உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மோசடியாளர் என அறிவித்த எஸ்.பி.ஐ., ;அனில் அம்பானி நிறுவனங்களில் ரெய்டு

மோசடியாளர் என அறிவித்த எஸ்.பி.ஐ., ;அனில் அம்பானி நிறுவனங்களில் ரெய்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லி மற்றும் மும்பையில் உள்ள தொழிலதிபர் அனில் அம்பானி நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தொழிலதிபர் அனில் அம்பானி மற்றும் அவரது நிறுவனமான ரிலையன்ஸ் கம்யூனிகேசனையும் மோசடியாளர் என்று எஸ்.பி.ஐ., அறிவித்தது. இதைத் தொடர்ந்து, அம்பானி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=harnmw7r&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மோசடியாளர் என அறிவிக்கக் காரணம்?பல்வேறு நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்காக, யெஸ் வங்கியின் நிறுவனர் ராணா கபூர், சட்டவிரோதமாக நிதி ஆதாயம் பெற்றிருந்தது. இப்படி பட்ட சூழலில், யெஸ் வங்கியிடம் அனில் அம்பானி ரூ.12 ஆயிரத்து 800 கோடி கடன் பெற்றுள்ளார்.எனவே, இத தொடர்பாக அனில் அம்பானியிடம் அமலாக்கத்த்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. கடந்த ஜூன் 13ம் தேதி அனில் அம்பானி மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தை, எஸ்.பி.ஐ., மோசடியாளர் என பட்டியலிட்டது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் மற்றும் அதன் இணை நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக ரூ.31,580 கோடி கடன் பெற்றுள்ளது. இதில், 44 சதவீதத்தை, அதாவது ரு.13,667 கோடி, ஏற்கனவே வாங்கிய கடனை அடைப்பதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ரூ.12,692 கோடியை துணை நிறுவனங்களுக்கு மாற்றம் செய்துள்ளது. இதுவரையில் வாங்கிய ரூ.41,863 கோடி கடன் தொகையில், ரூ.28,421 கோடியின் பயன்பாடு மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது. எனவே, தான் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தையும், அனில் அம்பானியையும் மோசடியாளர் என்று எஸ்.பி.ஐ., வகைப்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

ராஜா
ஜூலை 25, 2025 07:44

இதைக் கண்டுபிடிக்க இவ்வளவு ஆண்டுகள் ஆகிவிட்டன பாவம் அந்த அ2 அ1,௮3 , நிரவ்,லலித் மற்றும் மல்லையா போன்றவர்கள் தப்பித்து விட்டார்கள்,யோகம் தான் காரணம்


தாமரை மலர்கிறது
ஜூலை 24, 2025 19:19

அணில் அம்பானி எந்த தவறும் செய்திருக்க வாய்ப்பில்லை. நல்லவர். நாணயமானவர்.


Rathna
ஜூலை 24, 2025 19:14

வங்கி அதிகாரிகள் மற்றும் முதலாளிகள் 1 - 3% கமிஷன் பெற்று கொண்டு கடன் தருகிறார்கள். இதுதான் ICICI - விடியோகான் வங்கி கேஸிலும் நடந்தது. ஆனால் இப்போது வாங்கி அதிகாரிகளை அரசியல் தலைவர்கள் வட்டம், மாவட்டம் மற்றும் அவை உறுப்பினர்கள் மிரட்டும் நிலை இல்லை. இந்த மிரட்டலால் 2014 முன்னால் பல வங்கி அதிகாரிகள் ராஜினாமா செய்தது உண்மை.


Balasubramanian
ஜூலை 24, 2025 16:54

ஏதும் கிட்டாது! அவர் ஏற்கனவே குடும்ப நகைகளை விற்று வக்கீல்களுக்கு கொடுத்து விட்டதாக புலம்பி உள்ளார்! அண்ணன் பேசா மன்னன், ஆகவே தாக்கு பிடித்தார்! இவர் ஜகதலப் பிரதாபன் போல பல தொழிலில் கை வைத்து, ஒன்றுக்கு ஒன்று பணத்தை மாற்றி, ஒன்றும் தேறவில்லை, ஆகவே மாட்டிக் கொண்டார்! ஒரு மரத்தில் குடியிருந்த பறவை இரண்டு, ஒரு அம்பானி தந்தது! ஒன்று ஆர்பாட்டம் செய்தது ஒன்று கண் வளர்ந்தது (தூங்கி வழிந்தது) கண் வளர்ந்தது, வளர்ந்து வென்றது! பார்க்க தீறுபாய் - அப்பா சொன்ன கதை! அமெரிக்காவில் காரில் சென்ற போது, ஒரிடத்தில் பெட்ரோல் நிரப்ப நிறுத்த) அண்ணன் அமெரிக்கையாக அமர்ந்து இருக்க, தம்பி கோக் பானம் வேண்டும் என அடம் பிடிததானாம், அப்பா மறுக்க, அம்மாவிடம் ரகசியமாக பத்து டாலர் பெற்றுக் கொண்டு, கோக் வாங்க காரில் இருந்து இறங்கி விட்டானாம்! காரில் பெட்ரோல் நிரம்பியதும், காரை எடுக்க அப்பா யத்தனிக்க, அம்மா பதறி உண்மையை கூற, அப்பா வாயுள்ள பிள்ளை பிழைக்கும், என்று கூறி காரை ஓட்டிச் சென்று விட்டாராம்! பிறகு அவன் எப்படியோ தானே வீடு வந்து சேர்ந்தான் எனறார் இளையவன் காளை எதற்கும் துணிந்தவன் என்பதற்காக அவர் சொன்னது அந்நாளில்! இன்று இதுவே வேறு விதமாக மாறி விட்டது!


visu
ஜூலை 24, 2025 16:40

வங்கி கடன் வாங்கியவர் ஏமாற்றினால் கடன் வழங்கிய அதிகாரியை சிறைக்கு அனுப்பினால் எல்லாம் சரியாகும் ஒரு ஏழை ஒரு லட்சம் கடன் வாங்கினால் தங்க நகை அடமானம் பெற்றுத்தான் தராங்க நிறுவனங்கள் எப்படி 40000 கோடி என்ன செயுரங்க பார்க்காமல் தருவார்களா அவங்க கணக்குகளை ஆராய்ந்து வழங்குகிறார்கள் அப்புறம் ஏன் இப்படி


G Mahalingam
ஜூலை 24, 2025 16:28

டில்லி மின்சார வாரியத்தின் 70 சதவீதம் அனில் அம்பானி வசம். ஷீலா தீட்சித் முதல்வராக காங்கிரஸ் ஆட்சியில் கொடுத்தது.


தமிழ் மைந்தன்
ஜூலை 24, 2025 15:40

ஆம். அவர் தமிழக ஊழல் கம்பெனியில் சேர்ந்தால் புனிதராகி அமைச்சராகி தமிழராகி தலைவராகி விடுவார்.


ஆரூர் ரங்
ஜூலை 24, 2025 14:50

மும்பை மெட்ரோ ஒப்பந்தத்தை இவருக்கு அளித்து மகிழ்ந்தது சோனியா அரசு.


முருகன்
ஜூலை 24, 2025 14:41

அண்ணனுக்கு இருக்கும் சாமர்த்தியம் அரசியல் தொடர்பு தம்பிக்கு இல்லை அதனால் இந்த நிலை


SUBBU,MADURAI
ஜூலை 24, 2025 14:35

EDs search operations underway at premises linked to Anil Ambani in Delhi and Mumbai for possible money laundering. This shows that no matter how big you are, Modi Govt has zero tolerance policy against corruption and financial crimes.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை