உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஈசல் போல உயிரிழக்கும் அவதுாறுகள் : தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

ஈசல் போல உயிரிழக்கும் அவதுாறுகள் : தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தி.மு.க., தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம்:கருணாநிதி வழியில், தி.மு.க., அரசு மக்கள் நலன் காக்கும் ஆட்சியை வழங்கி வருகிறது. அந்த நல்லாட்சிக்கு சான்றாக, லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் மகத்தான வெற்றியை மக்கள் தந்துள்ளனர்.பார்லிமென்டில் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.,க்களின் குரல் ஓங்கி ஒலிக்கிறது. மத்திய ஆட்சியாளர்களின் வஞ்சகத்தை அம்பலப்படுத்தி, தமிழக உரிமைகளை நிலைநாட்டும் குரல்களாக அவை ஒலிக்கின்றன.கருணாநிதியிடம் கற்றுக்கொண்ட அரசியல், நிர்வாக திறனால், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை வரிசையாக நிறைவேற்றி, நல்லாட்சியை வழங்கி வருகிறோம். பொதுமக்களின் பேராதரவை பெற்றுள்ள அரசுக்கு எதிராக, அரசியல் எதிரிகள் திட்டமிட்டு பரப்ப முயற்சிக்கும் அவதுாறுகள், ஈசல் பூச்சிகளை போல உடனடியாக உயிரிழந்து விடுகின்றன.கருணாநிதியின் நினைவை போற்றும் வகையில், வரும் 7ம்தேதி அவரது 6வது நினைவு நாளில், ஓமந்துாரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள அவரது சிலை அருகில் இருந்து, கடற்கரையில் உள்ள நினைவிடம் வரை, என் தலைமையில் அமைதி பேரணி நடக்கவுள்ளது.இந்த அமைதி பேரணியில் அணி திரள்வோம். கருணாநிதி நம் உள்ளத்திற்கு தரும் உத்வேகத்துடன், நம் லட்சிய பணத்தை தொடர்வோம்; மக்கள் பணியாற்றி தொடர் வெற்றிகளை குவிப்போம்.இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 48 )

M Ramachandran
ஆக 16, 2024 19:29

புற்றீசல் போல் கள்ள சாராயாதால் உயிர் இழந்தார்களெ அப்போ எங்கே அப்போ போச்சி உஙகள் சுய குடும்ப தம்பட்ட புராணம். தமிழ்நாடு நாசமாகி கொண்டிருப்பதற்கு காரண கர்த்தாக்கள் இந்த தீ மு க்கா புள்ளிகள். சாதிய மறைத்து நாடகா மாடுகிறீர்களெ இது தகுமா? கொள்ளை ளையாடித்த பணத்தை வைத்து அதைய்ய வீசி மக்களை பொருக்கும் படி செய்து வெற்றி பெற்றதய் வீரமாக நினைக்கிறீர்களா? கருனாநிதிய கூறிய வார்தைய்யகள் தற்போது வேண்டு மாணால் மக்கள் மறந்திருக்க லாம். தோற்றவுடன் சோற்றால் அடித்த பிந்தங்கிகள் என்று யேசினார். அவர் பெருந்தனமாய்ய்ய ???? தர் போதையா தேர்தலில் தோற்ற எந்த கட்சி தலைவரும் மோசமாகா மக்களை திட்டியதில்லை.


tmranganathan
ஆக 07, 2024 07:52

சுய ilambaram expiry aana மறுந்துபோலதான். ஒன்றுக்கும் லாயக்கில்லாத ஆட்சிதான் முதல்வர் காய் கால் விளங்காத நிலையில் கம்பீர பேச்சு நாடக பாணியில் இருக்கு.போதும் நிறுத்திக்கோ


sethu
ஆக 06, 2024 12:32

நீ எப்போது மக்களுக்கு உண்மையாக நல்லது செய்வாய் உனக்கெல்லாம் முதல்வர் பதவி ஒரு கேட்டா. எப்போ பார்த்தாலும் கருணாநிதி கருணாநிதி என திருட்டு ரயில் எறிவந்தவருக்கு பின்னாடியே அழைக்கிறீயே மக்கள் இதுக்காகவா முதல்வர் ஆக்கினார்கள் . ஹசினாபேகம் ராஜபட்சே போல மக்கள் புரட்சி செய்து உனக்கும் ஆகணுமா .


