உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி: தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி: தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் நடக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் 26ம் தேதிக்குள் பதிலளிக்க தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி, நவ., 4 முதல் ஒரு மாதம் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கு, தி.மு.க., காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதிமுக மற்றும் பாஜ உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.இது தொடர்பாக சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அரசியல் கட்சிகள் கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்வது என முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 3ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் திமுகவின் அமைப்புச் செயலாளர் வழக்கு தொடர்ந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மேற்கு வங்க மாநில காங்கிரஸ் மற்றும் திரிணமுல் காங்கிரஸ் கட்சிகள் சார்பிலும் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் ஜாய்மால்யா பக்ஷி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதாடுகையில், '' தமிழகத்தில் மழைக்காலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை மேற்கொள்ள இயலாது. வருவாய் அதிகாரிகள் பருவமழை , வெள்ளம் மற்றும் மீட்புப்பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள். மழை, பண்டிகைகாலம் என்பதால் மக்கள் பங்கேற்க இயலாது. பல கிராமங்களில் இணையதள சேவை இல்லாத சூழலில் இந்தப் பணியில் மக்கள் பங்கேற்பதில் சிரமம் ஏற்படும்'', என்றார்.திமுக தரப்பில்,'' அவசர கதியில் இந்தப் பணியை தேர்தல் கமிஷன் மேற்கொள்கிறது. பீஹாரில் நடத்தியதைல் போல் தமிழகத்தில் எப்படி நடத்த முடியும். இரண்டிலும் வெவ்வேறு சூழல். அவசர கதியாக செய்யப்படும் இந்தப் பணியால் ஒவ்வொருவரின் ஜனநாயக உரிமை பறிக்கப்படுகிறது,'' என வாதிடப்பட்டது.இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம், ' இந்த விவகாரம் குறித்து தேர்தல் கமிஷன் பதிலளிக்க வேண்டும். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடர்பாக ஐகோர்ட்கள் விசாரணை நடத்தக்கூடாது. அனைத்து மனுக்களின் நகல்களை தேர்தல் கமிஷன் வழக்கறிஞருக்கு வழங்க வேண்டும்' என உத்தரவிட்டு விசாரணையை நவ.,26க்கு ஒத்திவைத்தனர்.இந்த வழக்கு விசாரணையின் போது, அதிமுக சார்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என அக்கட்சி சார்பில் கோரிக்கைவைக்கப்பட்டது. இதனையடுத்து நீதிமன்றம், '' நீங்கள் விரும்பும் மாடலில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடக்க வேண்டுமா'' எனக்கேள்வி எழுப்பியதுடன், தனியாக மனு தாக்கல் செய்தால் மட்டுமே விசாரணை நடத்துவோம் என தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Madras Madra
நவ 12, 2025 11:33

EPS போன தேர்தலில் கொஞ்சம் ஆணவம் இன்றி யோசித்திருந்தால் திமுக இந்நேரம் அழிஞ்சிருக்கும்


பேசும் தமிழன்
நவ 12, 2025 07:56

அவர்களின் பிழைப்பே கள்ள ஓட்டில் தான் ஓடிக் கொண்டு இருக்கிறது. அதையும் நீக்க சொன்னால் எப்படி அவர்கள் வெற்றி பெற முடியும்.. அதனால் முடிந்தவரை எதிர்ப்பு தெரிவிப்பார்கள்.


ManiK
நவ 12, 2025 05:21

திமுக அடிச்ச காசும், தமிழக அரசு வாங்கின கடனும் கபில் சிபில்க்கு, லொல்சன்க்கு கொடுக்கவே சரியாகிடும் போல.


மணிமுருகள்
நவ 12, 2025 00:14

தேர்தல் கமிஷன் மாநிலத்தில் சீர்திருத்தப் பணி நேற்று முடிவு எடுத்து இ்னறு நடத்தாது குறைந்தது 3 மாதத்திற்கு முன்பே அயர்லாந்து வாரிசு திராவிடமாடல் ஓட்டை வொளம்பர மோக ஊழல் கட்சி திமுக கூட்டணிக்கு அறிக்கை வந்திருக்கும் உடனே நடவடிக்கை எடுக்காமல் பீஹார் உண்மை தன்மை யை பார்த்து பயந்து இப்போது அவசரக்கதியில்வழக்கு போராட்டம் ஒப்பாரி எல்லாம் கபில்சிபில் எம்பி ஆஸ்தான வழக்கறிஞரா ஊழல்கட்சிக்கு எவடவளவு கறுப்பு பணம் வெள்ளை ஆகி உள்ளது


R Dhasarathan
நவ 11, 2025 20:13

நான் இதுவரை நாடோடி போல் பிழைக்க சென்று கொண்டிருந்தேன், ஆகையால் போகும் இடத்தில் எல்லாம் இரண்டு ஓட்டு அட்டைகள் வைத்து இருந்தேன், இப்போது ஊரோடு வந்து விட்டேன். பழைய ஓட்டு அட்டைகளை நீக்கினால் என்ன தவறு.... இதை செய்து தானே ஆக வேண்டும்...


தாமரை மலர்கிறது
நவ 11, 2025 19:54

தமிழகத்தில் ரெண்டு கோடி போலி வாக்காளர்களை நீக்க வேண்டிய கடமையும், ரெண்டு கோடி வடஇந்தியர்களுக்கு ஓட்டுரிமை கொடுக்க வேண்டிய கடமையும் தேர்தல் கமிஷனுக்கு உள்ளது என்பதை சுப்ரிம் கோர்ட் நன்கு அறியும். இது வெறும் நோட்டீஸ் தான். பிறகு விவரம் சொன்னதும் நல்ல தீர்ப்பு வரும்.


SVR
நவ 11, 2025 19:50

பிஹாரில் எஸ் ஐ ஆர்க்கு பின் தேர்தல் நடந்து முடிந்து விட்டது இன்று.


Barakat Ali
நவ 11, 2025 19:30

அரசியல் சட்டம் தேர்தல் கமிஷனுக்கு விதித்த கடமையை, உரிமையை நான்காம் தர அரசியல்வாதி போல சுப்ரீம் கோர்ட் கேள்வி கேட்பதா ????


Kasimani Baskaran
நவ 11, 2025 19:29

கோடிகளை அள்ளிவிட்டு கபில் சிபலை வாடகைக்கு எடுத்து வழக்கு நடத்துமளவுக்கு தீம்க்கா மும்மரமாக இருக்கிறது என்றால் ஏதோ திராவிட லீலை புரிய திட்டமிட்டு இருக்கிறார்கள். இவர்களை ஆட்சியில் வைத்து தேர்தல் நடத்துவது சரியல்ல. ஆறுமாதம் கவர்னர் ஆட்சி. அதன் பின் தேர்தல் என்றால் சரியாக தேர்தல் நடக்கும்..


சத்யநாராயணன்
நவ 11, 2025 19:02

தங்களுடைய சுயமரியாதை மற்றும் சுய கவுரவத்தை சுப்ரீம் கோர்ட் என்றோ இழந்து விட்டது இந்த நீதிபதிகளுக்கு எத்தனாம் தேதிக்குள் பதில் கூற வேண்டும் என்று மற்றவர்களை கட்டாயப்படுத்தும் எந்த அருகதையும் இல்லை இனி இவர்களது உத்தரவுகளை பொதுமக்கள் யாரும் கண்டு கொள்ளக்கூட மாட்டார்கள்


சமீபத்திய செய்தி