உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முன்ஜாமினுக்கு முதலில் நாட வேண்டியது உயர் நீதிமன்றமா, செஷன்ஸ் நீதிமன்றமா? சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

முன்ஜாமினுக்கு முதலில் நாட வேண்டியது உயர் நீதிமன்றமா, செஷன்ஸ் நீதிமன்றமா? சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

புதுடில்லி :'முன்ஜாமின் பெற நேரடியாக உயர் நீதிமன்றத்தை நாடலாமா அல்லது முதலில் செஷன்ஸ் நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்பதை கட்டாயமாக்குவதா? என்பது குறித்து ஆராய்ந்து முடிவு செய்யப்படும்' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தள்ளுபடி கேரள உயர் நீதி மன்றத்தில் முன்ஜாமின் கோரி இரண்டு பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். செஷன்ஸ் நீதிமன்றத்தை முதலில் அணுகாமல், நேரடியாக உயர் நீதிமன்றத்தை நாடியதால், இருவரின் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதை எதிர்த்து, இரண்டு பேரும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த மனு, நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள், 'கேரளாவில், முன்ஜாமின் கோரும் மனுக்கள் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாமல் நேரடியாக உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்படுகின்றன. 'அவற்றை உயர் நீதிமன்றமும் ஏற்றுக் கொள்வது வழக்கமான நடைமுறையாக தெரிகிறது. ஏன் அப்படி நடக்கிறது?' என, கேள்வி எழுப்பினர். 'பி.என்.எஸ்.எஸ்., எனப்படும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டத்தின் 482வது பிரிவு கைது நடவடிக்கைக்கு ஆளாகும் நபருக்கு, முன்ஜாமின் வழங்க வகை செய்கிறது' என, மனுதாரார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. முன்ஜாமின் இதை குறித்துக்கொண்ட நீதிபதிகள், 'கேரளாவை தவிர, பிற மாநிலங்களில் இப்படி நடப்பதில்லை. கேரள உயர் நீதிமன்றத்தில் மட்டுமே, முன்ஜாமின் கோரும் மனுக்கள் நேரடியாக ஏற்கப்படுவது வழக்கமான நடைமுறையாக இருக்கிறது' என்றனர். மேலும், 'முன்ஜாமின் கோரி, குற்றஞ்சாட்டப்பட்ட நபர் நேரடியாக உயர் நீதிமன்றத்தை அணுகலாமா, அந்த வாய்ப்பு தொடர்ந்து நடைமுறையில் இருக்கலாமா அல்லது முதலில் செஷன்ஸ் நீதிமன்றத்தை அணுகியே நிவாரணம் பெற முடியும் என்பதை கட்டாயமாக்கலாமா? என்பது குறித்து ஆராய்ந்து முடிவு செய்ய விரும்புகிறோம். 'எனவே, இந்த விவகாரம் தொடர்பாக கேரள உயர் நீதிமன்றத்திற்கு நோட்டீஸ் பிறப்பிக்க உத்தரவிடுகிறோம்' என தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து இவ்வழக்கின் அடுத்த விசாரணையை, வரும் அக்., 14ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Tamilan
செப் 13, 2025 23:37

முதலில் ஆடவேண்டியது PMO அல்லது கமலாலயம்


அப்பாவி
செப் 09, 2025 17:54

யார்கிட்டே வேணும்னாலும் போங்க. அவிங்க ஜாமின் குடுத்தா நாங்க ரத்து செய்வோம். அவிங்க குடுக்கலேன்னா நாங்க குடுப்போம். அதுதான் மரபு. கீழே இருக்குறவங்களுக்கு ஒண்ணும் தெரியாது


Barakat Ali
செப் 09, 2025 11:04

சுதந்திரம் கிடைச்சு நூறு வருஷமே ஆனாலும் இதுக்கெல்லாம் தீர்வு கிடைக்குமா ????


Subburamu K
செப் 09, 2025 07:06

Our judiciary is more criminals friendly Innocents are always victims in our nation Political criminals number is going on increasing, because of judiciary


SUBBU,MADURAI
செப் 09, 2025 04:30

செஷன்ஸ் நீதிமன்றமோ அல்லது உயர்நீதிமன்றமோ குற்றவாளிகளாக நிரூபணம் பண்ணி அவர்களுக்கு சிறை தண்டனையாக தீர்ப்பு அளித்த பின் அந்த குற்றவாளிகளுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்குவது ஏன்?


Kasimani Baskaran
செப் 09, 2025 04:05

வழக்குகள் நீண்டகாலமாக நிலுவையில் இருந்தால் வக்கீல்களுக்கு வேலை உத்திரவாதம் உண்டு என்ற அடிப்படையில் நீதிமன்றம் எந்த வழக்கையும் முடித்து வைக்காது. அதாவது நோயாளியை விட மருத்துவரின் வேலை உறுதி அதிக முக்கியத்துவம் வாய்ந்தது...


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 09, 2025 08:06

இது தான் உண்மை. அனைத்து நீதிபதிகளும் வக்கீல் தொழில் செய்த பின்னர் தான் நீதிபதிகள் ஆகின்றனர். தகுதியின் அடிப்படையில் நீதிபதி ஆவது மிகக் குறைவு. பணம் அல்லது வாரிசு சிபாரிசு அல்லது சிபாரிசின் அடிப்படையில் அல்லது இட ஒதுக்கீடுகள் அடிப்படையில் நீதிபதிகள் ஆவது தான் அதிகம். ஆகவே தங்களது ஜூனியர் வக்கீல்கள் வருமானம் பாதிக்காவன்னம் வழக்குகளை இழுத்தடித்து தீர்ப்பு வழங்கி அந்த தீர்ப்பிலும் புள்ளி வைத்து முடிக்காமல் கமா போட்டு அப்பீல் செல்லும் படி செய்து வக்கீல்கள் வருமானம் பாதிக்காமல் நன்கு பார்த்து கொள்கிறார்கள் இன்றைய நீதிபதிகள் கீழ் நீதிமன்றத்தில் இருந்து உச்சநீதிமன்றம் வரை. உதாரணம் செக் ரிட்டர்ன் வழக்குகள். வங்கி அதிகாரி செக் ரிட்டர்ன் எழுத்து பூர்வமாக கொடுத்த பின்னரும் வருடக்கணக்கில் வழக்கை இழுத்தடித்து பணம் கிடைக்காமல் பாதிக்கப்பட்டவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் நீதிபதிகள் மற்றும் வக்கீல்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை