உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அவசர நிலை குறித்து பேசியதை சபாநாயகர் தவிர்த்திருக்கலாம்: ராகுல் கருத்து

அவசர நிலை குறித்து பேசியதை சபாநாயகர் தவிர்த்திருக்கலாம்: ராகுல் கருத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து பேசினார். அப்போது, நேற்று அவசர நிலை குறித்து பேசியதற்கு அதிருப்தி தெரிவித்த ராகுல், அதனை தவிர்த்திருக்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.சபாநாயகராக பதவியேற்ற பிறகு ஓம் பிர்லா பேசுகையில், முன்னாள் பிரதமர் இந்திரா அவசர நிலையை அமல்படுத்தியது, அரசியல் சாசனம் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் எனக்கூறினார். இதற்கு லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.இந்நிலையில், லோக்சபா எதிர்க்கட்சி தலைவராக ராகுல் செயல்படுவார் என நேற்று ஓம்பிர்லா அறிவித்தார். இதனையடுத்து ராகுல் உள்ளிட்டோர் சபாநாயகரை சந்தித்து பேசினார்.இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் நிருபர்களிடம் கூறியதாவது: இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. லோக்சபா எதிர்க்கட்சி தலைவராக ராகுலை சபாநாயகர் அறிவித்தார். இதனால், அவர், ‛ இண்டியா ' கூட்டணி கட்சி தலைவர்களுடன் சென்று சந்தித்தார். பார்லிமென்ட் செயல்பாடு குறித்து பல விஷயங்களை பேசினோம். அவையில் சபாநாயகர் அவசர நிலை குறித்து பேசியது குறித்தும் விவாதித்தோம். இதனை குறிப்பிட்ட ராகுல், அவசர நிலை குறித்து பேசியதை சபாநாயகர் தவிர்த்து இருக்க வேண்டும். இது அரசியல் ரீதியிலான கருத்து என்பதால் நிச்சயம் தவிர்த்து இருக்க வேண்டும் என்றார். இவ்வாறு வேணுகோபால கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Sivasankaran Kannan
ஜூன் 28, 2024 14:26

காங்கிரெஸ் கரப்பான் பூச்சிகளுக்கு உண்மை மற்றும் நேர்மை என்பது என்றும் பிடிக்காத விஷயம். ஒரு பைசா உபயோகம் இல்லாத இந்த கட்சிக்கு தமிழ் நாட்டில் 10 இடம் கொடுத்த திராவிட மாடல்.


கண்ணன்
ஜூன் 28, 2024 06:05

உண்மை சுடுகிறதா? இதெல்லாம் புரிந்து கொள்ளும் மன நிலை உண்டா உமக்கு?


ராமகிருஷ்ணன்
ஜூன் 28, 2024 03:58

இண்டி கூட்டணி ஜெய்க்க முடியாத கோபத்தில் தேவையற்ற பிரச்சனைகளை எழுப்பினால் காங்கிரஸ் ஆட்சியில் நடந்த அட்டூழியங்களை, அதிகார துஷ்ப்ரயோகங்கள் ஒவ்வொன்ராக பி ஜே பி கிளப்பும்.


ஆரூர் ரங்
ஜூன் 27, 2024 21:18

அவையில் அரசியல் பேசும் உரிமை தமிழக சபாநாயகருக்கு மட்டுமே உண்டாம். இப்படிக்கு உ.பி ஸ்.


sridhar
ஜூன் 27, 2024 20:40

அவசர நிலையை உங்க பாட்டி தவிர்த்திருக்கலாம்


பேசும் தமிழன்
ஜூன் 27, 2024 20:10

நீங்கள் இல்லாத சீன் போடலாம்.... ஆனால் அவர் நடந்த உண்மையை பேச கூடாது... அப்படி தானே... ஏன் மக்களுக்கு உண்மை தெரிந்து விடும் அதனால் பயமா ???


Sathyanarayanan Sathyasekaren
ஜூன் 27, 2024 19:07

பிஜேபி அரசியல் சாசனத்தை திருத்த போகிறது என்ற பொய்யை பேசுவதற்கு முன் யோசித்திருக்கவேண்டும், பல முறை அரசியல் சாசனத்தை நிறுத்தியது கான் காங்கிரஸ் தான் என்பதை மக்களிடம் மறைத்து பொய் பேசியதற்கு வெட்கப்படவேண்டும்.


GMM
ஜூன் 27, 2024 17:55

அவசர நிலை குறித்து பேசியதற்கு பதில் கண்டித்து இருக்கலாம். சிறிய நன்மைகள். பெரிய கொடுமைகள். காங்கிரஸ் கால பொற்கோவில் நுழைவு, இலங்கையில் விடுதலை புலிகள் மீது நடவடிக்கை, கிழக்கு பாகிஸ்தான் பிரிவினை, அவசர நிலை அனைத்தும் திட்டமிடாத அரசியல் நடவடிக்கை. நாட்டிற்கு பெரும் இழப்பு. ஜெயாவிற்கு தோழி சசி போல், இந்திராவிற்கு தோழி அமைந்து இருந்தால், ஜனநாயகம் விடுதலை பெற்று இருக்கும்.


Swaminathan L
ஜூன் 27, 2024 17:33

பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி, இண்டி கூட்டணி ஆட்சி அமைக்க ஒரு வாய்ப்பும் இல்லை என்று உறுதியான பின்னர், ராகுல் ஆரம்பித்து வைத்த பேச்சு, இண்டி கூட்டணி, காங்கிரஸ் இந்திய கான்ஸ்டிடியூஷனைக் காக்கும், பாஜகவால் கான்ஸ்டிடியூஷனுக்கு ஆபத்து என்று. இதற்கான எதிர்வினை தான், பாராளுமன்றத்தில் சபாநாயகர், துணை ஜனாதிபதி மற்றும் ஜனாதிபதி ஆகியோர் இந்திரா காந்தி கொண்டு வந்த அவசரநிலை மற்றும் அதன் தாக்கம் குறித்து உரையாற்றியது. மலிவு அரசியல், தொடர்ச்சியான மலிவு விளைவுகளை ஏற்படுத்தும்.


Lion Drsekar
ஜூன் 27, 2024 17:27

சுதந்திரம் பெற்றதில் இருந்து இந்த ராஜகுடும்பத்தின் முன்பு யாரும் நிமிர்ந்து நின்றதே கிடையாது. தானாக பேசியதும் கிடையாது . என்னதான் திறமையும் , தகுதியும் இருந்தாலும் கேட்க்கும் பாட்டுக்கு ஆடணும் , சொல்லும் தாளத்துக்கு நடக்கணும் அல்லது ஆடணும் . இதை சீரும் சிறப்புமாக எல்லோரும் செய்ததால் நாடு தொண்டர்கள் வளர்ச்சி அடையும். வாழ்க நம் முன்னோர்கள் அவர்களின் ரோல் மொடல் என்றென்றும் நிரந்தரமாக பதிந்த மாமனிதர் சிறந்த கல்வியாளர் , அறிஞர், உண்மையிலேயே மெத்த படித்தவர் , மிக மிக நேர்மையானவர் விதி .RESERVE .BANK இல் இருந்து உயர்ந்த இடத்துக்கு கொண்டு சென்று , எல்லாம் இருந்தும் எதுவுமே இல்லாமல் கடவுள்போல் எல்லா சக்திகளும் இருந்தும் கல்லாகவே வாழ்தல் , வாழ்ந்தார் . தற்போது ஓய்வில் இருக்கிறார் . வந்தே மாதரம்


மேலும் செய்திகள்