PREM KUMAR K.R
ஆக 05, 2024 21:04

மக்கள் நல்வாழ்வு திட்டம் என போலி பெயரிட்டு மக்கள் வரி பணத்தை விரையம் செய்த இலவச திட்டங்கள் அனைத்தும் படுதோல்வி அடைந்துள்ள நிலையில் விரக்தி அடைந்த ஸ்டாலின் பெயரில் வழக்கம் போல் யாருக்குமே புரியாத மற்றுமொறு மடல் கழக கண்மணிகளுக்காக வெளியாகி இருக்கிறது .ஆனால் வழக்கம்போல் மத்திய பா.ஜ.க.அரசுக்கு அர்ச்சனையும் கருணாநிதியை பற்றி தமிழக மக்கள் பலமுறை கேட்டு அறிந்தவற்றை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியை தவிர வேறு எதையும் இந்த மடலில் பார்க்க முடியவில்லை. நாடாளு மன்றத்தில் மத்திய மந்திரிகளின் அனுபவமிக்க பேச்சுக்களுக்கும் கேள்விகளுக்கும் பதிலளிக்க முடியாத நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலரை பார்க்க முடிந்ததே தவிர யாருமே தமிழகத்தில் நடைபெற்ற உணர்ச்சி பூர்வமான சம்பவங்களான அரசியல் கொலைகளை பற்றியோ அல்லது மெத்தனால் கலந்த சாராயத்தை குடித்து உயிர் நீத்த 62 உயிர்களை பற்றியோ பேசுபவர்களை காண முடியவில்லை.


அப்பாவி
ஆக 05, 2024 18:49

ஈசல்.மாதிரி புட்டுக்கும் தடுப்பணைகள் விடியலின் சாதனை.


ஆரூர் ரங்
ஆக 05, 2024 15:22

அவதூறு ஒண்ணு:அடைந்தால் திராவிட நாடு. இல்லையேல் சுடுகாடு. அவதூறு இரண்டு:ரூபாய்க்கு மூணு படி... அவதூறு மூன்று:குடும்பத்துக்கு இரண்டு ஏக்கர் நிலம். நான்காவது அவதூறு. முதல் கையெழுத்தில் டாஸ்மாக் மூடல். ஐந்தாவது அவதூறு:இன்னொரு முதல் கையெழுத்தில் நீட் ஒ(கி)ழிப்பு. போய் தயிர் வடை சாப்பிடும்.


தமிழன்
ஆக 05, 2024 15:20

நல்லாட்சியை வழங்கி வருகிறோம்./// Mr. Chief Minister, you should be admired by others. and not to boast yourself.. .


தமிழன்
ஆக 05, 2024 15:16

நல்லாட்சியை வழங்கி வருகிறோம்.///அட ஆமா... அதான் ஒருத்தர் கூட கடன் வாங்க மாட்டேன் என்கிறார்கள்.போன் செய்து பணம் வேணுமா, கடன் வேணுமா என்று ஒரு நாளைக்கு பத்து அழைப்பு வருகிறது.


தமிழன்
ஆக 05, 2024 15:15

கடற்கரையில் உள்ள நினைவிடம்//இனி எந்த அரசியல் தலைவருக்கும் கடற்கரையில் நினைவிடம் கிடையாது என்று உறுதியாக சொல்ல முடியுமா? அமைதி இல்லாத தமிழகத்தில் அமைதி ஊர்வலம் நடக்குமா?


தமிழன்
ஆக 05, 2024 15:12

அரசுக்கு எதிராக, அரசியல் எதிரிகள் திட்டமிட்டு பரப்ப முயற்சிக்கும் அவதுாறுகள், ஈசல் பூச்சிகளை போல உடனடியாக உயிரிழந்து விடுகின்றன./// அட ஆமா.. அரசுக்கு எதிராக பேசினால் கைது குண்டர் சட்டம் என எதையாவது சொல்லி விட்டால், யார் வாயை திறப்பாங்க.. ஈசல் பூச்சிகளை ஏதாவது ஒரு வழக்கு போட்டு நசுக்கி விட்டால் அப்படி தான்..


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை