலிருந்து எப்படி மீள்வது என்று எல்லா வழிகளையும்தான் காணும். இப்போது வருந்தி என்ன பயன்.டிரம்பிற்கு இது கண் கெட்டுபோனபின் சூரிய நமஸ்காரம் செய்வது போன்றுதான்
தரமான, பொறுமையான பதில். அமெரிக்காவை மட்டுமே நம்பி இந்தியாவில் பல லட்சம் தொழிலாளர்களும், பல்வேறு ஏற்றுமதி நிறுவனங்களும், உற்பத்தி துறைகளும் உள்ளன என்று இந்தியாவிற்கு நன்றாகத் தெரியும். ஏற்கெனவே உற்பத்தி செய்து விற்பதற்கு தயாராக பல்லாயிரம் கோடி மதிப்பிலான பொருட்கள் தேங்கியுள்ளது. கையில் இருக்கும் உற்பத்திக்கான ஆர்டர்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. இந்த பிரச்சனை ஓயும்வரை இனி புதிய ஆர்டர்கள் வராது. அமெரிக்காவை நம்பி உள்ள தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடப்படும் நிலை. பல லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம். நமது உற்பத்தி திறனை முழுமையாக பயன்படுத்தும் அளவுக்கு புதிய ஆர்டர்கள் வேறு நாடுகளில் இருந்து கிடைப்பது அரிது. இந்திய அரசு பொறுமையாக இருந்து, இந்த டிரம்ப் சிக்கலில் இருந்து மீண்டு வரும்வரை, இன்னும்சில மாதங்களாவது, நாம் அனைவரும் நிதானம் காக்க வேண்டும். அரசின் ராஜதந்திர முயற்சிகளில் நம்பிக்கை வைப்போம். வாழ்க பாரதம்.
மிக மிக எளிதான பதில் "நான் கச்சா எண்ணை யார் வெகு சீக்கிரம் தருகின்றார்களோ யார் குறைந்த விலையில் தருகின்றார்களோ அவர்களிடம் வாங்குவோம் எங்களது பணத்தில் . நீ யாரடா எனக்கு உபதேசம் சொல்ல அங்கே வாங்காதே இங்கே வாங்காதே என்று சொல்ல"